Mittwoch, August 27, 2003

பெண், குடும்பம், குழந்தைகள்

பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த
சில அவதானங்கள்


காலத்தோடொத்து இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எமது சூழலும் மாறுகிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக் கொள்கின்றன. மரம், செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப்படி விதிவிலக்கா இருக்க முடியும்?

பெண்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப்பட்டது. புராதன கம்யூனிஸ் சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுதுவ அமைப்பு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது வாழ்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது.

பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்ட போதும் குடும்பம் சார்ந்த உழைப்பையும் அவளே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகள் சமனாக பங்கிடப்படாமல் இரட்டைச் சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கருதப்பட்டது. மீண்டும் குடும்பத்திற்கான அவளது உழைப்பே வலியுறுத்தப்பட்டது. விரும்பவும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப் பளுவிலிருந்து பெண் விடுபட முனையும் போது அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது குடும்பத்திற்கு வெளியே உலகைக் காணவிளையும் போது மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள் பெண்ணைத் தள்ளுவதற்கான எதிர்ப்புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். ஏனெனில், மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வசதிகளை அனுபவிக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.

பெரும்பாலான மக்கள் மத்தியில் பெண் வேலைக்குப் போவதால்தான் குடும்ப உறவு சீரழிகிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதைவஸ்து பாவிக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர். அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. குடும்ப உறவு அழிகிறது. சமுதாயம் நலிந்து போகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் உண்மையைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால், இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை.

பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும். கால காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும்.

இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.

உதாரணமக தற்காலக் குழந்தைகள் பால் குடித்து வளர்வதில்லை. தாய்மார் வேலைக்குப் போவதால் பால் கொடுப்பதில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே, பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத்திஜீவி" ஒருவர் பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் கூறியிருக்கின்றார்.

இதில் கூறப்பட்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்காக அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றால் அது ஒரு தனிப் பெண்ணின் பிரச்சினை அல்ல. சமுதாயத்தின் பிரச்சினை. இதற்கான தீர்வை பரந்த மனத்துடன் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். பால் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு காலம் கொடுப்பது சிறந்தது என்பது அறியப்பட்டு அந்நாட்களை தாய்மாருக்கு விடுமுறையாக வழங்க வேண்டும்.


நோர்வே, கனடா, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் பாலுட்டும் தாய்மார்களுக்கு, பாலுட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் அமுலில் உள்ளன. இப்பிரச்சினைக்கு மாற்றுத் திட்டங்களைப் பற்றி நாமும் யோசிப்பது அவசியம். பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கேலியாகவும் கிண்டலாகவும் குடும்பத்தைச் சீரழிக்கும் பாவிகளாகவும் பெண் சித்திரிக்கப்படுவது ஆணாதிக்கச் சிந்தனை முறையின் மேலாட்சியைக் காட்டுகிறது.

இன்றைய காலம் குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப அலகே பெண்களின் அடிமைத்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் காரணம் என்று தீவிரப் பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.

சமுதாய உற்பத்தி முறைமை அதன் உறவுகள், கலாசார விழுமியங்கள். என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக்கு காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூக முறைமை ஜம்பது அறுபதுகளில் இருந்ததைவிடவும் எவ்வளவோ மாறிவிட்டது. பெண்கள் சமுதாய வேலைகளில் பங்களிப்பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதானது மிகவும் தவறான கருத்தியல்பு ஆகும். குடும்பம் பற்றிய கோட்பாடுகள் முன்னைய சமூக வாழ்வு முறைக்கேற்ப இயல்பாக்கம் அடைந்தாக இருப்பதால் இன்றை வாழ்வு முறைக்கேற்ப அவை தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தகவமைத்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம் சீரழிந்ததாகப்படுகிறது. இவை சிதைவுகளல்ல. மாறாக அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப மாற்றுருப் பெரும் போக்கில் ஏற்படும் உடைவுகள் அல்ல, வளர்ச்சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைக்கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற்றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும்.

இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறு வழிகளில் உருவாகி வருகின்றன. குடும்பம் இன்றைய ஜனநாயக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத்தில் கணவன், மனைவி குழந்தைகளுக்கிடையிலான உறவினையும் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மாக்ஸியப் பெண்ணிலைவாதிகள் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாயகத்தை" சீனாவில் அறிமுகப்படுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற்றைப் பேணுவது பற்றிக் குறிப்பி;ட்டார். 'ஜனநாயக ப10ர்வமான" அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்

இன்னொரு சாரார் குடும்பம் என்னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம்மால் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்பும்போது எத்தகையா சம்பிரதாய பூர்வமான திருமண முறைகளுமற்ற புரிந்துணர்வு, சமத்துவம் என்ற அடிப்படையில் 'சேர்ந்து வாழல்" (Living to gether) என்ற முறைமையினை மாற்றதாக் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும் சமூகத்தில் பெண்களின் சம உரிமை, சம அந்தஸ்து என்ற விடயங்கள் அக்கறை இன்றி பெண்ணிலைவாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும்பம் பற்றிய கேள்விகள் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தடுப்பது என்பது சூரியனை கைகளால் பொத்த நினைப்பது போலத்தான்!. எனவே இவ்வாறான மாற்று அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப்பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சமுதாயம் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும், வாழ்வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும்.


நன்றி தினக்குரல்.

மனைவியிடம் ஆண்கள் மூர்க்கத்தனமாக..

மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர்.
எந்தப் பெண்ணையும் சீராகச் சிந்திக்க விடுவதில், நம் ஆண்களுக்கென்னவோ, அவ்வளவாக பிடித்தமே இல்லை. பெண்ணை அடக்கி ஆளவே பழகிய விதம், ஆண்களை ஆட்டிப் படைக்கிறது. பெண்கள் படும் அவதியும், வேதனையும் அவர்களை விவகாரத்து தீக்குளிப்பு, தற்கொலை, கருக்கலைப்பு, வேறு மனைநாடுதல் என்ற அசாதராண செயல்கள் குறித்து யோசிக்கத் தூண்டுகிறது. செயற்பட வைக்கிறது. கொடுமைகளையும், ஆணாதிக்கத்தையும் அனுபவிக்கும் பெண்களில் இனப்பாகுபாடு, பணப்பாகுபாடு கிடையவே கிடையாது. இந்த வேதனை, அடக்குமுறையைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கே உரிய பொதுவான சொத்து.

டில்லியில் தொழிலதிபாராக இருக்கும் தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுக்கிறார். மும்பையில் முன்னணி நட்சத்திர நடிகை ஒருவர், தான் கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் எட்டி உதைத்தார் என்று கூறி விவகாரத்து கோருகிறார். கொல்கத்தாவில் தன்னுடன் சேர்ந்து தண்ணி அடிக்கவில்லை என்று கணவர் அடிப்பதாக மனைவி விவகாரத்து கோருகிறார். சென்னையில் குழந்தை இல்லையென்ற ஒரு காரணத்திற்காக அதிகார வர்க்கத்தில் இருக்கும் கணவனிடம் நீண்ட நாட்கள் மனதளவிலும், உடலளவிலும் வேதனைப்பட்ட மனைவி விவகாரத்து கோருகிறார்.

இப்படி நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஜாதி, மத பேதம் இல்லாமல் பண்பாட்டையும், அன்பையும் கடந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்கையில் இவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.

சர்வதேச தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் நெட்வேர்க் உடன் இணைந்து சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஜ.சி.ஆர்,டபிள்ய10) 2000 ஆவது ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு நாட்டின் ஏழு நகரங்களில் பத்தாயிரம் பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. நாட்டில் 45 சதவீதப் பெண்கள் கணவன்மார்களால் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, அறையப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறன்றனர். 75 சதவீதப் பெண்கள் கணவர்மார்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. கடந்த 2002 இல் நாட்டின் நான்கு நகரங்களில் ஜ.சி.ஆர். டபிள்ய10 ஆய்வு மேற்கொண்டது.

இதில் ஆண்கள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக இருப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது.ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள் என்கிறார் ஜ.சி.ஆர்.டபிள்ய10 உறுப்பினர் ஒருவர்.
ஆண்களை எப்போதுமே - சுபீரியர் செக்ஸ் - என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது.

எப்போது மனைவியை கணவன் அடிக்கலாம்? என்ற வழிகாட்டுதல்களுடன் சிறு குறிப்புப் புத்தகங்கள் டில்லி போன்ற நகரங்களில் கிடைக்கின்றன. இப்புத்தகத்தின் விற்பனை எந்தளவிற்கு இப்புத்தகம் படிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
மனைவி ஒழுக்கம் இல்லாதவராக இருந்தால் அடிக்கலாம் என்று இப்புத்தகம் வழிகாட்டுகிறது. என்கிறார் அனைத்துப் பெண்கள் அமைப்பின் இயங்குநர் ஜோத்சனா சாட்டர்ஜி.

கணவனுக்கு மனைவி மரியாதை கொடுக்காமல் இருப்பதுதான் அந்த ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது| என்பது ஜ.ஆர்.சி.டபிள்ய10. ஆய்வில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களில் ஆண்களிடம் எடுக்ப்பட்ட மதிப்பீட்டில், தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர்.அதிகார கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணின் தேவைகளில், ஏதாவது ஒன்று ப10ர்த்தியாகாமல் போனால், அது அந்த ஆணை மூர்க்கத்தனமாக்குகிறது. பெண்களை தங்களுக்கு இணையானவர்களாகக் கருதுவதில்லை. எந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மூர்க்கத்தனமாக மாறுகிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். என்கிறார் டில்லி கல்லூரி பேராசிரியை ஒருவர்.

ஆண்மைக்குரியவர் என்பதுடன் வயது, ஜாதி, சழூக அந்தஸ்து, முக்கியமாக கல்வி ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன.பாலியல் ரீதியாகவும் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறார். மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் ஆண்களில் படிக்காதவர்களை விட படித்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். பாலியல் கொடுமையில் ஒரு ஆண்டு கூட படிக்காத 32 சதவீத ஆண்களும், ஒன்று முதல் ஜந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். இது ஆறு முதல் பத்தாண்டுகள் படித்தவர்களில் 57 சதவீதமாக இருக்கிறது. இதே சதவீதம் மேல்நிலைப் படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களிடமும் காணப்படுகிறது.சமூக, பொருளாதார, அந்தஸ்து படைத்தவர்களிடத்தில் அதிக வருமானம் பெறும் ஆண்கள், மனைவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களிடம் 61 சதவீதம் காணப்படுகிறது. இது அந்தஸ்து குறைந்த ஆண் வர்க்கத்தில் 35 சதவீதமாக இருக்கிறது. உயர்ந்த படிப்பு, சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பாலான ஆண்கள் தான் மூர்க்கத்தனமாக மாறுகின்றனர். நன்கு படித்த, சமூக அந்தஸ்து உடைய ஆண்களிடம் மூர்க்கத்தனம் இருக்காது என்று வெளியுலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயைதான்.

தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து வெளியே வரபெண்கள்தான் முன்வரவேண்டும். திருமண வாழ்;க்கையில் இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாதது. |கணவனே கண் கண்ட தெய்வம்| என்று பெரும்பாலான பெண்கள் நினைத்துக் கொள்வது பொறுத்துக் கொள்ளமுடியாது. இன்றும் 55 சதவீதப் பெண்கள் இந்த கொடுமைகள் எல்லாhம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் இது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர்க்க பாடசாலைகளில் இருந்தே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படவேண்டும். இருவருக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுதான், ஒரு பட்ச சார்பான மூர்க்கத்தனத்தை ஒழிக்க முடியும்.

நன்றி தினக்குரல்.
(27 -08 -2003)

சூரியன்.கொம் இலிருந்து

Sonntag, August 24, 2003

சாமத்தியச் சடங்கு

மாதவிடாய் ஆரம்பமாவது பெண்குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்வாகும். வளர்ச்சியடையும் போது வேறு மாற்றங்களும் நடைபெறுகின்றன. ஆண்பிள்ளைகளினதைப் போலல்லாமல் பெண்பிள்ளைகளின் குரல் மெலிவடைந்து ஆழமாகும். உடலின் இரத்த அழுத்தம், செங்குருதி சிறுதுணிக்கைகளின் அளவு விருத்தியடைதல், உடலின் வெப்பநிலை குறைதல், மூச்சு விடுதல் மிகவும் இலேசாக நடைபெறுதல், எலும்புகள் வலுப்படுதல் போன்றன இக்காலத்தில் நடைபெறுவதாகும். ஆண் குழந்தை பருவ வயதிற்கு வரும்போது உடலின் உட்பகுதியிலும் அதேபோல் வெளித்தோற்றத்திலும் மாற்றங்கள் நடைபெறும். இக்காலத்தில் முகத்தில் மயிர் முளைப்பதுடன் குரல் ஆழமாவதையும் எம்மால் கண்டுகொள்ள முடியும். ஆண் குழந்தையின் உடலின் உட்பகுதியிலும் இக்காலத்தில் இன விருத்திக்கான செயற்பாட்டில் கலந்து கொள்வதற்காக விதைச் சுரப்பிகளில் விந்துக்கள் உற்பத்தியாவது ஆரம்பமாகும்.

பெண்குழந்தையின் வளர்ச்சி சம்பந்தமாக பிழையான ஐதீகங்களும் அவற்றால் உண்டான சடங்குகளும் இலங்கைச் சமூகத்தில் காணப்படுகின்றன. எனினும் ஆண் குழந்தையின் வளர்ச்சியுடன் தொடர்புபட்ட விசேட சடங்குகள் என எதுவும் கிடையாது. பெண் குழந்தையின் முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தியடைதல், பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல் எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நமது கிராமப்புறங்களை போன்றே நகர்ப்புறங்களிலும் நடைபெறும் சில சடங்குகள் பின்வருமாறு:

சிறுமியை வீட்டின் தனியான பகுதியிலோ, தனி அறையிலே தனிமைப்படுத்தி வைத்தல்.

அவளது துணைக்கு ஒரு பெண்ணையோ ஒரு சிறுமியையோ வைத்தல் (குளிக்கும் வரை சிறுமி இவ்வறையிலேயே இருக்க வேண்டும்)

சிறுமியின் அருகில் இரும்பு ஆயுதமொன்றை (கத்தி) வைத்தல்

சிறுமி மலசலகூடத்திற்கு செல்லும்போது அதையும் கொண்டு செல்லல் (இது பேய் பிசாசுகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்காகும்)

உடனடியாக பெற்றோர் சோதிடரை அணுகி சிறுமி வயதிற்கு வந்த நேரத்தைப் பார்த்து பலன் கேட்பர். (இதில் சிறுமியை குளிப்பாட்டுவதற்கு ஏற்ற சுபநாளும் நேரமும் பார்ப்பதும் நடைபெறும்.)

குளிப்பாட்டும் நாள்வரையும் தேங்காய்ப்பால் சேர்க்காது உணவு கொடுத்தல். மீன், இறைச்சி, எண்ணெய் சேர்ந்த பொரித்த உணவுகளை கொடுக்காமல் விடுவது.

சுபநேரத்தில் சலவைத் தொழில் செய்யும் பெண்ணைக்கொண்டு சிறுமியைக் குளிப்பாட்டுவது (சிறுமி பருவமையும் நேரத்தில் உடுத்தியிருந்த உடைகள் ஆபரணங்கள் போன்றவற்றைக் குளிப்பாட்டிய பெண்ணுக்கே கொடுப்பது)

குளிப்பாட்டும் நாளில் பாற்சோறு, பலகாரம், இனிப்புப்பண்டங்கள் போன்ற உணவுவகைகளைத் தயாரித்தல்.

குளிப்பாட்டிய பின் சிறுமிக்கு புத்தாடை அணிவிப்பது.

சில பிரதேசங்களைச் சார்ந்த சில குடும்பங்களில் சிறுமி 3ம் மாதம் வரையும் சலவை செய்யும் பெண் கொண்டுவரும் உடைகளையே உடுத்த வேண்டும்.

சிலர் சிறுமியை குளிப்பாட்டிய பின் சடங்கு செய்வர். இதை சாமத்திய சடங்கு என அழைப்பர்.

இந்த விருந்துக்கு தூர இடங்களிலிருந்தும் உறவினர் நண்பர்களை அழைப்பர். அவர்கள் சிறுமிக்கு பரிசுகளுடன் வருவர்.

கடந்த பல வருடங்களாக நான் மேற்கண்டவாறு சாமத்தியச் சடங்குகளை நடத்திய தாய்மார் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் (70வீதம் வரை) பருவடையும் போது என்ன நடக்கிறது என்பதை தமது மகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இதைப்பற்றிய தெளிவான அறிவு தாய்மாரிடமும் இல்லை. ஓரளவு கல்விகற்ற சில தாய்மார்களிடமே ஓரளவு தெளிவு இருந்தது. எனினும் தமது மகளுக்கு சரியான முறையில் விளக்கப்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் ஆற்றல் கிடையாது. பெரும்பாலான தாய்மார் தமது மகளுக்குக் கூறிய அறிவுரை "இதன் பிறகு ஆண்களிடம் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்" என்பதாகும்.

விரைவான உடல் வளர்ச்சியினால் 18-19 வயதுகள் வரும் வரையும் அவளினுள் உளவியல் ரீதியாகவும் மாற்றம் ஏற்படலாம் என்பது பற்றி எதுவித அக்கறையும் எடுத்துக் கொள்ளப்படாதது தெரிந்தது. பெண் குழந்தைகளின் முதல் மாதவிடாய் வெளியேற்றம் தொடர்பான சடங்குகள், சம்பிரதாயங்கள் இன்று பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பெண்ணுடலைப் பற்றி சரியான விஞ்ஞான பூர்மான அறிவின்மையே இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அடிப்படையாகும். பெண்ணின் உடல், உள வளர்ச்சியின் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியான இந்தப் பருவ வயதில் சிறுமிகள் மத்தியில் அவர்கள் உடலைப்பற்றிய பிழையான எண்ணக் கருத்துக்களை ஏற்படுத்துவதும் பெரியவர்கள் தம் எண்ணப்படி காலங்கடந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அவர்களை உட்படுத்துவதும், பிற்காலத்தில் பெண் என்ற முறையில் அவளது உடலைப்பற்றிய பிழையான கருத்துக்கள் மிக ஆழமாக அவளுள் வேரூன்ற காரணமாயுள்ளது. அவ்வாறே தமது சகோதரனைவிட அல்லது பெண் என்ற முறையில் ஆண்களைவிட தாம் கீழானவர்கள் எனும் உணர்வு சிறுமிகளிடம் ஏற்பட இந்த சடங்குகள் காரணமாகின்றன.

மாதவிடாய் ஏற்பட்ட மகளை பல நாட்களுக்கு வீட்டுக்குள் அடைத்த வைத்திருப்பது ஏன்? மகனின் குரல் மாற்றமடையும் போது முகத்தில் தாடி, மீசை முளைக்கும் போது மகனை பல நாட்களுக்கு விலக்கி வைத்திருப்பார்களா? மாதவிடாய் ”தீட்டு” எனும் கருத்தை மகளுக்கு மாத்திரம் கொடுப்பது ஏன்?

மாதவிடாய் என்பது சூலகங்களின் முதிராத முட்டையுடன் கருப்பைச்சுவரும் இரத்தமும் சேர்ந்து வெளியேறுவதாகும். பெண் உடலில் கருப்பை இல்லாவிட்டால் குழந்தை உற்பத்தி செய்யமுடியாது. பெண்களின் மாதவிடாய் அசுத்தம் என்று கூறும், அக்கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றும் பரிசுத்தவான்கள் இவ்வுலகத்திற்கு வந்தது தாய் வயிற்றின் மூலமாயில்லையா?

உணவுகளில் தடை விதிப்பதன் மூலம், முதலாவது மாதவிடாய் வெளியேற்றத்தை ஒரு நோயெனக் கருத சிறுமியைத் தூண்டுவதாகும். உண்மையிலேயே உடல் மிகத் துரிதமாக வளர்ச்சியடையும் இந்நாட்களில் வேறு நாட்களையும் விட போசாக்கான உணவுகளை சிறுமிக்குக் கொடுக்க வேண்டும். முதலாவது மாதவிடாய் ஏற்படும்போது சிறுமியை பேய் பூதங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வை ஒரு குழந்தையின் மனதில் ஏற்படுத்துவது அவளது எதிர்கால வாழ்விற்கு மிகவும் பாதகமாகும். பிற்காலத்தில் ஏற்படும் சில நோய்களுக்குக் காரணம் வயதிற்கு வந்த நாளில் ஏற்பட்ட தனிமையே (கெட்ட பார்வை) எனக் கருதும் பெண்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள். கடந்த பத்து வருடங்களில் இலங்கையின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஆய்வுநடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இவ்வாறு கருதும் பெண்களை பெருமளவில் நான் சந்திக்கநேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெறாத வறிய பெண்களாகும். தனிமை (கெட்ட பார்வை) பற்றியுள்ள ஆழமான நம்பிக்கையினால் தேவையான வைத்திய பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயல்வது சாத்தியமில்லாத ஒன்றென எனக்கு விளங்கியது. வறுமைக்கும் கல்வியறிவின்மைக்கும் அடுத்ததாக பெண் உடலைப்பற்றி ஐதீகங்கள் அவர்களது வாழ்வின் சாபமாய் உள்ளது மிகத் துயரமானதொன்றாகும். சாமத்தியச் சடங்குகளை பின்பற்றுவது ஏன் என பெருந்தொகையான தாய்மார்களிடம் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுபற்றி அவர்களிடமிருந்து கிடைத்த காரணங்களை கீழே தருகின்றேன்.

"எனக்குத் தெரியும் இந்த சடங்கள் பிழையானவை என நான் மற்ற நாட்களில் போன்றே மகளுக்கு உணவு கொடுத்தேன் எனினும் எனது அயலவர்கள் இதற்காக என்மீது மிகவும் குறைகூறினார்கள். அப்படியிருக்க நான் யாருக்கும் தெரியாமல் மகளுக்கு நன்றாக உணவளித்தேன். நேரம் பார்ப்பது பொய்யான காரியம் என நான் மகளின் தந்தைக்குக் கூறினேன். நேரம் பார்க்காதுவிடுவது சரியில்லையெனக் கூறிய அவர் தானே சென்று நேரம் பார்த்துக் கொண்டு வந்தார்."(மருத்துவத் தாதி)

"யாருக்கும் இது பற்றி அறிவிக்க நான் விருப்பப்படவில்லை. எனது அண்ணன் கொண்டாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார். அதனாலேயே கொண்டாட்டம் நடத்த நேர்ந்தது." (தொழிலாளப் பெண். இவளின் மகளுக்கு தந்தை இல்லை)

"நான் சடங்குகளை நம்புவதில்லை. எனினும் எனது மாமியாரின் தொந்தரவினால் இதைச் செய்யாமல்விட முடியவில்லை"(ஆசிரியை)

"எமது வாழ்வில் மகிழ்ச்சியான வைபவங்களில் பங்குபெற வாய்ப்பில்லை. எமக்கு இருந்திருந்தென்றாலும் கொண்டாட்டங்கள் தேவை. அதனாலேயே நாம் மகள் வயதுக்கு வந்ததை கொண்டாடினோம்." (இதைச் சொன்னவர் ஒரு தந்தை)

சாமத்தியச் சடங்குகளை விமர்சிக்கதவர்கள் கூட நேர்மையாக அவற்றை எதிர்க்காததும், பிழையான கருத்துக்களை நிராகரித்துப்போகும் சக்தியும் தைரியமும் அவர்களுக்கு இல்லாததும் மேற்குறிப்பிட்ட அவர்களது கருத்துக்களில் இருந்து தெரிய வருகின்றது.

சாமத்திய சடங்கு வைபவங்களுக்கு அழைக்கப்பட்டு அவற்றில் பங்கு பற்றிய பலருடன் இதுபற்றிக் கருத்துக்கேட்டேன். அவர்கள் சொன்னவற்றைக் கீழே தருகின்றேன்.

"மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என ஆண்களான எம்மை சடங்குக்கு அழைப்பது எத்தனை வெட்கங்கெட்ட செயலாகும். ? தமது மகளைப் பற்றிய இத்தகைய விடயத்தை பெற்றார் இன்னொருவருக்கு சொல்வது எப்படி? எமது சமூகம் எவ்வளவு தூரம் சீரழிந்து விட்டது என்பதனையே இது காட்டுகின்றது."(விவசாயி)

சாமத்திய வைபவங்களை நடத்துவதன் முதற்காரணம் பணமும் பரிசுகளும் சேகரிப்பதற்காகும். பணத்திற்கும் வெளிப்பகட்டுக்கும் நமது சமூகம் எவ்வளவு தூரம் உட்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. (தொழிலாளி)

"பெரும்பாலானவர்கள் தமது குறைபாடுகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே சாமத்தியச் சடங்கு வைபவங்களை நடத்துகிறார்கள். மகளைக் காரணமாய்க் கொண்டு பரிசுகள் சேகரிப்பதை அருவறுக்காமல் செய்கிறார்கள்." (ஆசிரியை)

"சுருங்கக் கூறின் சாமத்தியச் சடங்கென்பது சுருக்கமாக பொருள் சேகரிப்பதற்காக செய்யும் ஒரு ஒரு காரியமாகும். பெண் மகளை இப்படியாக விற்கும் ஒரு சமூகம் ஏன் பெண்ணின் ஒழுக்கத்தை இவ்வளவு தூரம் தேடுகிறது? ஏழைப் பெண்கள் விபச்சாரத்திற்கு செல்வது இயலாமையினாலாகும். சாமத்தியச் சடங்கு நடாத்தும் சமூகம் ஏன் விபச்சாரியை அசிங்கமாகப் பார்க்கின்றது. பெண்மகளை முதன்மைப்படுத்தி பொருள் பண்டம் பெற்றுக்கொள்வது விபச்சாரம் இல்லையா?"(தொழிலாளப் பெண்)

பெண்ணைப் பற்றியும் பெண் உடலைப்பற்றியும் நிலவிடும் கருத்துக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அதேபோல் சாமத்தியச் சடங்குகள் மூலம் வெளிப்படுவது எமது சமுதாயத்தில் பெண்கள் பற்றியுள்ள பரஸ்பர விரோதமான சிந்தனையாகும். சாமத்தியப்படுவது தீட்டானது. அசுரத்தனமானது என்பது வெறும் நம்பிக்கையாகும். அப்படி நம்புவர்களே அதன்பிறகு அதற்காக கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.

உடல் சம்பந்தமான இத்தகைய பித்தலாட்டங்களுக்கு இளம் பெண்பிள்ளைகளை உட்படுத்துவது மிகவும் அநீதியானதாகும். வளர்ந்து வரும் பெண் பிள்ளைக்கு பெற்றோரினால் ஆற்றப்படவேண்டிய கடமைகளிலொன்று உடல் - உள வளர்ச்சி பற்றி சரியான வயதில் (அவளது வளர்ச்சி வெளிப்படையாகத் தெரியும்போது, சாதாரணமாக அவளது வயது 11ஆக இருக்கும் போது) முறையாக சொல்லிக் கொடுப்பதாகும். முதலாவாது மாதவிடாய் வெளியாகி தமது வாலிபப் பருவத்தைத் தாண்டுமளவும் (வயது 19 -20) உடலில் ஹோமோன் மாற்றமடைவது நடைபெறும். இதனால் சிறுமியொருத்திக்கு பல்வேறு உடலியல், உளவியல் பிரச்சனைகள் ஏற்பட இடமுண்டு. இந்தப்பிரச்சனைகளை விளங்கிக்கொள்ளவும் அவற்றிற்கு முகம் கொடுக்கவும் அவளுக்குள் அவளது உடல்பற்றி, விசேசமாக பாலுறுப்பின் அமைவு பற்றியும், குழந்தையுற்பத்தி செயற்பாடு பற்றியும் முறையான விஞ்ஞானபூர்வமான விளக்கம் இருக்க வேண்டும். அவளை இது தொடர்பாக அறிவூட்டுவது விசேடமாக பெற்றோர், ஆசிரியர்களது கடமையாகும். தமது உடலைப்பற்றிய முறையான, சாதகமான, நன்மையான கருத்துக்களை சிறுமிகளிடம் ஏற்படுத்துவது, தன்னம்பிக்கையுடனும் ஆத்ம கௌரவத்துடனும் கூடிய சுயாதீனமான பெண்கள் சமூகமொன்றை இந்நாட்டில் உருவாக்குவதற்கு மிக அத்தியாவசியமானதாகும்.

இன்று உலகெங்கிலுமுள்ள பெண்கள் சர்வதேச அளவில் தமது ஒடுக்குமுறைக்கு எதிராக குரலெழுப்புகிறார்கள். பெண் உடல் பற்றிய எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் நவீன விஞ்ஞானத்தின் மூலமாயும் பெண்விடுதலை இயக்கத்தினூடாகவும் வெற்றிகரமாக உடைத்துள்ளார்கள். இத்தகைய சகாப்த்தத்தில், சிறுமியொருத்திக்கு முதன்முதல் மாதவிடாய் வெளியேற்றம் ஏற்படுகையில் சடங்குகள் செய்வது அர்த்தமில்லாதது. பெண் உடல் சம்பந்தமான வெற்றுத்தனமான சாமத்தியச் சடங்குகள் எவ்விதத்திலும் அவசியமற்றவை.

- பெண் உடல் ஐதீகங்களிலிருந்து -

Montag, August 18, 2003

பலவீனமாகக் கருதப் பட்ட பலங்கள்

- வைத்திய கலாநிதி எழுமதி -

அந்தக் காலத்தில் இருந்து 90 ஆண்டு காலப்பகுதிவரை பெண்ணியம் பற்றிய ஆய்வு நூல்களும், பொதுவான அபிப்பிராயங்களும் பெண்களுக்கு இரண்டாம் இடத்தையே ஒதுக்கியுள்ளன. ஆண்கள் வேலை செய்பவர்களாகவும், பெண்கள் வெறுமனே சமைப்பதும், படுக்கையப்பகிர்வதும்தான் என்ற ரீதியில் தொடர்ந்து சித்திரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நிலைப்பாடு இன்று மாறத் தொடங்கியுள்ளது. கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று பெண்கள் விமானம் ஓட்டுகின்றனர். விண்வெளிக்குச் செல்லுகின்றனர். களத்தில் ஆண்களுக்குச் சரிக்குச் சமனாக நின்று எதிரியை எதிர்த்துச் சமராடுகின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர்களாகவும், வைத்திய நிபுணர்களாகவும், கட்டிட பொறியிலாளர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் வயலில் ஆண்களுடன் சேர்ந்து வேலையைப் பங்கு போட்டுச் செய்கின்றனர்.

உடலைமப்புரீதியாகவும், உடற்றொழில்ரீதியாகவும் ஒரே வயதுடைய ஆண்பெண் இருபாலாரையும் ஒப்பிட்டுப்பார்க்கும் இடத்தில் உயரம், நிறை, பலம் ஆகியவற்றில், ஆண்கள் பெண்களைவிட கூடியவர்களாகவே உள்ளனர். மேலும் பெண்ணின் வாழ்க்கையில் பிரத்தியேகமாக ஏற்படுகின்ற உடற்றொழிலியல் மாற்றங்களான மாதவிடாய் வருதல், மகப்பேறு அடைதல் ஆகிய விடயங்களையும் பெண்களின் பலவீனங்களாகப் பார்க்கின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களையும் மனதில் நிறுத்திப் பெண்களை 2ம் இடத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனால் இக்காரணங்கள் அனைத்தும் பெண்களின் பலவீனம் அல்ல. அவை பலம் என்று வாதிடும் காலம் வந்துவிட்டது.. இதற்குப் பல ஆய்வுகளும் உறுதுணையாக நிற்கின்றன.

ஹெலன் பிஸர் ( Hellen Fisher ) என்ற பிரசித்தி பெற்ற அமெரிக்க மனித வர்க்கவியல் நிபுணர் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாகப் பெண் 21ம் நூற்றாண்டின் தலைவியாக வருவாளென்று எதிர்வு கூறுகின்றார். மேலும் அவர் தனது ஆய்வு நூலில் உளவியல் ரீதியாக ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் பல மடங்கு பலம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் தலைமைப்பதவியை வகிக்கத் தகுதிபெற்றவர்கள் என்றும் கூறுகின்றார். பெண்களின் தலை சிறிதாக இருப்பதனால் மூளையும் ஒப்பீட்டளவில் ஆண்களின் மூளையைவிட சிறிதாக உள்ளது. ஆனால் மூளையினுள் காணப்படுகின்ற நியூரோன்கள் எனப்படும் நரம்புக்கலங்களின் எண்ணிக்கை பெண்களில் கூடுதலாக உள்ளது. மேலும் ஆண்களின் குருதியில் ஈமோகுளோபினின் அளவு கூடுதலாகவும் பெண்களின் குருதியில் இமினோகுளோபினின் அளவு கூடுதலாகவும் உள்ளது. இதனைப் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் தங்களின் பணியை எதுவித ஓசையுமின்றி செய்து முடிப்பதினை வைத்தே கண்டு கொள்ளலாம்.

1995ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் ஓர் பரீட்சார்த்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்பு பயிற்சி எதிலும் ஈடுபடாத 41 பெண்கள் (இதில் மாணவிகள், வழக்கறிஞர்கள், வியாபாரநிலைய ஊழியர்கள், ஆறுமாதகாலத்திற்கு முன்பு, மகப்பேறு அடைந்த தாய்மார்கள் போன்றோர் அடங்குகின்றனர்) யாவரும் ஐந்திலிருந்து ஆறுமாதகாலப் பயிற்சியில் 34 கிலோ கிராம் பாரத்தினை தோளில் சுமந்தபடி 3 கிலோமீற்றர் தூரம் ஓடுவதற்கும், 45 கிலோகிராம் எடையைச் சுமந்தபடி நிலத்தில் இருந்து எழும்புவதற்கும் கற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களைப் போன்ற தரத்தில் உள்ள ஆண்களினால் அப்படி முன்னேற முடியவில்லை என்பதனையும் அப்பாPட்சார்த்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 1964 தொடக்கம் 1995 வரையான காலப்பகுதியில் மரதன் ஓட்டத்தில் பெண்களின் சாதனை விகித உயர்வு 32 வீதமாகவும், ஆண்களின் விகித உயர்வு 4.5 வீதமாகவும் காணப்பட்டது. இதுவும் பெண்களின் பரிணாம வளர்ச்சியின் மாற்றத்தினை எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும்.

இவ வாறு ஆய்வுகளும் பரீட்சார்த்த செயற்பாடுகளும், பெண்களின் பலத்தினை வெளிக்கொண்டு வந்திருக்கும் இவ வேளையில் பெண்களும் பல பரிணாம வளர்ச்சிகளைத் தம் செயற்பாடுகளுடாகக் காட்டிவருகின்றனர். எனினும் இன்றும்கூட எம் மத்தியில் பெண்களைப் பலவீனமானவர்களாகவும், இரண்டாந்தர நிலையிலுள்ளவர்களாகவும் பார்க்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமாற வேண்டுமாயின் முதலில் பெண்கள் தம்பலத்தினை அறிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக என்னென்ன விடயங்களை வைத்துப் பெண்களைப் பலவீனமாக எடை போடுகின்றனர் என்று அறிந்து அவை, ஏன் பலவீனமான விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன என்பதையும் நோக்க வேண்டும். மேலும் இவ விடயங்கள் யாவும், இன்று பலமானவையாகச் செயற்படுகின்றன என்ற விஞ்ஞானாரீதியான ஆய்வு உண்மையையும் அறிந்திருக்க வேண்டும்.

முதலாவதாக மதக் கோட்பாடுகள் பெரும்பாலும் பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்பட்டவள் என்றும் ஆணுக்கு அடிமையானவள் என்றும் சித்தரிக்கின்றன. சிவன், பிரம்மா, விஸ்ணு, முருகன், யேசு, அல்லா, புத்தர் எனக் கூறப்படும் தெய்வங்கள், மதத்தலைவர்கள், மதப்போதகர்கள் அனைவருமே ஆண்கள். ஆண்கள் தலையெடுத்த சமூக அமைப்பில் முதன்மையான தெய்வத்தையும், ஆண்களாகவே படைக்க முடிந்தது. இதனால் பெண்களின் மனதிலும் நினைவிலும் கருத்தியல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் நாம் தரம் குறைந்தவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடிந்தது.

இன்றும் மக்களிடையே பெரும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ள புராண இதிகாசக் கதைகளும் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவே படைக்கின்றன. உதாரணமாக பஞ்சபாண்டவர்கள் திரௌபதியைத் தம் மனைவியாகக் கொண்டிருந்தனர். ஆனால் அவளுக்கு அவர்களில் ஒருவரை மட்டும் கணவனாக ஏற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது. குழந்தைப்பருவத்தில் ஆணும் பெண்ணும், சரிசமமாக வளர்கின்றனர், வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் பூப்பெய்துகின்றபோது உடல், உள ரீதியாக பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை வருவதனால் சமூகம் அவளின் செய்ற்பாடுகளை சுதந்திரத்தினை மட்டுப்படுத்துகின்றது. இதன் ஒரு அங்கமாகவே அந்தக் காலத்தில் பெண் பூப்பெய்தினால் வீட்டை விட்டு சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறாள். அதன் உச்சக்கட்டமாக மாதவிடாய்க் காலத்தின்போது அவள் வாழும் வீட்டில் இருந்துகூட தூரத் தள்ளிவைக்கப்படுகின்றாள். எதுவித பணியுமின்றி வீட்டின் ஒரு மூலையில் கைதிபோல் அடைக்கப்பட்டிருக்கிறாள். இதற்கு குற்றம், துடக்கு என்ற சாட்டுக்களும், இரத்தப் போக்கு இருப்பதனால் ஓய்வு தேவை என்ற காரணமும் காட்டப்படுகின்றது. ஆனால் இன்று பெண்கள் மாதவிடாயின்போது நாளாந்தம் செய்து கொண்டு வந்த சகல பணிகளையும் இடைநிறுத்தாது, செய்கின்ற நிலையினைக் காண்கிறோம். இது எப்படி சாத்தியமானது என்பதனை விஞ்ஞானாரீதியாகப் பார்ப்போம். மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுகின்றபோது நான்கு அல்லது ஐந்து நாட்களிற்கு இரத்தப் போக்குக் காணப்படும். இது காயத்தின்போது ஏற்படுகின்ற குருதி இழப்புப் போல சடுதியாக ஏற்படுகின்ற குருதி இழப்பு அல்ல. ஓமோன்களின் செயற்பாட்டால் ஒரு மாதகாலமாகப் பருமன் தடித்து வழமைக்கு அதிகமாக குருதி விநியோகத்தைப் பெற்றிருந்த கருப்பை உட்சுவர் உடைந்து உதிர்வதனாலேயே இரத்தப் பெருக்கு ஏற்படுகின்றது. இதன்போது ஐந்து நாட்களுக்கும் சேர்த்து ஆகக் கூடுதலாக 300 மில்லிலீற்றர் இரத்தமே வெளியேறுகின்றது. எந்த ஒரு பெண்ணும் 18 வயதிற்கு மேல் 500 மில்லி லீற்றர் இரத்தத்தை உடலில் எதுவித பாதிப்பும் இன்றி இழக்கலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மையாகும். இந்த அடிப்படையில்தான் இரத்ததானம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ வாறு இரத்ததானம் செய்யப்படுகின்றபோது, உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இவ விழப்பிற்கு ஈடாக, புதிய இரத்தம் இரு கிழமைகளில் உருவாகி விடுகின்றது. இதனால் இரத்தத்தில் புதிய அணுக்கள் சேருகின்றன. இதேபோல் பெண்களும், மாதாமாதம் இரத்தத்தை வெளியேற்றுகின்றபோது அவ விரத்தம் இருகிழமைகளில் ஈடு செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதனால் உடல் புதுத்தெம்பு பெறுகின்றது. ஆகவே பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது ஓய்வெடுக்காமல் வேலை செய்யக்கூடிய உடல் உளபலம் உண்டு என்பதே உண்மையாகும்.

அடுத்ததாக மகப்பேற்றினை எடுத்துக் கொள்வோம். இங்கு பெண்ணானவள் ஒரு புதிய உயிரை பத்துமாதங்கள் தன்னகத்தே சுமந்து பிரசவ வேதனையைத் தாங்கி அவ வுயிரை வெளிக் கொணர்ந்து உலகிற்குத் தருகின்றாள். பின் இக்குழந்தையின் வளர்ப்புக்காக சிறுகாலம் தன் கடமையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இக்காலத்தில்தான் ஆண் கடமையில் முன்சென்று உயருகின்றாhன். ஓர் உயிரைப் பிரசவிப்பது என்பது பெரிய கடமை. ஆண்களிற்குக் கிடைக்காத பெரும் பாக்கியம் பெண்களுக்குக் கிடைக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பலவீனமாகப் பார்க்காது, பலமாகப் பார்க்க வேண்டும். மேலும் மாதவிடாய் நிற்றலையும் பெண்ணின் ஓர் பலவீனமான அறிகுறியாகப் பார்த்து வந்துள்ளனர். ஏனென்றால் மாதவிடாய் நிற்கின்றபோது ஓமோன்களின் சுரப்பு குறைவதனால் உடல் உள நோய்கள் ஏற்படுவதனால் அவர்கள் வேலை செய்வதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று காரணம் காட்டி ஓய்வில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இன்றைய உலகில் இதனைப் பல பெண்கள் பொய்யாக்கி உள்ளனர். மேலும் மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு பெண்களின் ஆற்றல் பல மடங்காக அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதவர்க்கவியல் நிபுணர்களான அற்றின்சீல்மான், நான்சீரானர் ஆகியோர் 1970இல் பழ ங்குடி மக்கள் மத்தியில் மேற்கொண்ட பல ஆய்வுத்தரவுகளின்படி அங்கு அவர்களின் நாளாந்த உணவில் 70 வீதமான உணவினைப் பெண்கள் சேகரித்து வருகின்ற தாவர உணவும், 30 வீதமானது ஆண்கள் வேட்டையாடி வரும் மாமிச உணவும் பூர்த்தி செய்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஆனால் ஆண்கள் வேட்டைக்காரர்களாகவும், பெண் குகையில் இருந்து ஆண்களுக்கு அடிமை வேலை செய்வதாகவும், ஆதி மனித வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை இன்றைய ஆய்வாளர்கள் நிராகரிக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் திவி இன பழங்குடி மக்களில் பெண்கள்தான் வேட்டைக்குச் செல்கின்றனர். அதேபோல் கொங்கோவில் அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடிமக்கள், தங்கள் வேட்டைப்பணியில் முழுக்குடும்பத்தினையும் ஈடுபடுத்துவதாக கிறிஸ்நைற் என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார். மேற்குலகச் சம்பிரதாயங்களின்படி வேட்டைக்குரிய தெய்வங்கள் யாவரும் பெண்களாகவே இருக்கின்றனர்.

இறுதியாக பெண்ணில் ஏற்படுகின்ற சில தவிர்க்க முடியாத உடற் தொழில் மாற்றங்களினால் அவள் கடமையில் பின்தங்கும்போது அதனைப் பலவீனமாகப் பார்க்கும் நிலைதான் அன்று இருந்துள்ளது. இன்று இதனைப் பலமாகப்பார்க்கும் காலம் தொடங்கிவிட்டது. இதற்குப் பெண்கள் அனைவரும் தம்மிடம் உள்ள பிற்போக்குச் சிந்தனைகளைக் களைந்து தம் ஆற்றல் திறனையும் முற்போக்குச் சிந்தனையையும் வளர்க்க வேண்டும். அத்துடன் அறிவியல்hPதியாகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ வாறு செயற்படும் போது பெண்கள் ஆண்களிற்குச் சரிசமனான பலமுள்ளவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

- வைத்திய கலாநிதி எழுமதி -

Mittwoch, August 13, 2003

விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும்.......... கருணாகரன்.

விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும் அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும்

எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.

பெண் சமத்துவம் குறித்த கருத்தாடல்கள் செயற்பாடுகள் இன்று தீவிரமான நிகழ்நிலையிலிருக்கின்றன. அல்லது சமூக நிகழ்ச்சித் திட்டத்திலிருக்கின்றன. பெண் எனும் அடையாளத்தை வைத்து சமூகம் பெண்கள் மீது விதிக்கும் நிபந்தனைகளை வெற்றி கொள்ளவும் கூறிய சிந்தனை விழிப்பும் செயற்பாடும் பெண்களிடையே வேண்டப்படுகிறது. இது பெண்களிடம் மட்டுமின்றி முழு சமூகத்திடமும் வேண்டப்படுகின்றது என்பதே பொருத தமானது. ஏனெனில் ஒடுக்கப்படுவோருடைய விடுதலை என்பது ஒடுக்குவோரினது விடுதலையுமாகும் என்ற உண்மையின் அடிப்படையிலானதாக இது அமைகிறது.
இன்று நமது பெண் நிலைப்பாடு எவ வாறிருக்கிறது. பெண் வாழ்வு எவ வாறிருக்கிறது என்று பார்ப்பது முதலில் முக்கியமாகிறது.

எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.

இந்த நிலைபாட்டிலும் செயற்பாட்டிலும் இயங்கும் பெண்கள் பெண் சமத்துவம். பெண்விடுதலை, பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளிலும் சமூகப் பிரக்ஞையிலும் சமூகமாற்றத்திலும் ஆர்வம் கொண்டோராகவும் தெளிவுடையவராகவும் இருக்கின்றனர். சிந்தனை விழிப்பு மட்டுமன்றி செயற்திறன் உடையோராகவும் இருக்கின்றனர்.
சமூகத்தின் பெரும் பகுதியாக பெண்கள் இருப்பதுபோல கல்வி கற்கும் நிலையிலும் பெண்களே இன்று கூடுதல் இடத்திலிருக்கிறார்கள். கல்வி மூலமான வேலைகளில் ஆரம்ப நிலை. இடைநிலை உத்தியோகம் பார்க்கும் பெண்களே அதிகமாக இருந்த நிலைமாறி உயர்நிலைகளிலும் தொழிநுட்பவியலிலும் இன்று அவர்கள் இடம் பிடித்து வருகிறார்கள். உடல் உழைப்பாளர்களாக விவசாயம் மற்றும் கூலி உழைப்பாளர்களாக இருக்கும் பெண்களும் தமது உரிமைகளிலும் உழைப்பு முறைகளிலும் தெளிவு பெற்று வருகின்றார்கள். சுமூக நிலைமை இதுவாக இருந்தாலும் பெண் சமத்துவம், பெண்விடுதலை குறித்த பெண்ணியம் பற்றிய தெளிவு அறிவும் சமூகமாற்றம் குறித்த சிந்தனையும் இந்தப் பெண்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவே நிலைமையுள்ளது.

மரபுகளால் கட்டுண்டு, பண்பாட்டு இறுக்கங்களுள் சிக்குண்டு அவற்றை விட்டு வெளிவரத் தயங்கும் மனோ நிலையுடையோராகவே இருhகள் இருக்கின்றனர். போராடும் தரப்பினரும் பெண் விடுதலை, பெண்ணியம் குறித்துச் சிந்திப்போரும் ஒருகுறியீடாகவே இன்றும் நமது சூழலில் இருக்கின்றனர். இது நமக்கும் புதிதல்ல. எந்த நல்ல விடயங்களிலும் சீரியலான செயற்பாடுகளிலும் நமது சமூகம் அப்படித்தானிருக்கிறது.

அக்கறை பூர்வமாக இயக்கம் தரப்பு குறைவாகவும் மந்தத்தனமுடைய தரப்பு கூடுதலாகவுமே உள்ள சமூக அமைப்பைக் கொண்டவர்கள் நாமென்பதால் நமது சூழல் அப்படித்தானிருக்கும்.
நமது கல்வி நமது சூழல் பற்றிய அறிவையோ அக்கறையையோ வழங்குவதில்லை. அதுபோல் தன்னைப் பற்றி அறியவும் உணரவும் கூடிய, தன்நிலை பற்றி தூர நோக்குடன் சமூகவியல் பண்பில் சிந்திக்கக்கூடிய ஆற்றலையோ பண்பையோ வழங்குவதுமல்ல. இந்நிலையில் கல்விக்கப்பாலன பொது அறிவூட்டல் சமூக அக்களினூடாகவே நாம் புதிய மலர்ச்சியை, சமூக அக்கறையை, தேடலை உருவாக்கவேண்டியுள்ளது. நமது எல்லா வகையதன சமூக வேலைத் திட்டங்களிலும் அவை முன்னைடுக் கப்பட்ட முறைகளிலும் இதனை நன்றாக அவதானிக்கலாம்.

சமூக சிந்ததனை என்பதே நிறுவனமயப்பட்ட கல்விக் கப்பாலான தனித்த புறம்பான ஒரு சங்கதியாகவே எப்போது மிருக்கிறது. அதேவேளையில் அத்தகைய புறநிலைச் சிந்தனையை செயற்பாட்டு ஆற்றலை நமது கல்வியும் அது சார்ந்த நிறுவனங்களும் ஏற்பதில்லை. அதேவேளை அதை விரோத நோக்குடனேயே பார்க்கின்றது.

நமது கல்வி தவிர நம் பண்பாடும் மரபுகளும் கூட இத்தகைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் கொண்டேயிருக்கிறது. வாழ்வை கல்வியும் பண்பாடும் கணிசமான அளவு தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதால் இவற்றின் தாக்கம் இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது.

இந்த இரண்டு அம்சங்களும் முழச்சமூகத்தையும் பாதிப்பதுடன் பெண் வாழ்வையும் அதிகம் தாக்கத்துக்குட்படுத்துகின்றன. மரபின் குறைபாடுகளை உடைக்கக்கூடிய வல்லமையோடு துணிவையோ நமது கல்வி பெண்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே வழங்கவில்லை. ஆதே வேளை கல்விக் கருத்து நிலையிலும் பெண்ணை ஒரு இரண்டாம்தரப் பிரஜையாகவே வர்னிக்கப்படுகின்றது. கருதும்படி வைத்திருக்கின்றது. சமூக விதி முறைகள் நியமனங்கள் மரபுகளிலும் பண்பாட்டம் சங்களிலும் பெண் அடுத்தநிலைப் பிறவியாகவே கண்ப்பிடப் படுகிறாள். இவற்றை மீறும் துணிவைப் பெறும்விழிப்பு நிலைக்கு நாம் முழப்பெண்களையும் முழச் சமூகத்தையும் தயார்படுத்தவேண்டும். இந்தத் தயார்ப்படுத்தல் சிறு அளவிலாக இயங்கும் பெண் சிந்தனை வட்டத்தை மேலும் அகலமாக்கி முழு மனிதரிடத்தும் கலப்பதாகவேண்டும்.பெண் அடையாளத்தால் ஒடுக்கப்படும் பெண் மட்டும் தெளிவுபெற்றால் போதாது. ஓடுக்கும் முழச் சமூகமும் இந்தத் தெளிவைப் பெறவேண்டும். புதிய புரட்சிகர மாற்றத்துக்கான மனோ நிலைக்கு வளரவேண்டும். ஜனநாயகத்தின் உயரிய அம்சங்களால் புரிந்துகொண்டு அந்தத் தளத்துக்கு தன்னை விரிக்கும் பண்பைப் பெறவும் வேண்டும்.
போராடும் பெண் சமூகச் சிந்ததனையிலும் செயற்திறனிலும் தேசமாக முழமைபெற்று விரிந்திருக்கிறாள். வீட்டுக்குள், சுவர்களுக்குள், வேலிகளுக்குள் முடக்கப்பட்டும் முடங்கியுமிருந்த நிலையை விட்டு சமூகமாக, தேசமாக பரந்துவிட்டாள். சகல நிலைகளிலும் சமத்துவமாக ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி வருகிறாள். இந்த வெளிப்பாட்டினூடகா அவள் செய்து வரும் செயற் பிரகடனத்தின் பின்னும் நாம் மரபுகளின் பின்னும் பண்பாட்டுக் குறைபாடுகளின் பின்னும் வழமைகளின் பின்னும் இன்னும் இருண்ட பதுங்கு குழிகளை எத்தனை நாளைக்குத்தான் மனச்சாட்சிக்கு விரோதமாக வைத்திருக்கமுடியும்.

பாரம்பரியங்களிலும் மரபு வழமை பண்பாடு சடங்கு என்ற வளையங்களாலும் ஒடுக்குமுறைக்கு ஆதரவான கல்வித்தடுப்புச் சுவர்களாலும் சிறையிடப்பட்டிருக்கும் பெண் வாழ்வை மீட்கும் நடைமுறையின் தேவைபற்றிய தெளிவே இன்று எல்லோரிடத்திலும் வேண்டப்படுவது. பெண் விடுதலை என்றால் என்ன என்று அறியாத, ஏன் என்று உணராத நிலையே பெரும்பாலும் எமது சமூகத்தில் உள்ளது. பலரிடம் ஒருவித தவறான புரிதலும் விரோத மனப்பாங்குமே காணப்படுகின்றது.

நமது அறிவென்பது எத்தகைய பண்பையும் நாகரிகத்தையும் நமக்கு வழங்குகிறறது என்ற கேள்வியை பலரும் எழுப்புவதில்லை. ஓருவரை அடிமைப்படுத்துவதோ, அடுத்தநிலையில் வைத்திருப்பதோ கருதுவதோ எமது பண்பில் இருந்து எம்மைக் கீழிறக்கிவிடுகிறது. எம்மை நாகரிகமற்றவர்களாக்கி விடுகிறது.எம்மை அறிவற்றவர்களாக்கி விடுகிறது.

ஓரு அறிவார்ந்த சமூகம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு ஆரோக்கியமான சமூகம் தன்னுள்ளிருக்கும் குறைபாடுகளை நீக்கிவிடும். இதற்குப் பிரதானமாக வேண்டப்படுவதும் சிந்தனையும் சீரிய செயற்பாடும். உண்மையைக் கண்டறிவதும் நிலைமையை உணர்ந்து கொள்வதும் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதும் அச்சமூகத்திற்கு அவசியமானது. நாம் இன்று இத்தகையதொ முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். புதிய வாழ்வுக்கான தொடக்கத்தில் புதிய பண்பாட்டுக்கான வேலைத்திட்டத்தில் இருக்கின்றோம்.

போராட்டமும் யுத்தமும் இருக்கும் தளைகளை அறுத்து புதிய வாழ்வை, விடுதலையைத் தருமென்பார்கள் ஆனால் எமது சூழலின் நிலையில் ஒருபக்கம் இந்த உண்மையைக் கொண்டிருந்தாலும் இன்னும் பெண் தொடர்பான அணுகுமறையிலிருந்து அதன் பாரம்hரியத் தன்மையை விட்டு புதிய பாதையில் பயணிக்க்கத் தயங்குகிறது என்பதே தோன்றுகிறது.
யுத்தம் சமூக நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியைத் தந்தாலும் நமது புலம்பெயர்வு ஏற்படுத்திய ஈடுகட்டல் எனடபது மீண்டும் பழமைகளையும் மரபையும் பேணிக்கொள்ள ஒருவகையில் இச்சமூகத்துக்கு உதவியளிக்கிறது. சீதனம் பெண் ஒரு அழகுப் பொம்மை. பெண் ஒரு இரண்டாம்தரப் பிரஜை என்ற மனப்பாங்கை இன்றும் காப்பாற்றிவருகிறது.
பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றிய புதிய வியாக்கியானங்களையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் உண்மையையும் கண்டுகொள்ள விருப்பவதா, காணவேண்டியில்லாத நிலையையே இவை தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இப்போது நமக்குள் முக்கிய பணியதார்த்தத்துக்குப் பொருத்தமான புதிய கருத்தூட்டல் உண்மை உணர்த்தல் விழிப்பும் ஆற்றல் வெளிப்பாடுமேயாகும்.

ஓருபக்கம் தேசமாக விரிந்திருக்கும் பெண் விடுதலை சிறகசைக்கும் பெண் சமூகமாய் மலர்ந்திருக்கும் பெண் இன்iனாரு பக்கம் கலாச்சாரம் என்ற வளையங்களுக்குள் ஒடுங்கிய பெண், மரபு என்ற வட்டங்களுக்குள் சுரண்டுகொண்டிருக்கும். பெண், வழமை னெ;ற சூத்திரத்துள் சுழலும் பெண், இந்த இரண்டு நிலையிலும் சமகாலத்தில் கொண்டிருக்கும் நமது சமூகம் எப்படி இனிப்பயணிக்க வேண்டும் என்பதே நமக்குள்ள தேர்வாகும்.

பெண்ணின் கலாசாரம் - தாமரைச்செல்வி

ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலைகள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித்தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப்படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடையாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால் பெண்களது எண்ணங்கள், உணர்வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவ வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண்முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே முக்கியமாகிறது.
இன்றைக்கு சமயம், கலை, பொருளாதாரம், இலக்கியம், தொடர்பூடகம், எனப் பல்வேறுபட்ட சகல கலாச்சாரச் செயற்பாட்டுத் தளங்களிலும் பெண்கள் ஈடுபட்டு வருவதை நாம் காண்கிறோம். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் எனக்கருதப்படும் அபிவிருத்தி வேலைகள், தீர்மானம் எடுத்தல், ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், தலைமை ஏற்றல் போன்ற செயற்பாடுகளில் இன்றைக்கு பல பெண்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டில் நிலவிய போர்ச்சூழல் ஆண்களின் இயங்கு தளத்தில் ஓரளவு இடைவெளி ஏற்படுத்த}ய நிலையில் பெண்கள் வீட்டுக்குள் இருந்துவிடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை கண் முன்னாலேயே நாம் பார்க்கிறோம். இங்கே பெண்களின் பங்களிப்புக்கான தேவை ஏற்படுமிடத்து அவர்கள் வெளியே வந்து செயற்படுவதற்கான சாதகமான நிலை ஏற்படுகிறது. இவர்கள் தாம் சார்ந்த துறைகளின் செயற்பாடுகளில் இந்த கலாசாரத்தை எவ வகையில் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த கலாச்சாரத்தின் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுகிறது. பெண்களின் செயற்பாடுகளினூடாக கணிக்கப்படுகின்ற இந்த கலாச்சாரத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பும் பெண்களிடமே உள்ளதை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும . இந்தப் பொறுப்பை எத்தனை பெண்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள். ஏதோ ஒரு அதிகார வர்க்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கலாச்சாரத்தின் தன்மை சரியானதுதானா என்று எத்தனை பேர் சிந்திக்கிறார்கள். இந்த விதமாக அமைந்து விட்ட இந்த கலாச்சாரத்தின் ஆடம்பரங்கள் பெண்களுக்குத் தேவையா? என்ற கேள்வி இன்று பலராலும் முன் வைக்கப்படுகின்ற கருத்தாகிறது.

பட்டாடைகளும் நகைகளும் ஆடம்பரமான சடங்குகளும்தான் எமது கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறியாமையிலிருந்து நமது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நகையும் பட்டாடையும் ஆடம்பரமான வாழ்வும்தான் தனக்குப் பெருமைதரும் என்று பெண் நினைப்பாளேயானால் அது போன்ற முட்டாள்த்தனம் வேறு இல்லை. தன் கல்வியாலும் தன்னம்பிக்கையாலும் ஆளுமையாலும் மனிதப் பண்புகளாலும் ஒரு பெண் நிமிர்ந்து நிற்பாளேயானால் அதுதான் சமூகத்தில் அவளுக்கு பெருமை தரும் விடயம குறைந்த பட்சம் இந்த விதமாய் நிமிரும் பெண்கள் என்றாலும் தமது வாழ்வை எளிமையானதாகவும் ஆடம்பரமற்றதாகவும் ஆக்கிக்கொண்டால் சமூகத்தில் மற்றவர்கள் பின்பற்றகூடிய முன் உதாரணமாக திகழ்பவர்களாக இருக்க முடியும்.
போரினால் நலிவுற்றிருக்கும் நமது தேசத்தின் இன்றைய தேவை ஆடம்பரங்களை துறத்தல். எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தல். இது சாத்தியமாவது பெண்களின் செயற்பாட்டிலேயே தங்கியிருக்கிறது.
சமூகத்தில் எந்தப்பிரச்சனை என்றாலும் அதற்கு முகம் கொடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. அநேகமான பெண்களின் வாழ்நிலை சராசரிக்கும் கீழாகவே அமைந்துள்ளது. போரின் நடுவேயான பல இழப்புக்களை தாங்கியவர்களாகவே இவர்களில் பலர் இருக்கிறார்கள். இத்தகைய நிலைமையில் எமது கலாச்சாரங்களின் ஆடம்பரங்கள் சுமைகளாக அழுத்துவதை பெண்கள் அனுமதிக்கக் கூடாது. எமது இயற்கை வளங்களுக்கு பொருந்தக்கூடிய விதத்தில் எமது கலாச்சாரத்தை அமைக்கத் தவறினால் எமது இனம் பாரிய அழிவை எதிர் நோக்குவதை தவிர்க்க முடியாமல் இருக்கும்.
பொதுவாகவே பெண்கள் ஆடம்பரமோகம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சமூகத்தில் பலவிடையங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகவும் தம்மை அடையாளம் காட்டுகிறார்கள். பெண்ணே பெண்ணிடமிருந்து விடுதலை பெறவேண்டும் பெண்ணே பெண்ணை சமமாய் நடாத்த முன்வரவேண்டும்.
சகமனிதரை நேசிக்கும் மனிதப் பண்பையும் எளிமையான வாழ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் எமது கலாச்சாரமாக பெண்கள் ஏற்றுக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகிறது.

- தாமரைச்செல்வி -

போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்.

போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்களின் ஆளுமை

பெண்கள் காலம் காலமாக அடக்குமுறைக்குள்ளாவது பற்றியும், உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியும் இன்று பல்வேறு தரப்பினரும் விழிப்படைந்து வருகின்றனர். இதனையொட்டிய பல திட்டங்களும், செயற்பாடுகளும் தனிநபர்களாலும், சிறு குழுக்களாலும், நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் இவ விடயத்தில் சற்று விழிப்படைந்துள்ளது.
பால்நிலைக்கல்வி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பனவும் நடந்தேறி வருகின்றன. இதனால் பெண்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளதுடன், தமது உரிமைகளைப் பெறும் வகையில் தம்மை முன்னேற்றவும் துணிந்துள்ளனர். மாற்றங்கள் படிப்படியாக நிகழத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் இணைந்து போர்க்களம் செல்கிறார்கள் என்ற விடயம் தமிழீழ எல்லைக்குள் வாழ்பவர்கள் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் ஏன் உலகநாடுகள் முழுவதும் அறிந்தவோர் விடயமாகும்.
ஆனால் இவர்களின் வளர்த்தெடுப்புமுறை பற்றியோ, பயிற்சி பற்றியோ, களத்தில் போரிடும் திறன் பற்றியோ இவர்களின் ஏனைய செயற்பாடுகள் பற்றிய ஆழ அகலங்கள், ஒட்டுமொத்த ஆளுமைவிருத்தி பற்றிய விடயங்கள் வெளித்தெரியாத தொன்றாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போதுள்ள அமைதியான சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் வடக்கு, கிழக்கிலுள்ள சிலஇடங்களில் நடத்திய தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வில் முதன்முறையாக தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்த விளைந்துள்ளனர்.
இந்நிகழ்வு விடுதலைப்புலி உறுப்பினராக இணைந்து பல சாதனைகள் செய்து முதல் வீரச்சாவடைந்த 2ம் லெப். மாலதியின் நினைவு நாளான ஒக்டோபர் பத்தாம்திகதி நடாத்தப்பட்டது. இந்நாளையே விடுதலைப் புலிகள் தமிழீழ பெண்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இத்தினம் பற்றிய செய்தியே இதுவரை காலமும் பலராலும் அறியப்படாதிருந்தது.
10.10.2002 அன்று கிளிநொச்சியில் நடந்த மகளிர் பேரெழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டதில் என்னால் அவதானிக்க முடிந்தவற்றையும், ஏற்பட்ட மனப்பதிவுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.
தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வின் முதலாவது நிகழ்வான இராணுவ அணிவகுப்பே பார்ப்போரை திக்குமுக்காடச் செய்து விட்டது. ஏனெனில் அத்தனை நேர்த்தியும் வேகமும் கொண்டதாய் ஒவ வொரு அணிகளும் சென்று மறைந்தன. புகைப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் இவற்றைத் துரத்திக்கொண்டு தமது கமறாத்திரைகளுக்குள் அடக்கப் படாதபாடுபட்டனர்.
மகளிரின் பதினொரு படையணிகள் இதில் பங்கேற்றன. இவையனைத்தும் ஓர் அடிப்படைத்தளத்துள் நின்றிருந்த போதும் ஒவ வொன்றும் தமக்கான தனித்துவங்களைக் கொண்டிருந்தன. அணிந்திருந்த சீருடைகளிலும், பிடிக்கப்பட்ட கொடிகளிலும், சின்னங்களிலும் ஒவ வொரு அணிகளும் தம்மை வேறுபடுத்திக் காட்டின.
ஓர் இராணுவ அணியின் வடிவமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், பயன்படுத்திய மேலைத்தேயபாண்ட் வாத்திய இசைக் கருவிகளுக்கேற்பவும்
"புலிகளின் தாகம் தமிழீழத்
தாயகமென்றே நீ கூறு. "என்ற
விடுதலைக் கானங்களிலொன்று அணியின் வேக நடையின்போது இசைக்கப்பட்டது. பின்னர் மைதானத்துள் நடந்தமெதுவான அசைவுகளுக்கு 'எங்கள் தோழர்களின் புதைகுழியில்' என்ற பாடல் பொருத்தமாக அமைந்திருந்தது.
சிறு சிறு இடைவெளிகளில் கரடிப்போக்கு சந்தியில் ஆரம்பமான இவ வணிகள் கிளிநொச்சி மத்திய மைதானத்துள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து பெரும் பரப்பிலான இடத்தினைப் பிடித்து பெரும் இசைஎழுப்பி, பெரும் நகர்வினைப் புலப்படுத்தியது. இது சூழ நின்றிருந்தோரை பெரும் பரபரப்பிற் குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கையில் ஏ-9 பாதையூடான இராணுவ நகர்வினை எதிர்த்து மன்னகுளத்தில் பெண் போராளிகள் சமர் செய்ததன் 'மாதிரிச்சமர்' நிகழ்வொன்று நிகழ்த்திக்காட்டப்பட்டது.
பற்றைகளுக்குள்ளும், மரங்களுக்குள்ளும் நிகழ்த்திக் காட்டப்பட்ட இச்சமர் பெரும் வெடிச்சத்தங்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் கண்முன்னே காண்பித்தது.
மிகவும் தத்ரூபமான முறையில் நிகழ்த்தப்பட்ட இம்மாதிரிச்சமர், தமிழீழப் பெண்கள் படையணியின் இராணுவ வளர்ச்சியினையும் பலத்தினையும் காட்டி நின்றது. இது பெண்களின் உடல் உள ஆளுமை விருத்தியின் எல்லையினைக் கோடு காட்டியது.
பொதுவாக ஆசிய மரபில் வந்த பெண்கள் பயந்தவர்கள், மென்மையானவர்கள், நிதானமற்றுக் குழம்புபவர்கள், எதற்கும் தயங்கி நிற்பவர்கள், ஆண்களில் தங்கியிருப்பவர்கள், இலகுவில் அழும், சிரிக்கும் இயல்பு கொண்டவர்கள் என்ற கருத்துருவாக்கம், கணிப்பீடு அனைத்தையும் தகர்த்தெறியும் வகையில் தமிழீழப் பெண்கள் படையணி பெண்கள் உடல், உள ஆளுமை கொண்டுள்ளனர் என்பதனை இச்சமர் திட்டவட்டவமாக காட்டி நின்றது.
இவர்கள் தமிழீழ எல்லைக்குள் வாழும் பெண்களுக்கு மாத்திர மல்ல, உலகிலுள்ள பெண்கள் அனைவருக்குமே தன்னம்பிக்கையினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடியவர்கள் என்றால் அதில் மிகைப்பாடு ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.
மேலும் தொடர்ந்து நிகழ்ந்த கலைநிகழ்வுகள் மூலம் இவர்கள் பல்வேறு விடயங்களை மக்களிடம் முன்வைத்திருந்தனர். குறிப்பாக சாதாரணமாயிருந்த பெண்களாகிய தாம், காலத்தின் தேவையையும் கட்டாயத்தையும் அறிந்து போராட்டத்தில் இணைந்தது பற்றியும் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தம் வளர்ச்சி நடந்தேறியது பற்றியும் குறிப்பிட்டனர்.
ஓர் இன ஒடுக்குமுறையில் ஆக்கிரமித்தல், ஆளுதலின் குறியீடாக சிங்களப் பேரினவாதம் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை பற்றியும் இவ விடத்தில் பெண்கள் போர்க்களம் செல்லும் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
மேலும் தாம் சும்மாயிருந்து சூம்லு}சூம் காளியென்று தாயத்துக் கட்டி அந்நியப் பேய்களை விரட்டவில்லை. நித்திரையற்ற இரவுகளை நிரந்தரமாக்கி உடலிலும், உள்ளத்திலும் பல வலிகளைத் தாங்கி, தியாகங்களை செய்து பெற்றதே இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை என்றனர்.
எனினும் நாம் மிகவும் சாதாரணமானவர்கள் எங்களைப் பற்றிய அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள் என்றனர்.
இக்கருத்தினை நிறுவுதற்போல் கூடியிருந்த பெருந்திரளில் சில விடயங்களை அவாதானிக்க முடிந்தது. சீருடையில் இருந்த பெண் போராளி ஒருவர் துவாயால் ஏந்திய ஒரு குழந்தையை மடியில் வைத்து பால் பருக்கிக் கொண்டிருந்தாள். பின்பு வாரியெடுத்து முத்தமிட்டு தோள்களில் போட்டுக்கொண்டாள்.
அது பெற்ற பிள்ளையா பிறர் பிள்ளையா என்ற ஆய்வுக்கு நான் போகவில்லை. அவளிடம் தாய்மை, அன்பு, பாசம் வெளிப்பட்டது. இதனை சீருடையில் கண்டபோதுதான் ஆச்சரியமாயிருந்தது. இருவேறு உன்னத நிலைகள் ஒருங்கே சங்கமித்தது. எனினும் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை இல்லை என்பதை புரிய முடிந்தது. இதனைவிட பெண் போராளிகள் சிலர் திருமணமாகி தம் கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.
சீருடையில் நின்ற பெண் போராளிகள் பலர் எழுச்சி நிகழ்வுக்கு வந்திருந்த பலருடன் மகிழ்வாக உறவாடுவதைக் காணமுடிந்தது. சிறு பிள்ளைகளுடன் விளையாடியதையும் காணமுடிந்தது.
கலை நிகழ்வுகளிலும் பெண் போராளிகள் தமது திறமைகளை நிலைநாட்டினர். மிக அழகாக ஆடவும் பாடவும் தெரிந்திருந்தனர்.
களத்தில் நிற்கும் போராளி பரதநாட்டியம் ஆடுவது என்பது போராளி பற்றிய பொதுவான நினைப்பிற்கு முரணானது. சீருடையற்று பாத்திரங்களுக்கேற்ப ஆடையணிந்து ஆடிய போது இவர்கள் போர்வீரர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. சீருடையுடன் வரும் பாத்திரங்கள் பல பாவங்களை அபிநயித்து நடனமாடிய போதுதான் போர்வீரர்கள் பற்றிய புதிய பரிமாணம் பெறப்பட்டது.
மற்றும் இப்பேரெழுச்சி நிகழ்விற்கான ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. இந் நிகழ்வுக்காக ஏலவே கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், கிளிநொச்சி மத்திய மைதானத்தில் கூடும் ஒன்றரை இலட்சம் மக்களினதும் வீதிக் கட்டுப்பாடுகள், வாகனப் போக்குவரத்து ஒழுங்குகள், இரவு நிகழ்வு சூழலில் மின்விளக்கு வசதிகள், மைதான அலங்காரங்கள், மைதானத்தில் இடப்பட்ட பெரிய மேடையும் இடமும், மேடை வடிவமைப்பு, இசைக்குழுவினருக்கான தனிமேடை, முழுப்பார்வையாளருக்கும் நிகழ்வுகள் தெரியும் வகையில் வைக்கப்பட்ட பெரும் திரைகள், மேடையின் இரு மருங்கிலும் நிகழ்ச்சி செய்வோர் கூடும் தனியான தகரக்கொட்டகைகள்,
மைதானத்தில் மக்கள் ஒழுங்காக நிகழ்வுகளுக்கேற்ற வகையில் அசையும் முறைக்கான கட்டுப்படுத்தல் கோடுகள், குடிநீர் தாங்கிகள், மலசலகூட வசதிகள், ஒலி ஒளி ஏற்பாடுகள், நிகழ்ச்சி அறிவிப்புக்கள், ஊடகவியலாளர் ஆசன ஒதுக்கீடுகள், சிற்றுண்டி, குடிபான பரிமாற்ற ஒழுங்குகள் என்பன மிக நேர்த்தியாக மிக வசதியாக காலக்கிரமத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலை யுத்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட பிரதேசத்தில், வளங்களற்ற பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தல் என்பது பெரும் சவாலான விடயமே. இது மகளிர் படையணியின் மற்றுமொரு பக்கத்தினை, பொதுவிடயங்களை செயற்படுத்தும்திறனை, முகாமைத்துவதிறனைக் காட்டியது.
இப்பேரெழுச்சி நிகழ்வினை பெண்போராளிகளே பெரும்பாலும் நின்று நடத்திய போதும், விடுதலைப் புலிகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்போராளிகளும் இணைந்தே இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இவர்களிடையே ஆண், பெண் படையணி என்ற பிரிக்கப்பட்ட மனப்பாங்கு கிடையாது. இரு படையணிகளும் இணைந்தே பல காரியங்களை சாதித்து வருகின்றனர்.
ஆரம்ப மகளிர் படையணிக்கான பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஆரம்ப கடற்புலி பெண் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் "ஆரம்பத்தில் கடற்படைத்தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை ஆண்போராளிகளே வழங்கினர். பின்னர் அவர்களிடம் பயிற்சி பெற்றுசிறப்புத் தளபதியாயிருந்த லெப்.கேணல் நளாயினி அக்கா என்பவரே எமக்கான பயிற்சிகளை வழங்கினார். அதன் வழியே பயிற்சிகள் தொடரப்படுகின்றன" என்றார்.
பெண்கள் இயல்பாகவே தொழில்நுட்ப அறிவும் நாட்டமும் குறைந்து காணப்படுகின்றனர். ஆண்களே இவ விடயங்களில் ஆர்வமாக விளங்குகின்றனர். காரணம் காலம் காலமாக ஆண்கள் வெளியில் சென்று பல்வேறு தொழில்முறைமைகளை பயின்றுவர பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளையும் வீட்டையும், சுற்றுப்புறச் சூழலையும் பராமரித்துக்கொண்டு ஓர் மாறுபாடற்ற வாழ்வு வாழ்ந்து வந்தமையாகும். ஆனால் கடற்புலி பெண் உறுப்பினர்கள் சிலர் இவ வெழுச்சி நிகழ்வில் தாக்குதல் படகொன்றினை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து அதன் இயக்கம் பற்றிய விளங்கங்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பெண் உறுப்பினர்கள் தாக்குதல் படகு தயாரிப்பது பற்றியும், அவற்றை இயக்குவது பற்றியும் தொலைநோக்கு தொடர்பு அறிதல் பற்றியும், விமான எதிர்ப்புப் பீரங்கி, கடற்தாக்குதலுக்குரிய 50 கலிபர்கள் என்பவற்றின் இயக்கு முறைகள் பற்றியும், ஆங்காங்கே கொண்டுள்ள தகவல்மையங்கள் பற்றியும், இலக்குகளை இனம்காணல், கணித்தல், குறிவைத்தல் என்பவை பற்றியும், கட்டளை அதிகாரியின் செயற்பாடு பற்றியெல்லாம் பேசிய போதும் படகில்நிற்கும் தாம் ஒவ வொரு வரும் படகின் ஒவ வொரு விடயம் பற்றியும் கூறிய போது காலம் காலமாக பெண்கள் வளர்க்கப்பட்ட மரபில் வளர்ந்தவர்கள் தானே இவர்கள். இவர்களிடம் இத்தனை திறன் எப்படி வந்தது என்றே எண்ணத்தோன்றியது.
இவர்களிடம் "தற்போது நீங்கள் தாக்குதல்படகு, ஆயுதங்களைப் பற்றிய விடயங்களை வெளியிடுகிறீர்கள். எதிரி இதற்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தக்கூடும் என்ற அச்சம் இல்லையா?" எனக் கேட்டபோது.

கடற்புலி ஆரம்ப உறுப்பினரும், தொலைநோக்கு தகவல் அறிபவருமான பெண் ஒருவர் மிக நிதானமாகவும் சிறு அலட்சியமாகவும் சிரித்துவிட்டு "எமது படகுகளையும், ஆயுதம் பற்றியும் அறியலாமே தவிர எமது போர் முறைகளையோ, உத்திகளையோ அறியமுடியாது. அவற்றையும் சரியான மனவலிமையையும் தலைவர் எமக்குத் தந்துள்ளார். அவை இருக்குமளவும் எமது வெற்றி நிச்சயமானது" என்றாள்.
தமிழீழ பெண்கள் படையணியினது மிகுந்த கருத்தியல் தெளிவினையும், நிதானமான போக்கினையும் கொண்டு விளங்குகிறது என்பதனை இவர்களின் உரையாடல்கள் மூலமும் மகளிரணி அரசியல் பொறுப்பாளரான தமிழினி அவர்களின் உரை, பேட்டி என்பவற்றிலிருந்து புரியமுடிகிறது.
இவர்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கின்ற திறமையினையும், தமது செயற்பாடுகளைத்தாமே முன்னெடுக்கும்நிலையிலும் கட்டமைக்கப்படுவதனை ஒரு சில விடயங்கள் சுட்டிக்காட்டுகிறது.
இதில் மகளிர்படையணி உறுப்பினர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்திகளாக அரசியல் கட்டமைப்புக்குள் இருக்கின்றனர் என்பதே ஒரு முக்கிய விடயமாகும். மற்றும் பெண் போராளிகள் நடத்தும் பத்திரிகை-சுதந்திரப்பறவை, சஞ்சிகைகள் இங்கு வெளிவருவதும் பெண்களே தீர்மானிக்கும் முடிவெடுக்கும் நிலையில் இருப்பதனையும் தம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் தமது கொள்கைகளை பிரகடனப்படுத்தவும், வளர்க்கவும் உதவியாக அமையும்.

இன்று இலங்கையில் பன்னாட்டு நிறுவனங்களது செறிந்த வியாபாரமோ-அதோனோடொட்டிய காலாச்சாரமோ, பல்வேறு ஊடக கலாச்சாரமோ, மலிகைப்படங்களின் பாதிப்போ இடம்பெறாத ஒரு தேசம் என்றால் அது வன்னிப்பெருநிலப் பரப்பாகவே இருக் கிறது.
இதனால் இங்கு இருக்கும் ஒவ வொரு விடயங்களும் தனித்துவமானதாகவும், சூழல்சார்ந்ததாகவும், நிலைத்து நிற்பதாகவும் வலுவுடன் விளங்குகிறது. இவ வகையில் தமிழீழப் பெண்களும் அவர்கள் வளர்த்தெடுப்பும் ஆரோக்கிய மானதாக அமைந்துள்ளது.

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 5 கு. தீபா

போகுமிடமெல்லாம்,
கணவனில்லாமல் தனியே வாழும் பெண்கள் அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனது மனைவி பிள்ளைகளைத் துறந்து இன்னொரு பெண்ணுடன் கண்ணெதிரே வாழும் கணவன், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விட்டுப் பிரிந்து சென்று வேறொரு திருமணஞ் செய்து வாழும் கணவன், "வேலையாப் போனவர் வரேல்லை" என்ற காரணத்துடனான கணவன் என்று பலவிதக் கணவன்மார்களை இழந்து பல பெண்கள்.

பெருந்திரளான மக்கள் நெருங்கி வாழ்வதால் இவ விகிதம் கூடுதலாகத் தென்படுகிறதா அல்லது உண்மையிலேயே சமூகத்தில் சீர்கேடு மலிந்துவிட்டதா என்று ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்.

பெண்களில் ஒரு சாரார் கணவனின்றித் தனித்து வாழும் துணிவைப் பெற, இன்னுமொரு சாரார் தனதும் குடும்பத்தினதும் கௌரவம் பேண வேண்டி அனைத்து வேதனைகளையும் தாங்கி மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். அவர்களிற் சிலர் ஏதோ ஒருவகையில் அவ வழுத்தத்தை விடுவிக்கும் வகையில் மேலதிக உணவு, உடை, ஆபரணங்கள் என்று தமது கவனத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்.
ஒரு சிலர்அதுதான் என் தலைவிதி என்று வாழ முற்படுகின்றனர்.

மிகவும் மென்மையான போக்குடன் வளர்க்கப்பட்ட பெண்கள் புத்தி பேதலித்து போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருபது வயதுடைய இளம் பெண்ணொருவர் முன் சூல்வலியெனும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில குழந்தை இறந்தது தாய்க்கு நன்மையே என அப்பெண்ணின் தாயாரும் ஏனையோரும் ஆறுதலுற்ற நிலையில் அவ விளம் பெண் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். குழந்தை இறந்ததே அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணம் என்று ஏனையோர் நம்பியிருக்க உண்மை வேறாக இருந்தது. கணவனுக்கும் அப்பெண்ணிற்கு மிடையில் ஏற்பட்ட பிணக்கும் வைத்தியசாலையில் நோயுற்றிருந்த காலத்தில்கூட கணவன் வராததும் அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணமாக இருந்தது. மன நிலைக்குழப்பத்தில் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் தாயின் மேல் எறிந்து "இவதான் எல்லாத்துக்கும் காரணம்" என்று கூறியபோது நானும் அதையே உணர்ந்தேன். தனது உடல்நிலை தொடர்பாகவோ, தனது பிள்ளை தொடர்பாகவோ எந்த முடிவையும் தானே எடுக்க முடியாது அனைத்திற்கும் தாயையே எதிர்பார்த்திருக்கும் வகையில் அப்பெண்ணின் வளர்ப்பு இருந்தது. வாழ்வின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ளும் திடமற்ற மென்மைப்போக்குடன் அப்பெண் வளர்க்கப்பட்டிருந்தாள்.
அதன் விளைவு!?
"என்ரை பிள்ளை வீட்டைவிட்டு வெளியிலை போகாள். அவவுக்கு ஆட்களைக் கண்டாப்பயம். வடிவாக் கதைக்கமாட்டா. சரியான சொப ற் அவ" என்று தன் பிள்ளையைப் புகழ்ந்து பிழையான பாதையில் வழிகாட்டும் தாய்மார் வெளியுலகையும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொள்ளும் திடமிக்க சிந்தனைத் தெளிவுடன் தமது பிள்ளைகளை வளர்த்தால் என்ன?

"உயர்கல்வி, உயர்தொழில், காதலித்தவனையே கைப்பிடித்த மகிழ்ச்சியான திருமணம், உயர்தர வாழ்க்கைமுறை, சமநிலையில் தன்னை மதித்து நடக்கும் கணவன், சிறிதும் பெரிதுமாகச் சிற்சில தனிப்பட்ட எதிர்கால இலட்சியங்கள் என என் வாழ்க்கை நம்பிக்கையூட்டுவதாகத்தான் இருந்தது. ஆனால் குடும்பத்தில் ஏற்படும் சிறு குழப்பங்கள், பிணக்குகளின்போது எனது கணவரின் விமர்சனங்கள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. எனது சமத்துவநிலை கண்டனத்துக்குரியதாகி என் நிலையைக் கேள்விக்குறியாக்குகிறது. என் நடத்தையையே சந்தேகத்திற்குரிய தாக்கிக் கேள்வி கேட்கும் கணவரை அனுசரித்துப் போவதையே நான் விரும்பவேண்டியிருக்கிறது. தவிர எனது பிரச்சினைகள் வெளியே எனது நெருங்கிய உறவுகளுக்குத் தெரிய வருவதுகூட எனது கௌரவத்திற்குப் பங்கம் என்பதால் என் மனதிற்குள்ளேயே வைத்துக்குமைந்து எந்நேரமும் நான் ஒரு மன அழுத்த நிலையிலேயே இருக்கிறேன்"

இது ஒரு குடும்பப் பெண்ணின் வேதனை மிகுந்ததொரு வாக்குமூலம். தனது நடத்தையையே கேள்விக்குள்ளாக்கி கணவன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போது கூட அவனை விட்டுப் பிரியாதது 'தமிழ்ப் பெண்மை'.

நூற்றாண்டு காலமாக எமது பெண்களை ஆணை விடக்கீழான நிலையில் வைத்திருக்கும் மரபைக் கொண்டவர்கள் நாம். இந்நூற்றாண்டு காலக் கருத்துப்பதிவுகளைக் கணத்தில் தூக்கியெறிந்து சமூகம் மாறுவதென்பது சாத்தியமற்றதொன்றே. எனினும் சிறிது சிறிதாக மனப்போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலச் சந்ததியினரின் கருத்தமைவுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து புதியதொரு பரம்பரையை உருவாக்கும் என்று நம்புவோம்.

மேலே கூறிய பெண்ணைப் போன்று தன் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெண்கள் சமூகம் ஒன்று உருவாவது ஒரு மாற்றத்தின் அறிகுறியே. ஏனெனில் இதுவரை காலமும் நம் பெண்கள் குடும்பத்தில் தம் நிலை என்ன என்பதையே அறிந்தவர்களாக இருக்கவில்லை. தாமும் சமநிலையில் மதிக்கப்படவேண்டும், தமது தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாது என எதிர்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய மாற்றமே. கல்வியறிவு பெற்ற தொழில் பார்க்கும நடுத்தரவர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வதைவிட இப்போதெல்லாம் கீழ்த்தட்டு வர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வது அதிகமாகவே உள்ளது.

நீதிமன்றங்கள் பெண்ணின்பால் இரக்கங்கொண்டு அளிக்கும் தீர்ப்புகளை மறுதலித்து தமக்குத்தாமே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் புதுயுகப் பெண்களாக அப்பெண்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனது கணவன், எனது உரிமை, அவன் என்னுடனேயே வாழ வேண்டும் என்று இடையில் வந்த இன்னொரு பெண்ணுடன் உரிமைப்போர் நடத்திக் கணவனை மீட்டு வந்த காலம் போய், 'என்னை மறந்து இன்னொரு பெண்ணுடன் சென்றவன் எனது கணவனல்ல, அவன் எனக்கு வேண்டாம ' என்று மறுக்கும் துணிச்சலுள்ள பெண்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு பெண், இளமையும் துடிப்பும் வேலையில் ஆர்வமுமிக்க அப்பெண்ணின் நெற்றி எந்தவித அடையாளமுமின்றி எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும். திருமணமாகாத சிறுபெண் என்று எண்ணியிருந்த எனக்கு அப்பெண் திருமணமானவர் என்ற உண்மை ஆச்சரியமளித்தது. அத்திருமணத்தின் சோக முடிவுரை சிறிதளவுகூட அப்பெண்ணின் முகத்தில் தென்படாதது அதைவிடப்பெரிய ஆச்சரியம். "இன்னொரு பொம்பிளையோட அவருக்குப் பழக்கம் இருந்ததக்கா. கனநாளா எனக்குத் தெரியும். தெரியாதது போல பொறுத்துப் போனனான். ஆனா வரவர எனக்கு அடி, பேச்சு என்று ஒரே பிரச்சினை. காசு கொண்டு வா என்று ஒரே கரைச்சல். அவவுக்குக் கொடுக்கிறதுக்காக. நான் என்ரை உரிமையை வெளிக்காட்ட வேண்டுமென்றதுக்காக நீதிமன்றில் கேஸ் போட்டனான். கேஸ் என்ரை பக்கமாத்தான் தீர்ந்தது. ஆனா நான் சேர்ந்து வாழமாட்டன், அவவோடை போகட்டு மென்று சொல்லிப் போட்டன். பிள்ளையளுக்குக் கொஞ்சக் காசு கட்டச்சொல்லி கோர்ட் சொன்னது. நான் அதுவும் வேண்டாமென்று சொல்லிப்போட்டன். பிச்சை எடுத்தென்றாலும் என்ரை பிள்ளையளை நான் வளர்ப்பன்" தெளிவும் உறுதியுமாக வெளிவந்தன வார்த்தைகள். அந்தத் தெளிவும் உறுதியும்தான் அந்தப்பெண் அமைதியாக சந்தோசமாக வாழ்வதன் ஆதாரம். இத்தெளிவு எத்தனை பேருக்குக் கைவரும்.

'திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இறுதி இலக்கு' என்ற சமூகத்தின் கருத்துப்படிமம் திருமணம் தவிர்ந்தும் ஒரு வாழ்க்கை உள்ளது என ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை எமது பெண்களுக்கு வழங்கவில்லை.

பெரும்பாலான பெண்கள் நிலையான, நிறைவான திருமண வாழ்க்கையை விரும்பும் போக்கு சரியானது, யதார்த்த பூர்வமானது. ஆனால் அநீதிகளும் கொடுமைகளும் இழைக்கப்படும்போது அவர்களின் வாழ்வு அத்துடன் முடிந்துவிடக்கூடாது. அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், அவற்றினால் நிலைகுலைந்து போய்விடாமல் வாழ்வின் தொடர்ச்சியை திடமான மனதுடன் தாம் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ளவும் அவர்கள் துணிவு பெற வேண்டியிருக்கிறது.
- கு.தீபா -

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 4 கு. தீபா

சமூகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய
போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமூதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும்.
வீடும் நாடும் வளம்பெறும்

பெண்ணிலை மாற்றம் தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் யாரது கருத்திற்கும் எட்டாமல் சத்தமேயில்லாமல் புரட்சி ஒன்று நடந்துகொண்டுதானிருக்கிறது. தாங்கள் ஒரு புரட்சி செய்வதை அப்பெண்கள் அறியாமலிருப்பதும், அப்பெண்ணின் புரட்சிகர நடவடிக்கையைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் போவதோடு அதனை விமர்சிப்பதும் அத்தகைய புரட்சியை மேற்கொள்ள பிறபெண்கள் முயலாததற்குக் காரணமாக அமைகிறது.
கல்வியறிவு, பொருளாதாரப்பலம் என்பனவற்றையெல்லாம் மீறி ஒரு பெண்ணின் தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது, அப்பெண் பொங்கியெழும் சம்பவங்கள் இடம்பெறினும் பின்னர் அப்பெண்ணுக்குப் போதிய ஆதரவு சமூகத்திலும் குடும்பத்திலும் கிடைக்காமற் போவது அப்பெண்ணை குற்றவுணர்விற்கு உள்ளாக்குகிறது. தான் காதலித்த ஒருவனை ஒரு பெண் மறுக்கத் தலைப்படும்போது, அப்பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாகிறது. சமூகத்தின் அப்பார்வை ஆணிண் அடக்கு முறைகளுக்குப் பெண்ணைப் பணிந்து போகச் செய்கிறது.
தான் காதலித்த ஒருவன், 'சீதனமில்லாமல் வீட்டுக்காரர் கல்யாணம் செய்யவிட மாட்டினமாம்' என்று தன் காதலைப் பெற்றோரைக் காட்டி விலை பேசிய போது, அவனைத் திருமணம் செய்வதற்காக இரண்டு வருடங்கள் உழைத்துப் பணம் சேர்த்தார் ஒரு பட்டதாரிப்பெண். இரண்டு வருடக் கடின உழைப்பின் பின் பணத்திற்காக என்னை மறுதலித்த ஒருவன் என்ற எண்ணம் மனதில் விதைக்கப்பட்ட பின்னும் அப்பெண் அவனை மணக்கத் துணிந்தது காதலுக்காகவல்ல, குடும்பத்தின், சமூகத்தின் நிர்ப்பந்தத்திற்காகவே. தான் அவனை மறுப்பின் தனதும் தன கீழுள்ள சகோதரிகளினதும் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற நிலையில் அப்பெண் மனதில் தோன்றிய வெறுப்புடனேயே மணவாழ்க்கைக்குள் நுழைகிறாள்.
இன்னொரு பெண்ணோ பலவருடங்களாகத் தன்னை விரும்பிய ஒருவன் சீதனம் வேண்டித் தன்னை மறுத்த போது, அவனை மறுக்கும் உரிமை தனக்குமுண்டென உணர்ந்தாள். திருமண தினத்தன்று அருட்தந்தை 'இவரைத் திருமணம் புரியச் சம்மதமா?' என வினாவியபோது அவனை மறுத்தாள். 'தான் செய்தது சரியே' என்ற நிமிர்வுடன் அவள் வெளியேறிச்சென்ற போது அந்த 'நிமிர்வு' சமூகத்தின் பார்வையில் 'திமிர்' ஆனது. அந்த நிமிர்வை அவள் தொடர்ந்து பேண முடியாத வகையில் குடும்பமும் சமூகமும் அவளை நிந்தித்தபோது 'நீ செய்தது சரியே' என அவளைத் தட்டிக்கொடுத்து உளப்பூர்வமான ஆதரவைத் தர யாரும் வராத நிலையில், பிறப்பாலும் வளர்ப்பாலும், 'ஒரு தமிழ்ப்பெண் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்றூட்டப்பட்ட உணர்வுகளே அவளை மனச்சிதைவு நிலைக்குள்ளாக்கியபோது அவளது புரட்சி பயனற்றதாகிப்போனது.
சூழ நின்ற சமூகம், அப்பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மன வேதனையையும், அதன் பலனாகவே எதிர்காலத்திலும் தன் திருமண வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய முடிவையெடுக்க அவள் துணிந்தாள் என்பதையும் புரிந்துகொள்ளாது. 'ஒரு பொம்பிளை இப்பிடியே நடக்கிறது' எனக் கடுமையாக விமர்சித்தது. மறைமுகமாக 'ஒரு ஆம்பிளை செய்தாலும் பரவாயில்லை' என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டது. தன் தன்மானத்திற்கு விழுந்த அடியைத்திருப்பிக்கொடுக்க முனைந்த அவள் நிமிர்வு 'அவளுக்கு ஆணவம் தலைக்கேறிப்போச்சு' என விமர்சிக்கப்பட்டது. இத்தகைய விமர்சனங்கள் அப்பெண்ணைத் தன்னுள் மேலும் ஒடுங்கச்செய்தது. இப்பெண்ணுக்கு உளப்பூர்வமான ஆதரவைக் கொடுத்து இனிவரும் வாழ்க்கையை அவள் நம்பிக்கையுடன் வாழ வழிகாட்டப்போவது யார்?
பெண்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்துத் தமது வாழ்வைத் தாமே தீர்மானிக்கத் தயங்குவதற்குச் சமூகத்தின் இத்தகைய விமர்சனங்களே காரணமாக அமைகின்றன.
எதிர்பார்க்காத இடத்தில் இன்னொரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் 'இந்தப் பெண்ணிடம் இவ வளவு தெளிவா? என ஆச்சரியப்படவைத்தன. பதினேழு வயதுடைய அப்பெண் கல்வியறிவோ, பொருளாதாரப் பலமோ அற்றவள். ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் ஏந்திய வண்ணம் வந்த அப்பெண்ணை ஏனைய பெண்கள் நோக்கியவிதம், சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலொன்றை அவள் புரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அப்பெண்ணுடன் தனியே பேசமுற்பட்ட எனக்கு அப்பெண்மேல் பெருமதிப்பு ஏற்பட்டது. திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் ஒருவனிடம் தன்னை இழந்து கர்ப்பிணியானாள். திருமணம் செய்ய அவன் மறுத்தபோது நீதிமன்றத்தை அணுகினாள். அவளைத் திருமணஞ்செய்யும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அப்பெண் எடுத்த முடிவு வியக்கத்தக்கது.
'என்னை ஏமாத்தினவனை ஏனக்கா நான் கல்யாணம் செய்யவேணும்? என்ரை பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆரெண்டு சனத்துக்குக் காட்டத்தான் நான் கோர்ட்டிற்குப் போனனான்' சுயமரியாதை மிக்கதொரு பதில். சமூகத்தினரால் ஏற்கமுடியாத பதில். ஏனெனில் சமூகத்தின் பார்வையில் அவள் நடத்தை சரியில்லாதவள் பிள்ளை, தகப்பன் பேர் தெரியாத பிள்ளை. கூலி வேலைக்குச் சென்று தன் மகனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அப்பெண்ணை அவளைச் சூழவுள்ளோர் மதிக்கத் தவறியதேன்?
அரச திணைக்களமொன்றில் தொழில் புரியும் பெண்ணொருவர் சோகம் ததும்பிய முகத்துடனேயே தினமும் வேலைக்கு வருவார். எந்நேரமும் 'அவர்லு} அவர்லு}' என்று தனது கணவரைப்பற்றியே ஏதாவது கூறிக்கொண்டிருப்பார்.
சிறிது காலமாக எதுவும் பேசாது அப்பெண் அமைதியாயிருந்தது ஆச்சரியமளித்தது. 'என்ன கதையையே காணேல்லை' என்ற கேள்விக்குப் பதிலாக அப்பெண் கண்ணீர் உருக்கத் தொடங்கினாள்.
திருமணம் செய்த நாளிலிருந்தே 'நான் உன்னை வீட்டுக்காரரின்ரை ஆய்க்கினைக்காண்டித்தான் கட்டினனான்' என்று சண்டைபிடித்து அப்பெண்ணை உளவியல் ரீதியான வன்முறைக்குள்ளாக்கிய அவளது கணவன், அச்சண்டையின் உச்சக்கட்டமாக குழந்தையைப் பிரசவித்த பதினான்காம் நாள் தனது அடிவயிற்றில் அடித்தததாகக் கூறி 'இப்பவும் அடி வயிற்றிலை அந்த வலி நிரந்தரமாத் தங்கீற்றுதக்கா' என்று அழுதாள்.
அண்மையில் தனது கணவன் ஒரு பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்ததைக் கூறியபோது, வேதனையிலும் அவமானத்திலும் அவள் முகம் கன்றியது. 'என்னாலை அந்த அவமானத்தைத் தாங்க முடியேல்லையக்கா அப்பவே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டை போயிட்டன். தாயும் மகனுமாவந்து நிற்கினம். மணவிலக்குத் தரட்டாம், சீதனமா வாங்கின காசைத்திருப்பித் தாங்கோ, மணவிலக்குத் தாறன் என்று சொல்லிப்போட்டன். என்ர காசை ஏனக்கா நான் விடுவான்' என்று ஆவேசப்பட்டாள். இவ வளவு துணிச்சலும், தன்னம்பிக்கையும் உரிமைக்காகப் போராடும் குணமும் இந்தச் சின்ன உருவத்தினுள்ளா என்ற ஆச்சரியங்கலந்த மௌனத்தில் இருந்த என்னை 'என்னக்கா! நான் செய்தது பிழையே, நீங்களும் பேசாமல் இருக்கிறீங்கள்?' என்று கவலை தொனிக்க வினாவினாள். சுற்றமும் உறவும் ஏற்படுத்திய கண்டனங்களும், விமர்சனங்களும் உளாPதியான ஆதரவைத் தேடும் மனோநிலையை அவளுள் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆதரவுடன் அவள் கைகளைப் பற்றினேன். 'மூன்று வருட காலமாக வேதனையை அனுபவித்த உங்களுக்குத்தான் நீங்கள் எடுத்த முடிவின் பரிமாணம் தெரியும். நீங்கள் சரியான முடிவையே எடுத்திருப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனத்தையிட்டுக் கவலைப்படாதீர்கள்' என்று கூறினேன்.
'மூன்று வருடத்தில் எனது திருமண வாழ்க்கை முறிந்தது எனக்கு எவ வளவு வேதனையாயிருக்கும் என்று இந்தச் சனத்திற்கு ஏனக்கா விளங்குதில்லை?' என்று கண்ணில் நீருடன் வினாவினாள். 'உங்கள் வாழ்க்கை உங்கள் பொறுப்புத்தான். நீங்கள் யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய தேவையில்லை. பிள்ளையை நல்லவனாக வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்' என்று மட்டுமே என்னால ஆறுதல் கூறமுடிந்தது.
சமூகத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமுதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். வீடும் நாடும் வளம்பெறும்.

-கு. தீபா

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 3 கு. தீபா

கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது.

'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்' என்ற சொற்பதம் வழக்கொழிந்துதான் போய்விட்டது. எனினும் வெறும் கல்லாகவும் பதா புல்லாகவும் இருப்பவா களையெல்லாம் கணவன் என்று தொழுது நிற்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம்தான் இல்லை.
கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது.
கல்வியறிவும், பொருளாதாரப்பலமும் இன்மையால் வாழ்வதற்கான தன்னம்பிக்கையற்று பெரும்பாலான பெண்களிருக்க கல்வியறிவும், பொருளாதாரப் பலமுமிக்க பெண்களும் வாழ்வதற்கான தன்னம்பிக்கையை இழப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அடிப்படையிலேயே பெண்ணுடைய மனதில் 'நான் பெற்றோரிலும் சகோதரர்களிலும் பின்னர் கணவனிலும் சார்ந்து வாழவேண்டியவள்' எனும் எண்ணக்கரு ஊட்டப்படுதல் காரணமாகவே ஏற்படுகிறது.
பெண்களின் கருத்தமைவில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமே இந்நிலைமையை மாற்றியமைப்பது சாத்தியமாகும். இளம் பெண்களின் மத்தியில் கருத்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாளைய சந்ததியை சிறந்த தன்னம்பிக்கை மிக்க சந்ததியாக உருவாக்க வேண்டும். ஏனெனில், ஒரு தாயே குடும்பத்தில் சகலதுமாகிறாள்.
அப்பெண்ணின் முன்னைய கர்ப பசரிதைகள் 'பாரப்பெண்' என நிமிர்ந்து பார்க்கவைத்தது. 33 வயது தோற்றமோ, நாற்பதைத் தாண்டி நின்றது. ஏழாவது கர்ப்பம். ஏழ்மையும் ஏழ்மையினால் அதிகரித்துக் காணப்பட்ட முதுமையும் முகத்தில் கோலமிட்டன. பரிசோதனை முடிவுகளோ ஆபத்தின் அறிகுறிகளாக இருந்தன. உயர்குருதியமுக்கம், கணுக்கால்களில் அதிகவீக்கம், சலத்தில் புரதவெளியேற்றம், மங்கிய கண் பார்வை என அவற்றின் தாக்கம் அதிகளவில் இருந்தது. உடனடியாக அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியத்தை மருத்துவ மாதுக்கள் உணர்ந்தனர்.
"அம்மா! உடனை ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" என்று அம்மாவை அவசரப்படுத்தினர்.
"இல்லைப் பிள்ளை. நான் போய் ஆஸ்பத்திரியிலை இருக்க ஏலாது" என்ற அத்தாயின் பதில் அனைவரிற்கும் அதிர்ச்சியாக இருந்தது.
"அம்மா உங்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கென்றும் அதாலை முன்சூல்வலி என்ற நோய் வர இருக்கென்றும் வடிவா விளக்கமாகச் சொல்லிப்போட்டம். உடனை நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்"
"எனக்குப் பிள்ளைகளைப் பார்க்க ஆளில்லை. எனக்குப் போக ஏலாது" என்ற அத்தாயின் நிலை மனதை வருத்தினாலும் அவர்கள் விடவில்லை.
"அம்மா, உங்கடை அவரோடை விட்டிட்டுப் போங்கோ" என வழிகாட்ட முனைந்தனர்.
"அவர் பார்க்க மாட்டாருங்கோ. அவர் ஒரே குடி. இப்ப இரத்தமாகவும் போகுது. உழைப்புமில்லை. என்னை ஓரிடமும் போக அவர் விடமாட்டார்" "உங்கடை மகள் பார்ப்பாதானே. விட்டுட்டுப்போங்கோ" என்று கூறியபோதும் பதின்நான்கு வயதுச் சிறுமி பிள்ளைகளைப் பார்ப்பாளா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. எனினும் அச்சந்தேகத்தைத் தகர்த்தது அத்தாயின் பதில். "அவதான் விறகுகட்டிக் கொண்டுவந்து குடுத்து உழைக்கிறவா"
தீர்க்க முடியாத பல சிக்கல்களை அத்தாய் பதிலாகத் தருவதை உணர்ந்தும், "அம்மா, உங்கடை பிள்ளையளை நீங்கள் ஆஸ்பத்திரியாலை வரும்வரைக்கும் பராமரிக்க நாங்கள் ஒழுங்கு பண்ணுறம் நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" எனும் பெரும் உதவியைச் செய்ய மருத்துவ மாதுக்கள் முன்வந்தனர்.
"இல்லையுங்கோ, அவர் விடார். சொந்தக்காரர் வீட்டை போகவே விடமாட்டார்" என்ற பதில் முகந்தெரியாத அக்கணவன் மீது கோபத்தை ஏற்படுத்தியபோதும் அப்பெண்ணின் நிலைக்கு இரங்கி "அப்ப நீங்கள் என்னம்மா செய்யப்போறீங்கள்?" என்ற கேள்விக்கு, "அது எனக்கு ஒன்றும் நடக்காதுங்கோ. கடவுள்விடார்" எனும் அறியாமை மிக்க பதிலைச் சொல்லி சலிப்புடன் வாயை மூடவைத்த பெண்ணின் நிலை என்ன?
பொறப்பற்று, பிஞ்சு மகளை உழைப்பிற்கனுப்பி, குடித்து, கௌரவம் என்ற பெயரில் தன் சுயநலத்திற்காய் மனைவி பிள்ளைகளை அடிமையாய் வைத்திருக்கும் அக்கணவனை இனங்காணத் தெரியாத, சுயமாய் முன்னின்று உழைத்துக குடும்பத்தைச் சீரழிவிலிருந்து காக்கத் தெரியாத அப்பெண் தன் மகளுக்குக் கற்றுக் கொடுக்கப் போவது எதனை? பதின்நான்கு வயதில் விறகு சுமக்கும் அச்சிறுமி அச்சுமையிலிருந்து விடுபடவென பதினாறு வயதில் திருமணம் செய்து, தான பெறப்போகும் மகளுக்கும் இதையேதான் கற்றுக்கொடுக்கப் போகிறாள். சங்கிலித் தொடராய் சந்ததிகளுக்குக் கடத்தப்படும் இவ வெழுதா மரபை எங்கே? யார்? முறித்தெழுதப் போகிறார்கள்?
தான் தனது சொந்த மச்சானையே மணந்ததையும், அவனது அடி, உதை தாங்காமல் மூன்றாம் மாதமே பூநகரியிலிருந்து கால்நடையாய் புதுக்குடியிருப்பு வந்ததையும் கதைகதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள் அவ விளம்பெண். பசியோட தான் நடந்து வந்த கதையை அவள் கூறக்கேட்டு நான் "பாவம் வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்டுவிட்டாள். இனித்திருமணமே செய்து கொள்ளமாட்டாள்" என மனதுள் எண்ணிக் கொண்டேன்.
இதன்பின்னர் இரண்டு மாதங்களே சென்றிருக்கக்கூடும். ஒரு நாள் நள்ளிரவில் அப்பெண் ஒருவனோடு வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள். கையில் பச்சைக் குழந்தையுடனும், அருகில் இரண்டு வயதுக் குழந்தையுடனும் கண்ணில் நீருடனும் வந்திருந்த பெண் அவனின் மனைவியென அறிந்து நான் திகைத்துப் போயிருந்தேன். வீடுவீடாக "அவரைக் கண்டனீங்களோ" என வெட்கமும் துக்கமும் அலைமோத அப்பெண் கேட்டுத்திரிந்தாள்.
குழந்தைகளையும் தன்னையும் நட்டாற்றில் விட்டுப்போனவனை உதறித்தள்ளித் துணிந்து வாழும் மனப்பலமில்லாது வீடு வீடாகத் திரியும் இப்பெண் ஒருபுறம்,
நன்கறிந்த ஒருவனே பொய்த்துப் போனபின்பும் அண்மையிலே அறிமுகமான, குடும்பஸ்தன் என நன்கறியப்பட்ட ஒருவனோடு வெளியேறி தன் தங்கிவாழ்தலுக்குத் துணை தேடிக்கொண்ட பெண் ஒருபுறம்,
பெண்ணெனப்படுபவளின் வாழ்க்கை திருமணத்தில் முடியவேண்டும், திருமண வாழ்க்கையிலும் ஆணே பற்றுக்கோலாக இருக்க வேண்டும், ஆணின்றி வாழ்க்கை இல்லை எனக் காலங்காலமாய் ஊறிப்போன உணர்வுகளுடன் அழுந்தி, அழிந்து கொண்டிருக்கும் பெண்களை வெளிக்கொணர்வது எப்படி?
அறிவும், அழகும் ஒருங்கே பெற்ற பெண் ஒரு சிறந்த ஆசிரியை, பல்கலைக்கழக அனுமதி பெற்றும் அவர் செல்லாததற்குக் காரணம் காதல். ஏற்கனவே திருமணமாகிய, பல பெண்களுடன் தொடர்புடையவன் என்று பலரால் கூறப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழவைப்பேன், வாழுவேன் என்ற நம்பிக்கையுடன் கோலாகலத் திருமணத்துடன் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
சில வாரங்களின் முன் தனது திருமணப்படங்களைக் காட்டிச் சென்ற அப்பெண் தற்கொலை செய்துகொண்டார் எனும் செய்தி என்னைத் திகைக்க வைத்தது.
பல வருடங்களாகக் காதலித்து இப்படிப்பட்டவன்தான் என்று அறியப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழலாம் என்ற நம்பிக்கையைக் கைவிட்டமை ஒருபுறமிருக்க, தகுதியற்ற ஒருவனைத் தன்வாழ்வின் மையமாகக் கொண்டு, அந்த மையம் திசை மாறியமைக்காகத் தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் அறிவு எங்கே சென்றுவிட்டது?
திருமணமென்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதைவ}டவும் கல்வி, தொழில், இலட்சியங்கள் வாழ்க்கையாக அமையலாம் என்றும் அப்பெண்ணுக்கு அறிவூட்டத்தவறியது கல்விமுறைமையின் குற்றமா? சமூகத்தின் குற்றமா?
கல்வியறிவு, தொழில், பொருளாதாரம் அனைத்துமிருந்தும் வாழ்வதற்கான நம்பிக்கை இப்பெண்ணிற்கு ஏன் இல்லாமற் போனது? இளம் சந்ததியினரை வழிகாட்டும் தலையாய பணியைச் செய்யும் ஒரு ஆசிரியை தன் மாணவர்களுக்கு விட்டுச்சென்ற செய்தி அவர்களை எவ வாறு வழிநடத்தப் போகின்றது?
நாட்டின் குடிமகன் ஒருவனை உருவாக்குவதில் பெரும்பங்குவகிக்கும் ஆசிரியர்கள் இதையிட்டுச் சிந்தித்தால் என்ன?



விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள் -அர்த்தநாரி

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித்தெரியும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.
உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின் இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு தன் மீது வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப்போராடுதல், மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல்.
பெண் தனக்குத்தானே விரும்பி அணிபவை, பெண்ணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அணிவித்துவிடுபவை என ஆணாதிக்க சமூக அமைப்பால் பெண்ணைச் சுற்றியிருக்கும் விலங்குகள் அனைத்திலிருந்தும் விடுபட வேண்டிய அவசியம் பெண்ணுக்கு உண்டு. இவ விலங்குகளில் பல அறிவின் துணைகொண்டு சுலபமாக அகற்றப்படக்கூடியவை, சில அதிகப் பிரயத்தனத்துடன் அகற்றப்பட வேண்டியவை. இன்னும் சில கூட்டு முயற்சிகளினூடாக மட்டுமே அகற்றப்படக் கூடியவை. வேறும் சிலவோ அடித்து நொருக்கித்தான் அகற்றப்படக்கூடியவை. இதில் பெண்ணின் ஆளுமையை மிக மோசமாகச் சிதைக்கக்கூடிய வல்லமையுள்ள அதேசமயம் அறிவின் துணைகொண்டு மிகச் சுலபமாக அகற்றக்கூடிய ஒரு விலங்கு தொடர்பான ஒரு பொதுப்பார்வையை தர்க்கரீதியாக ஆராயும் முயற்சியே இக்கட்டுரையாகும்.



சாமத்தியச் சடங்கு
வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத் தொழிற்பாடுகள் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்கு தயாராகிவிட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடூடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.


பழையன கழிதலும் புதியன புகுதலும்
துஸ்ட ஆவிகள் தீண்டாதிருக்கும் பொருட்டு குப்பை, விளக்குமாறு போன்றவற்றில் இருத்தி நீராட்டுதல், வேப்பிலை சுற்றுதல், கழிப்புக்கழித்தல் என்பனவும், இவள் என் மகனுக்குரியவள் என்ற உரிமையைத் தக்கவைக்கும் பொருட்டு தாய் மாமனுக்கு சடங்கில் முதல் முக்கியத்துவம் கொடுப்பதும், 'தீட்டு' சீலையை சலவைத் தொழிலாளியிடம் ஒப்படைப்பதன் மூலம் பெண் பருவமடைந்த செய்தியை ஊருக்கு உறுதிப்படுத்தும் பொருட்டு ஊர் முழுவதும் தொடர்பு பேணும் சலவைத் தொழிலாளிக்கு முக்கிய இடம் கொடுத்தல் என்பன காலம் காலமாக இச்சடங்கின் முக்கிய அம்சங்களாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
பருவமடைந்த நாளிலிருந்து வீடு தவிர வேறு இடங்களுக்குப் போவதைத் தடுத்தல், பள்ளி வாழ்வைத் தடை செய்தல், கூடப்பிறந்த ஆண் சகோதரத்துடன் கூட நெருங்கி நின்று கதைப்பதைத் தடுத்தல் போன்ற இரு நூற்றாண்டுப் பழைமைகள் இன்றைய காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று சுட்டிக்காட்டிப் பேசுமளவிற்கு அரிதான நிகழ்வுகளாகி விட்டன.
'அனைவரிற்கும் கல்வி' என்ற சுலோகம் அயலவனின், வகுப்புத் தோழனின் தொழில் செய்யும் இடங்களில் உள்ள சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களை அறிந்துகொள்ள 'உதவியது போல், பண்பாட்டுப் படையெடுப்புகளும், பத்திரிகை போன்ற பொதுசனத் தொடர்புச் சாதனங்களும் உலக வாழ் நிலையை அறிந்துகொள்ளவும் அதைப் பின்பற்றவும் தூண்டியமையானது வேப்பிலை சுற்றுதல், பருவமடைந்த தினத்திலிருந்து ஒரு மாதமோ அதற்கு கூடிய நாளோ வீட்டு மூலைக்குள் முடக்கிவைத்தல், இரும்புத்துண்டும் கையுமாய் திரிதல் போன்ற மூடப் பழக்கங்களை இல்லாமல் செய்துவிட்டது மட்டுமன்றி, பருவமடைதல் கடவுள் செயல் என்ற நம்பிக்கையையும் போக்கடித்துவிட்டது.
ஆனால், இன்று கண்முன்னே நடைபெறும் சில அலங்கோலங்களைப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களே பரவாயில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதிலும் ஒன்றரைத் தசாப்தங்களுக்கு முன்பு தமிழ் மண்ணில் நுழைந்த வீடியோ தொழில்நுட்பம் ஈழத்து அறிவுசார் வளர்ச்சிகளை உலகெங்கும் பரப்ப முயன்றதை விடவும் காரணகாரியத் தொடர்பற்ற, மனம் போன போக்கின்படி செய்யப்படுகின்ற, மூடநம்பிக்கைகளை விடவும் மோசமான புதிய புதிய சடங்குகள் புதிது புதிதாக மனித மூளையில் உதிக்கக் காரணமாக மாறியிருக்கிறது. சமூக விழிப்புணர்வு, அறிவூட்டல், பண்பாட்டுக்கலப்பு எது வந்தும் கூட மாற்றமடையாது பேய் பூதங்களில் நம்பிக்கை வைத்து உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படும் எத்தனையோ சடங்குகளை, ஆட்டங்காண வைத்து வெறும் சம்பிரதாயங்களாக மாற்றிய வல்லமை இந்த வீடியோ தொழில் நுட்பத்திற்கு உண்டு. இதன் வருகையுடன் சடங்குகளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பரவலாக இடம்பெறத் தொடங்கியதுடன் இந்த கண்மூடித்தனமான புதிய சடங்குகள் பெரும்பாலும் படித்த, நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே அதாவது மூடப்பழக்கங்களில் மூலத்தை அறிவுத்தேடலின், விழி கண்டறியும் வாய்ப்பும் அனைத்தும் டாம்பீக வாழ்வுக்குள் அமுங்கிப் போய்க்கிடக்கும் குடும்பங்களிலேயே அதிகம் கடைப்பிடிக்கப்படும் அவலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.


புதுப்புது நுட்பங்கள்
ஆளுயரத்திற்கும் அரையடி மேலாவது வேலியடைத்துக் குளிக்கும் பண்பாடு, நெருங்கிய உறவுகளுடன் மட்டுமே பால் அறுகுவைத்து நீராட்டும் பண்பாடு ஊர் முழுடூவதையும் கூட்டி ஊர்ப் பொதுக் கிணற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று நீராட்டும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கன்னிப் பெண்கள் தவிர்க்கப்பட்டு வயது வந்தபெரியவர்கள் மட்டுமே அதிகம் கலந்துகொள்ளும் நிகழ்வு, விதவிதமான நிறங்களில் நீர் நிறைத்து, ஒற்றை விழ ஒன்பதோ, பதினொன்றோ அதற்கும் மேலோ செம்பெடுத்துச் சென்று பிள்ளையின் தலையில் நீர் ஊற்றுதல், குத்துவிளக்கு எடுத்தல் பூப்போடுதல் என்று சிறுமியரையும், இளம்பெண்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் ஒரேவித ஆடை அலங்காரங்கள் முக்கியம் பெறுவதால், ஏழைப்பெற்றோருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் மனமகிழ்வுக்கு உரிய ஒரு நிகழ்வு தேவையற்ற மன உளைச்சலையும், சங்கடங்களையும், வரவுக்கு மீறிய செலவையும் ஏற்படுத்துவதுதான்.
தொட்டிக்குள் நீர் நிரப்பிப் பூக்கள் போட்டுப் பிள்ளை நீராடுவது போல் படம்பிடிக்கும் நிகழ்வு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களிடையே பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்பம், தொட்டி வாய்ப்புகள் மிகவும் குறைந்த வன்னி மண்ணில் இடப்பெயர்வால், ஏற்பட்ட வாழ்நிலைச் சூழலுக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை தோற்றுவிக்க, இப்போது நிலத்தில் கிடங்குவெட்டி மண் கரையாமல் அதன் மேல் தரப்பாள் (வுநுNவு) போட்டு அதற்குள் நீர் நிறைத்துப் பூக்கள் நிரப்பி நீராட்டு விழா நடத்துவது புதியதோர் பாணியாக மாறியிருக்கிறது.
பிள்ளையை நன்கு அலங்கரித்து மணவறை கட்டி வீட்டுச் சடங்குகளை முடித்தபின்னர் கோயில் கும்பிடுவதற்கு, பிரதான பாதையால் ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்துச் செல்லுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.
வெளிநாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்துவைக்க வேண்டி வந்தால், பிள்ளையை அலங்கரித்து ஆசை தீரப்பார்க்க முடியாமல் போய்விடுமாம் என்று தான் இப்படியெல்லாம் செய்கின்றோம் என்று செய்யும் செயல் எல்லாவற்றிற்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டிவிடுவது பொதுவாகிவிட்டது.


ஒன்றையொன்று வெல்லும் கேலித்தனங்கள்
'உன்னை விரும்புகிறேன்' என்று கடிதம் போட்டாலோ, நேரில் கேட்டாலோ உள்ளத் தெளிவுடன் பதில் சொல்வதை விட்டுவிட்டு கத்திபொல்லுடன் கிளம்பிவிடும் இரத்த உறவுகள், 'என் பிள்ளை கருத்தரிக்கும் தகுதி பெற்றுவிட்டாள்' என்று மேளதாளங்களுடன் ஊர்கூட்டிப் பறைசாற்ற எப்படிச் சம்மதிக்கின்றனர்?
வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொது இடங்களிலோ தவறுதலாக கை கால் பட்டுவிட்டால், முறைத்துப் பார்த்துச் சில சமயம் செருப்புக் கழற்றும் அளவுக்கே கோபப்படும் நாம் வெட்க உணர்வு எதுவுமின்றி பலர் முன்னிலையில் குளியல் காட்சிக்குத் தயாராக எப்படிச் சம்மதிக்கின்றோம்?
மாதக்கணக்கில் வீட்டு மூலைக்குள் முடக்கி, காலை மாலை என்று முட்டை, நல்லெண்ணெய், உழுத்தங்களி, சரக்கரைப்பு என்று ஊட்டமுள்ள உணவுகளின் அளவுக்கதிகமான திணிப்புக்கு எதிராக முரண்டு பிடித்து முற்றாக ஒழித்த எமக்கு, கழிப்புக்கழிக்கும் வரை இரும்புத் துண்டும், வேப்பிலையுமாய்த் திரிவதை இல்லா தொழித்து இரண்டு கிழமைக்கு முன்தாகவே பாடசலை, ரியூசன் என்று பறந்தோடும் வல்லமைபெற்ற எமக்கு 'நான் கருத்தரிக்கத் தயார்' என ஊர்கூட்டிப் பறைசாற்றும் இந்த அசிங்க நிகழ்வை மட்டும் ஏன் இல்லாமல் செய்ய முடியவில்லை? அதிலும் பொருளாதார வசதி குறைந்த பெற்றோரைப் பிடிவாதம் பிடித்தோ அல்லது பயமுறுத்தியோ வகுப்புத் தோழிக்கு எப்படி எப்படியெல்லாம் கொண்டாடினார்களோ அதேபோல் எனக்கும் செய் என்று நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நாம் வந்தது ஏன்..?
வேப்பிலை சுற்றுவதையும் இரும்புத்துண்டும் கையுமாய் திரிவதையும் மூடத்தனம் என்று உணர்ந்து கைவிடும் அளவுக்குச் சமூக விழிப்புணர்வு பெற்ற, படித்த பெற்றோர், அதைவிடவும் மோசமாக 'பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் உடற்தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான மாற்றம்' என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்ட பின்பும்கூட இத்தகைய காரியங்களில் கவனம் செலுத்துவது எப்படி?


தலைமுறை இடைவெளி
மனித வாழ்க்கைக் காலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக் கிடையிலான இடைவெளி நீண்டதாகவும் சிக்கல் வாய்ந்ததாகவுமே இருந்திருக்கின்றது. எனினும் அறிவியல் தொழில்நுட்ப வழி உருவான தொடர்புச் சாதனப்பயன்பாடும், பண்பாட்டுக் கலப்புகளும் இந்த முரண்பாட்டை ஒரு சில தசாப்தங்களாக மிகவும் சிக்கலாக்கியிருக்கிறது. மனித நடத்தைக் கோலங்களோ, வாழ்க்கைப் பாணியோ, சமூகப் பழக்க வழக்கங்களோ துரித மாற்றத்திற்கு உட்படும் அளவுக்கு தனிநபர் அனுபவங்களை குறிப்பாகப் பெற்றோரின் வாழ்வியல் அனுபவங்கள் - நடைமுறை வாழ்வுக்கான வழிகாட்டியாக ஏற்றக்கொள்ளும் மனப்பாங்கு உலகளாவிய hPதியில் மிகவும் குறைவாகவே உள்ளது. எந்தவொரு சமூகத்திலும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்திற்கும் தலைமுறை இடைவெளியின் அளவுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு. அதாவது இறுக்கமான பண்பாட்டு விதிகளைக்கொண்ட நம்மைப்போன்ற கீழைத்தேய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் சமூகப்பங்களிப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் வாழ்க்கைமுறை தலைமுறைக்குத் தலைமுறை எவ வித சிக்கலுமின்றி கடத்தப்படுவதால் தலைமுறை இடைவெளி குறைவு என்றும் நவீன சமூகங்களில் தனிநபர் ஒருவருக்குப் பல தெரிவுகள் இருப்பதால் அங்கு அதிகம் என்றும் மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எமக்கு முந்திய தலைமுறையில் பருவம் அடைந்த காலப்பகுதியிலிருந்தே சிறியவர் பெரியவர், ஆகிவிடுவார் குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணம் செய்து தாய்மைப்பருவத்தை 20 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் அடைந்துவிடுவர். ஆண் குழந்தைகள் தோட்டங்களில், தொழிற்சாலைகளில், வீடுகளில் மேலதிகப் பொறுப்பை எடுத்துவிடுவர். ஆனால் இன்று அப்படியல்ல.


இரண்டும் கெட்டான் பருவம்
நவீன கைத்தொழில் சமூகம் ஒன்றின் உருவாக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் இவர்களின் பொறுப்புக்களைச் சற்று பின் தள்ளிப் போட, சிறியவராகவும், இல்லாமல் பெரியவராகவும் மாறாமல் இருக்கும் 12-18 க்கு இடைப்பட்ட இரண்டும் கெட்டான் பருவமானது வளரிளம் பருவம் (ADOLESENCE) என 1904இல் G.STANLEY HALL என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டு இன்று தனிக்கவனம் எடுக்கப்படவேண்டிய ஒரு பிள்ளைப் பராயமாக்க கருதப்படுகிறது.
மனித வாழ்வின் ஏனைய பருவங்களைவிடவும் அதிக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு பருவமாக வாழ்க்கைப் போக்கையே திசைதிருப்பக்கூடிய அபாயங்கள் நிறைந்த ஒரு பருவமாக வளரிளம் பருவம் கருதப்படுகிறது. சூழலில் காணப்படும் பொருட்களைத் தோண்டித் துருவி ஆயிரம் கேள்விகள் கேட்டு விடை கூறமுடியாமல் பெரியோரைச் சங்கடப்படுத்தும் குழந்தைப்பருவத்தில் இருந்து 'நான் யார்? எனக்கும் என் குடும்பத்திற்கும், எனக்கும் என் பாடசாலைக்கும், எனக்கும் என் சமூகத்திறக்கும் தொடர்பு என்ன?' என்று தன்னைத் தானே தோண்டித் துருவும் நிலைக்கு மாறும் ஒரு பருவம் இது. தான் யார் என்ற குழந்தையின் சிந்தனையும், குழந்தை யார் என்ற பெற்றோரின் சிந்தனையும், தன்னை அளப்பதற்கு குழந்தை தெரிவு செய்யும் இலட்சிய நபரும் இணைந்த ஒரு கலவையே வளரிளம்பருவ சிறுவனோ, சிறுமியோ ஆகும். மிகவும் குறுகிய ஒருகாலப் பகுதிக்குள் தன் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (மார்பகவளர்ச்சி, ஆண்களின் உயர அளவின் வேகம், முடி வளர்தல்) தன் உடல் தொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம் (மாதவிடாய் வட்டம் தொடங்குதலும், ஆணுக்கு விந்து வெளியேறுதலும்) தன் உளப் போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றறுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை இப்பருவத்திற்கு உண்டு.
மிகவும் அபாயம் நிறைந்த இப்பருவத்தில் ஆளுமையையே சிதறடிக்கும் இந்தச் சாமத்தியச் சடங்கு ஆக்கபூர்வமான சமூகப்பிரசைகளை உருவாக்கிக் கொடுப்ப தற்கு பதில் ஆளுமை சிதைந்த, அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை மீண்டும் வழி நடத்திச் செல்லும்.


எங்கே நிற்கின்றோம்.?
வாங்கப்படவும் விற்கப்படவும் கூடிய ஒரு பொருள்தான் பெண். பிள்ளை பெறும் பிரதான கருவியான இப்பொருள் கருவளம் அடைந்துவிட்டது என்பதை ஊரறியச் செய்யவேண்டிய தேவையும், இப்பொருளை எவ வித தீங்கும் வராமல் பாதுகாக்கும் வகையில் சடங்குகள் செய்வதும் அறியாமை மிகுந்த எமது மூத்த தலைமுறைக்கு அவசியமானதாக இருந்திருக்கக்கூடும். அதேபோன்று வெளியுலகம் தெரியாது, அறிவூட்டல் வாய்ப்புக்கள் அற்று சமையலறைக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு பருவமடைதலும் அதன் வழி திருமணத்திற்குத் தயாராதலும் மகிழ்வூட்டக் கூடியதொன்றாகவும் இருந்திருக்கக்கூடும்.
ஆனால், இன்று அப்படியல்ல, அறியாமை இருளில் மூழ்கிக்கொண்டே எம்மை வழிநடத்திச் சென்ற எம் முன்னோரின் தடங்களைப் பின்பற்றிச் சென்ற காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி அறிவின் வாசல் அனைவரிற்கும் திறந்து விடப்பட்டிருக்கும் காலத்தில் நாம் நுழைந்து நீண்ட காலமாகிவிட்டது. எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் உலக நடப்பைப் பக்கத்து வீட்டு வானொலி, தொலைக்காட்சி வழியாகவோ அல்லது சந்திக்குச்சந்தி நடக்கும் சங்கதி அலசல் மூல மோ பார்க்கின்றோம், கேட்கிறோம். தாம் நேரே பார்த்து அறியாத பொருட்களில் அதீத நம்பிக்கை வைத்து அதையே கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மூடத்தன வாழ்க்கையில் இருந்து தர்க்க hPதியாக காரண காரியத் தொடர்பை கண்டறிந்து அதன் வழி நடக்கத் தொடங்கிய வாழ்நிலைக்கு நாம் நுழைந்து நூற்றாண்டுகள் இரண்டைக் கடந்த பின்பும் புதுப்புது மூடத்தனத்திற்கு ஆளாவதை பார்க்கும்போது இன்று வளர்ந்துவிட்ட அறிவியல், மூடப் பழக்கவழக்கங்களை களைவதற்குப் பதிலாக மூடப் பழக்கத்தை மேலும் நவீன வடிவில் வெளிக்கொணர்வதற்கு உதவியிருக்கிறதல்லவா? அல்லது பயன்படுத்தப்பட்டிருக்
கிறதல்லவா?
காட்டுமிராண்டிக்கால கட்டத்திலிருந்து இன்றைய அதி உச்சகட்ட நாகரீக வளர்ச்சிவரை எத்தனையோ இடர்பாடுகளை, வளர்ச்சிக்கட்டங்களை சந்தித்திருக்கின்ற மனித கமூகத்தின் சிந்தனை, வாழ்வைப் பண்படுத்தும் அம்சத்தில் ஏறுநிலையிலும் மனதைப் பண்படுத்தும் அம்சத்தில் இறங்கு நிலை நோக்கியும் நகர்ந்திருக்கின்றமையே வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டுவதுடன் பொதுநலத்தை மையப்படுத்திய வாழ்நிலை சுயநல நோக்குகளுக்குத்தாவிய காலம் முதற்கொண்டே மனப்பண்பாடு தேய்மானம் அடையத் தொடங்கிவிட்டது. சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம், நுண்ணறிவு என்பன நினைத்துப்பார்க்கமுடியாத மனித சாதனைகளுக்கு அடித்தளமிடும் அதேசமயம் மனதைப் பண்
படுத்தும் முயற்சியைக் 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற வாசகம் ஆக்கிரமித்துவிட்டது.
புதுப்புது மூடத்தனங்களை உருவாக்கும் இத்தகைய ஆபத்தான நிலை அபிவிருத்தி நோக்
கிய பாதையில் ஏற்கனவே நுழைந்துவிட்ட, நுழைந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தை மீண்டும் அடிமைத்தன சமூக அமைப்புக்குள் நிச்சயம் குப்புறத்தள்ளி விழுத்தும். இத்தகைய ஆபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் ஒரு சமூகப் பொறுப்புணர்வை அறிவூட்டல் வாய்ப்பும், பொருளாதார வாய்ப்பும் ஒருங்கிணைந்த பெண்கள் சமூகமாவது சுமக்க இனியாவது முன்வருமா?

நல்லதொரு தலைவி நாட்டின் வழிகாட்டி-தென்றல்

குடும்பமே தலைமைத்துவத்தின் தோற்றுவாய்
என்ன! தலைவி, தலைமைத்துவம் என்ற சொற்களைப் பார்த்ததுமே பயந்துவிட்டீர்களா? அல்லது, இதற்கும் எங்களுக்கும் எட்டாப் பொருத்தமென்று எட்டிநடை போடுகிறீர்களா?
பரவாயில்லை, மீன்களைப் போன்று துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடும் உங்கள் விழிகளை சற்றே இப்பக்கத்தில் ஓடவிடுங்கள்.
ஆமாம். அவசரமில்லாது வாசித்து மகிழ்ந்த சிறுகதையோடு சேர்த்து இதனையும் வாசித்துப் பாருங்களேன். உங்களுக்குள்ளே உங்களையறியாமலே ஒளிந்துகொண்டிருந்த, இல்லை இல்லை ஒளிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு 'குட்டித்தலைவி' மெல்ல எட்டிப் பார்த்துச் சிரிப்பாள். ஏது அதிகம் யோசிக்கிறீர்கள் போலிருக்கிறது? சரி, விடயத்துக்கே வருவோம், உங்களை அதிகம் குழப்பாது, நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்திலே சில விடயங்கள் தொடர்பாகத் தீர்மானங்கள் எடுக்கின்ற பழக்கமுடையவர்கள் தானே? உங்கள் கணவருடனோ அல்லது தந்தை, சகோதரனுடனோ சரிசமனாக நின்று வாதிட டு வெல்லக்கூடிய உரிமைகொண்ட அதிஸ்டசாலிப் பெண்ணாக நீங்கள் சிலவேளைகளில் இல்லாதிருக்கலாம். ஆனாலும் ஒரு 'தீர்மானம்' (DICISION)) என்ற விடயம் குடும்பத்தில் எழுமிடத்து உங்களையும் ஒரு கருத்துக்கேட்பார்கள்தானே? இங்கேதான் பெண்களாகிய நீங்கள் உங்களது அசாத்திய ஆற்றலை வெளிப்படுத்தும் இடம் உருவாகிறது. அதுதான் 'தீர்மானம் எடுத்தல்' (DICISION MAKING) என்ற ஒரு பெரும் ஆற்றல்.

குடும்பத்தின் தலைவியின் தலைமைத்துவம்
உங்களது செல்லக் குழந்தைகள் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, படிக்கும் படிப்பு, அவர்கள் செய்யும் குறும்பு, அவர்களின் முன்னேற்றம், ஆளுமை என்று எத்தனை எத்தனையோ, விடயங்களில் எடுக்கவேண்டிய தீர்மானங்களிற்கு தாயாகிய நீங்களும் ஒரு முக்கிய காரணியாகின்றீர்கள். இவற்றிலும் இவர்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சிப் படிநிலைகளில் நீங்கள் மட்டுமே தனித்து நின்று முடிவெடுக்கவேண்டி நேர்ந்த சூழ்நிலைகள் பல உங்கள் முன் உருவாயிருக்கும். இதைவிடவும், எத்தனையோ அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்மானங்கள் மேற்கொண்டு முடிவுகள் எடுக்கவேண்டிய நெருக்கடிக்கு பெண்களே அகப்படுகிறார்கள் என்பது யதார்த்த ரீதியிலான உண்மை.
ஆனாலும், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களையோ, முடிவுகளையோ பற்றிக் குறையாகப் பேசினாலும் பாராட்டிப் பேச ஒருவரும் முன்வந்திராததை நீங்களே இந் நேரம் வரைக்கும் உணர்ந்தீர்களோ என்பது யாருக்கும் தெரிந்திராது. அதை உணரத் தலைப்படாதது உங்களது குற்றம் என்று எவரும் கூறவும் முடியாது. ஏனெனில் சமுதாயம் இன்னும் பெண்களை நல்ல தலைவிகளாக ஏற்றுக்கொள்ளாமைக்கு நாங்களே காரணகர்த்தாவாகி விட்டமை எமது துரதிஸ்டமே.
தோழிகளே! எந்தச் சின்ன விடயமாக இருப்பினும், அது உங்கள் மகள் படிக்கும் புத்தகங்களாகட்டும், மகள் அணியும் உடைகளாகட்டும், சரியாக நீங்கள் எடுக்கும் தீர்மானங்களே உங்கள் குழந்தைகளைச் செதுக்குகின்றன. இந்த நுட்பமான உண்மையைப் புரிந்துகொண்டு செயலாற்றத் தொடங்குவீர்களேயானால் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு நாட்டையே கட்டி ஆளக்கூடிய வல்லமை பொருந்தியவர்களாக நீங்கள் மாறுவீர்கள் என்பதை ஆணித்தரமாகக் கூறலாம். குடும்பச் சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் குடும்பத் தலைவிகளே! உங்களுள்ளே புதையுண்டு மறைந்து போயிருக்கும் எத்தனையோ ஆற்றல்களை இனியும் மூடிமறைத்துக் கொண்டிருக்க முனையாதீர்கள். காத்திரமான கருத்தாழமுள்ள இந்தச் சொல் குறித்து நிற்பது வெறுமனே ஒரு பெண்ணை மட்டுமல்ல, ஒரு உண்மையான சேவகியை, விசுவாசியை ஆத்மார்த்தமாக நேசிப்பவளை இதனிலும் பார்க்கத் துல்லியமாகத் தீர்மானங்கள் எடுப்பவளை, நல்லதொரு வழிகாட்டியை.
இவள் கொண்டிருக்கும் இத்தகைமைகள் எமது கண்களுக்குச் சாதாரணமாகத் தென்படினும் அவற்றின் வெளிப்பாடுகள் அவளைச் சார்ந்தோரில், அவளின் வழிகாட்டலைப் பின்பற்றுவோரில் மிளிருவதை நாம் காணலாம்.
இதுதான் நாம் 'தலைமைத்துவம்' என்று பெரிதும் மதிக்கும் தகைமை. உண்மையில் இந்தப் பதத்தை நீங்கள் ஒரு நிர்வாகியுடன் தான் சாதாரணமாக ஒப்பிட்டுப் பார்க்கக்கூடும். ஆனாலும் நிர்வாகி என்பவர் திட்டவட்டமாக சமயோசிதமான முறையில் தீர்மானங்கள் எடுப்பவர், ஆகவே நீங்களும் ஒரு திறமையான நிர்வாகியே என்று கூறுவதை யாரும் மறுக்கவியலாது.

தலைமைத்துவத்தை வளர்க்க வேண்டியது பெண்களின் தார்மீக பொறுப்பு
என்ன சகோதரிகளே! ஏதோ பெரிய பெரிய வார்த்தைகள் பற்றிக் கதைக்கின்றேனே எனப் பதட்டப்படுகிறீர்களா? அதிகம் பயப்படாமல் நான் சொல்லும் வழிமுறைகளைப் பின் பற்றப் பாருங்களேன், சரி ஒரு குடும்பத் தலைவி சிறந்த நிர்வாகி என்பதை ஏற்றுக்கொண்டாலும் நான் வேலைத் தளத்திற்கும் சென்று வீட்டுப் பணியும் செய்வதால் இரட்டைச் சுமைதான் ஏற்படுகிறது. சரியான தீர்மானங்கள் எடுக்க அவகாசமே இருப்பதில்லை எனக் கவலை அடைகிறீர்களா? அந்தக் கவலையே வேண்டாம், உங்களுக்கு முன்னே குவிந்து கிடக்கும் வேலைகளை முதலில் வகைப்படுத்துங்கள். முதலில் செய்து முடிக்கவேண்டியவற்றையும் காலதாமதமாகச் செய்து முடிக்கக் கூடியவற்றையும் பட்டியலிடுங்கள். அதற்கேற்ப உள்ள நேரத்தை ஒதுக்குங்கள், உசாராக நிற்பீர்கள் என்றால் வேலைகள் எதுவுமே தேங்கிக்கிடக்காது. ஆனால் ஒன்று வீட்டுப் பணி என்பது வீட்டிலுள்ள அனைவரும் செய்ய வேண்டியது, அதை முழுக்க உங்கள் தலையிலே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யச் சொல்லி யாரும் உங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லையே. ஆகவே தங்கள் கடமைகளைச் செய்ய உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் பழக்குவதோடு நின்றுவிடாது முக்கியமாக உங்கள் கணவரைப் பழக்குங்கள். சில நாட்களில் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த ஒற்றைத் தலைவலி தானாகப் பறந்துவிடும். உடலும் உள்ளமும் தானாகவே ஆறுதல் அடையும். வேலைத் தளத்தில் மட்டும் என்ன சளைக்கவா செய்வீர்கள். மனதிலே பாரமற்றிருந்தால் செய்யும் பணியைச் செவ வனே செய்யலாம். சரியானவற்றை சரியான விதத்தில் எடுத்துக் கூறலாம். நான்கு சுவருக்குள் மட்டுமல்லாமல் நான்குபேர் கூடும் இடத்தில் பணியாற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பு அருமையானதல்லவா. தளர்ந்து போகாது கூச்சத்தை விட்டுத்தள்ளி செயலாற்றுங்கள். நன்கு யோசித்து தீர்மானங்கள் மேற்கொள்ளுங்கள், துணிவோடு அச்சம் ஏதுமில்லாமல் சரியாகப்பட்ட உங்கள் கருத்தை முன்வையுங்கள், அதன்படி செயற்படுங்கள். அவ வாறு நடப்பீர்களேயானால் வெற்றித்தேவதை உங்கள் காலடியில்.
நாங்கள் வீட்டில்தானே இருக்கிறோம். வேலைக்கு என்று வெளியே போவதுமில்லை.. வருவதுமில்லை என்று பொருமுகிறீர்களா? சற்றே உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள் முதலில் குடும்பமே கதி என்று கிடக்கும் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மனதில் உறுதி எடுங்கள். உங்களுக்குச் சமைப்பது மட்டும் தான் வேலை என்றாலும், சமையலறையிலேயே குமைந்து கிடக்கும் போக்கை மாற்றுங்கள். சமையலோடு சேர்த்து வேறு ஆக்கபூர்வமான அல்லாதுவிடின் பொழுது போக்கான சில காரியங்களைச் செய்ய முனையுங்கள். தோட்டம் செய்வது, பூமரம் வளர்ப்பது, தைப்பது, இல்லாதுபோனால் நாவல் வாசிப்பது என்று சில மனதுக்கு இனிமையான செயற்பாடுகளிலும் ஈடுபட முனையுங்கள். உங்களையறியாமலே நீங்கள் நல்லதொரு ரசிகையாக மாறுவீர்கள். மாலை நேரங்களில் தாராளமாகவே ஓய்வு கிடைக்க, வெளியே சென்றுவர நாலு பேரின் அறிமுகம் கிடைக்கும் கற்பனைகளும் சிறகு விரிக்க கைகளும் கதை, கவிதை என்று வடித்திடத் துடிக்கும். பிறகென்ன நீங்கள் எழுதியவற்றை முதலில் சிலர் வாசிக்க பின் அதனைப் பலர் ரசிக்க. இவ வாறே ஒரு பிரபல்யமாகி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தலைமையேற்று கடைசியில் ஒரு பேச்சாளராகவும் மாறி அசத்தி விடுவீர்கள்.
இது என்ன ஒரு ஐந்து வரியில் பேச்சாளர் ஒருவர் உருவாகிவிட்டார் என்று நகைக்கிறீர்களா? ஏன் நடக்காது? வேண்டுமானால் இந்த ஐந்து வரிகளும் ஈடேறும் காலப்பகுதி வேறுபடலாம். ஆனால் ஈடேறுவது நிச்சயமே. ஒருவேளை மேடைகளில் ஏறி கைகளை அசைத்து ஆக்கிரோஸமாக கதைக்கப் பிடிக்காவிட்டாலும், அவ வாறு கதைப்பவர்களின் பேச்சையாவது கேட்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளலாம் அல்லவா?
ஒரு மேடைப் பேச்சாளனைக் காட்டிலும் அப்பேச்சை ரசிக்கத் தெரிந்தவனே சிறந்த இலக்கிய கர்த்தா என்று அறிஞர் கூறுவர்.
உண்மையில் சகோதரிகளே! ஒரு சிறந்த தலைமை கொண்டுள்ள பண்புகள் பெண்களிடத்தேதான் அதிகம் குடிகொண்டுள்ளன என்று நான் கூறினால் நம்புவீர்களா? ஆனால், இது நூறுவீதம் உண்மை.
பலம், விடாமுயற்சி, வயப்படும் தன்மை என்ற ஒரு தலைமைக்குரிய மூன்று முக்கிய பண்புகளும் எதிர்ப்பாலரைக் காட்டிலும் உங்களிடம்தான் ஓங்கியிருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் மூன்றுக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். (POWER PERSEVERANCE PASSION) மேலும் இவ வாறு கூறுகிறார்கள். பெண்கள் இயல்பிலேயே பொறுத்துப்போகும் தன்மையும், வெளிப்படையான போக்கும் கொண்டிருப்பதோடு சிறந்த உறவாளராகவும் (COMMUNICATOR) விளங்குகிறார்கள். இதனால் தம் கீழுள்ளவர்களைச் சிறப்பாக உருவாக்குவதுடன் தகவல்களையும் இலகுவாகப் பரிமாறிக்கொள்கிறார்கள். கட்டளையிடுவதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்களே முன்நின்று காரியமாற்றுகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் தலைமையில் குற்றங்கள், குறைகள் கண்டுபிடிக்க முனைவது கடினமான காரியம் என மேற்குலக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
ஏது, ஆச்சரியப்படுமாப்போல் தெரிகிறதே? உண்மைதான் தோழிகளே! இப்பண்புகளை உங்களுக்காக மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. நீங்கள் பெற்றுவளர்த்து ஆளாக்கும் குழந்தைகள் அதாவது எதிர்காலத்தில் உங்களை, இந்த நாட்டைக் காப்பாற்றப் போகும் அந்தக் குழந்தைகள் நாளைய சமுதாயத்தில் நற் பிரஜைகளாக தலை நிமிர்ந்து நடக்க, மற்றவர்களை வழிநடத்த இந்தச் சீரிய பண்புகளை அவர்களிடத்தே தழைக்கச் செய்வது உங்களது பொறுப்பல்லவா? இத்தகைய பாரிய பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் மட்டும் சோர்ந்து துவண்டு வாழலாமா? உங்களுக்குள்ளே கவனிப்பாரற்றுப் புதையுண்டு போய்க்கிடக்கும் இந்தப் பட்டை தீட்டாத இரத்தினங்களைச் சற்று சிரமம் எடுத்து மெருகேற்றிக்கொள்ளுங்கள். இந்தத் தளிர்கள் நாளை வளர்ந்து பெருவிருட்சமாகிக் காய்த்துக் கனிதந்து நற்பயனளிக்க அதனை தாங்கி நிற்கும் கொழுகொம்புகள் வைரமாக இருக்கவேண்டாமா?
உங்களுக்காக மட்டும் நாம் இதனைக் கேட்கவில்லை. இந்த நாட்டின் எதிர்காலத்தைச் செதுக்கப் போகும் சிற்பிகளுக்காக யாசிக்கின்றோம்.
எங்கே உங்களுடைய குட்டித் தலைவி குட்டிக் கட்டளைகள் இட ஆரம்பித்துவிட்டாள் போலிருக்கிறதே?

Montag, August 11, 2003

கனவு நனவானது - மலைமகள்

பலவீனமாயிருந்த தமிழ்ச் சமூகத்துப் பெண் இனத்தின் மிகப் பலம் வாய்ந்த சக்தியாகவே பெண் போராளிகளைத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார். தமிழீழத்தின் கொல்லைப் புறங்களிலும் வீடுகளின் மூலையிலிருக்கும் சமையலறைகளிலும் முடங்கி, பலம்குன்றி, சிதறிக்கிடந்த பெண்களை, இன்று யாராலுமே மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பெரும் சக்தியாக ஒருங்குவித்தார். எங்கள் விடயத்தில் யாருமே நம்பியிராத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். அவர் செய்த அற்புதங்கள் இனம், மொழி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
1998இல் அன்னை பூபதியின் நினைவுநாள் நிகழ்வின்போது வெரித்தாஸ் தமிழ்ப் பணிப் பொறுப்பாளர் அருட்திரு ஜெகத் கஸ்பார் அடிகள் மேற்குலகிலே ஆற்றிய உரை ஒன்றிலே பின்வருமாறு குறிப்பிட்டார்.

"நான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவற்றிலே ஒன்று பெண்ணடிமைச் சமூகத்தில் வாழ்ந்த பெண்கள் இன்று போராடிக் கொண்டிருப்பது" ஒருவரின் கண்களிலும் படாமல் ஒதுங்கியிருந்த எம்மை உலகின் புருவம் உயரும்வரை து}க்கி நிமிர்த்த எமது தலைவர் அவர்கள் கடந்த தடைகள் கொஞ்சமல்ல.
பெண்ணடிமைச் சமூகத தின் கோரப்பிடியுள் நசுங்கிக் கிடந்த பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி, அவர்களின் கடமைகளைப் புரிய வைத்து, விடுதலை உணர்வுடன் எழுந்தவர்களை ஒன்றுசேர்த்து அணியாக்கி, அதுவரை காலமும் ஆண் போராளிகள் செய்துவந்த பயிற்சிகளையெல்லாம் செய்வித்து, ஆயுதங்களுடன் தமிழர் தெருக்களில் உலவச் செய்யலாம், சிங்களப் படைகளின் தலைகளைச் சீவலாம் என்று யாருமே துளிகூடக் கற்பனை பண்ணிப் பார்த்திராத காலத்தில், அதைச் செய்ய முனைந்தார் அவர்.
அந்த நேரத்திலேயே இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக இருந்த பலர் இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்று தமக்குள்ளேயே யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்க, தலைவர் செயலிலேயே இறங்கிவிட்டார். இது சாத்தியமா என்ற ஐயப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே அது சாத்தியமாகிவிட, அதற்குமேல் அதைப்பற்றிக் கதைப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?
எல்லோருக்கும் சவாலாக தலைவரின் கனவு நனவாகத் தொடங்கியது. முதற்கட்டமாக பெண்களை அணிதிரட்டி, இந்தியாவின் திண்டுக்கல், சிறுமலைக் காட்டுப் பாசறை வரை கூட்டி வந்தாயிற்று. இனி அவர்களைச் சரியான முறையில் கையாளக் கூடியவர்களை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க ஒழுங்கு செய்ய வேண்டுமேயெனச் சிந்தித்து, தானே நேரடியாகப் பயிற்சியாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார். அநேக பயிற்சிகளை தானே நேரடியாகக் கண்காணித்தார். அருகிலிருந்து சொல்லிக் கொடுத்தார்.

பலரின் கேலிக்குச் சவால் விட்டு, சமூகத்தின் வளர்ப்பு முறையால் ஒதுங்கிப் போகின்ற இயல்பும், பிடிவாதமும் வீம்பும் கொண்ட இவர்களை உளவுரன் கொண்ட போர்வீரர்களாக வளர்த்தெடுத்ததில் முழுப்பங்கும் தலைவருடையதே. அவரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கவல்ல மூத்த போராளிகள் தலைவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் இவர்களைப் புடம் போட்டனர்.


அண்ணனின் ஆணை
அதுவரை காலமும் இயக்கத்தில் அனைத்து உறுப்பினர்களும் எடுத்த அனைத்துப் பயிற்சிகளையுமே திறம்பட முடித்து தாயகம் திரும்பிய தேசத தின் புதல்விகள் எல்லோரினதும் கைகளிலும் ஆ-16 ரகத் துப்பாக்கிகள். அந்த நேரத்தில் மிகவும் மதிப்பான, கிடைப்பதற்கு அரிதான துப்பாக்கி அது. எல்லோருக்குமே ஆ-16 என்றால் தனி விருப்பம். தன் கண்ணருகே அல்லாமல் து}ர நிற்கப் போகும் இவர்களிடமிருந்து ஆண் போராளிகள் எப்படியாவது ஆ-16ஐ வாங்க முயற்சி செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவிலேயே இவர்களிடம்,
"யார் கேட்டாலும் இதை நீங்கள் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லித்தான் அனுப்பி னார். அது போல தாயகத்திலிருந்த அனைத்துப் போராளிகளுக்குமே "யாரும் இவர்களிடமிருந்து ஆ-16ஐ வாங்கக் கூடாது" என்ற கண் டிப்பான கட்டளையொன்றையும் அனுப்பியிருந்தார். தலைவரின் அந்த ஒரு வசனமே பெண் போராளிகளின் கையில் அவர்களது ஆ-16களைத் தக்கவைக்கப் போதுமானதாகவிருந்தது. தலைவர் அப்போது இவர்களின் அருகே இல்லை. பல கிலோ மீற்றர்களுக்கப்பால் கடல் கடந்த து}ரத்திலிருந்தாலும், அவரின் ஒரே ஒரு வசனம் இவர்களின் பிரியத்துக்குரிய ஆயுதத்தை வேறு யாரும் நெருங்கிவிடாமல் பாதுகாத்தது.

மாற்றம் மலரும் காலம் 1987இல் யாழ்ப்பாணத்தில் கோட்டை, நாவற்குழி இராணுவத்தளங்களைச் சூழவிருந்த காவலரண்கள் சிலவற்றில் பெண் புலிகள் கடமையாற்றிக் கொண்டிருந்த நேரம் ஒரு தளபதி தன் மனதில் நெருடிக்கொண்டிருந்ததைத் தலைவரிடம் கேட்டே விட்டார்.

"அண்ணா, பெண் பிள்ளையள் இப்படி ஜீன்ஸ், சேட்டோடை திரியிறதை யாழ்ப்பாணச் சனம் ஏற்றுக்கொள்ளாது. அவை சட்டையோடை இருந்தா என்ன?" என்றார். பெண் போராளிகள் ஜீன்ஸ், சேட் லு}லு}லு}லு}லு}. சிரித்துக் கொண்டார். அவரிடமே,
"நடைமுறைகள் மாறும்போது இப்படித்தான் விமர்சனங்கள் வரும். பிறகு காலப்போக்கில் பழகிவிடும்" என்றார். இதன் பின்னர் பெண்கள் பற்றிய தம் பிற்போக்கான எண்ணங்களை தலைவரிடம் சொல்ல யாருமே துணிவதில்லை. பெண் போராளிகள் விடயத்தில் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயன்றனர். தற்செயலாக எமது விடயத்தில் தவறாக எதையாவது சொன்னால், செய்தால் அவரால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிவரும் என்ற அச்சத்தாலேயே அவா கள் எங்களிடம் மரியாதையு டன், மிகுந்த கவனத்துடன் பழகி, புரிந்து கொள்ள முயற்சித்தார்கள்.

காட்டுக்குள் எல்லோருமே தலைவரின் அருகில் இருந்தபோது அவர் எம்முடன் பழகும் விதத்தை, நடத்தும் விதத்தை நேரடியாகவே பார்த்து தாமும் நடக்க முயற்சித்தார்கள். எங்களிடம் அவருக்கு இருக்கின்ற அக்கறையைப் புரிந்து கொண்டார்கள்.

தன்னம்பிக்கையே நல்வழிப்படுத்தும்
இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தில் தன் கோரக் கால்களைப் பதித்திருக்க, தலைவர் வன்னியிலே புலிகளின் தளத்தை அமைத்து இயக்கத்தைப் பலப்படுத்தினார். அந்த நேரம் பெண் போராளிகளின் முதலாவது அணியினரும், இரண்டாவது, மூன்றாவது பாசறைகளிலே பயின்றவர்களுமாக கூடியளவிலான பெண் போராளிகள் மணலாற்றுக் காட்டினுள் தலைவருடன் பாசறை அமைத்துத் தங்கியிருந்தனர்.
தலைவரின் குடில் நடுவே இருந்தது. அதற்கு ஒருபுறம் பெண் போராளிகளின் குடில்களும், இன்னொருபுறம் ஆண் போராளிகளின் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இரு பாலாரும் காலைப் பயிற்சிக்காக ஓடுவதற்குத் தனித்தனி ஓடுபாதைகள் இருந்தன. ஆனால், இரண்டு ஓடு பாதைகளுமே தலைவரின் குடிலின் வாசலுக்கு நேரே வந்து சந்திக்கும். காலையில் பயிற்சிக்காக ஓடினாலும் சரி, தலைவரின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவர் எல்லோரையுமே பார்த்துக் கொண்டிருப்பார்.
தவறுகள் செய்து தண்டனையில் ஓடினால் தலைவர் கண்டுவிடுவாரே என்பதற்காகவே எம்மவர்கள் அநேக தவறுகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். என்றாலும் எங்கேனும் நிகழும் சிறுதவறுகள் ஒருநாளுக்கு ஒருவரையாவது அந்த ஓடு பாதைக்கு அழைத்து வந்துவிடும். தவறுகளின் வகைக்கேற்ப பாய், பானை, சட்டி, வாளி எனப் பலதரப்பட்ட பொருட்களைச் சுமந்தவாறு ஓட வேண்டியிருக்கும். தலைவரின் குடிலுக்கு நேரே ஓடிவரும்போது யாருக்குமே அவரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இராது.
ஓடி முடிந்ததும் தலைவர் கூப்பிட்டு "என்ன நடந்தது" என்று கேட்பார். யாரால் என்ன விட யத்துக்காகத் தண்டனை தரப்பட்டது என்பதை அவர் முன் நின்று சொல்லி முடிப்பதற்குள் உயிரே ஒரு முறை போய் வரும். மறந்து போய்க்கூட அந்தத் தவறை இன்னொரு முறை செய்யமாட்டாத அளவுக்கு அது மனதில் பதிந்துவிடும்.
"அண்ணாவின் அருகிலேயே நிற்கின்றோம். அவர் கண் பார்வையில் வளர்கின் றோம்" என்ற உணர்வே எம்மை பல வழிகளில் நெறிப்படுத்தும். பிழைகளைச் செய்யவிடாது தடுக்கும்.
மலைமகள்