Donnerstag, Oktober 09, 2003

தமிழ்த்தேசியத்துள் பெண்களின் நிலையும் நிலைப்பாடும்.

தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டில் பெண்களை ஒன்றினைப்பதற்கும் சமூக, பொருளாதா ரீதியாக பெண்களை விரைவாகவும் இலகுவாகவும் பலம் பெறச் செய்வதற்கும் உரமான உழைப்பாளிகளான உயிர்துடிப்புள்ள கிராமியப் பெண்களைச் சமூக மேம்பாட்டு உருவாக்கத்தில் அதிகளவான பங்கேற்றலையும், பதவிகளையும் பெறுவதற்கும் வலியுறுத்துவதோடு பாராம்பரிய எண்ணக்கருக்களில் இருந்து பெண்கள் சிந்தனைத் தெளிவு பெறக்கூடிய புரிந்துணர்வு ஏற்படுத்துவதற்கும் சமத்துவம், பொருளாதாரம், சட்டம், கலவ்p, உடல்நலம், சுயதொழில், மற்றும் பெண்கள் தொடர்பான மேம்பாடான கிராமியத்திட்டமிடல் முறைமைகளில் பங்காளிகள் ஆவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையைச் செயற்படுத்தக்கூடிய கிராமியப் பெண்கள் குழுக்களின் முக்கியத்துவத்தையும், ஒருகிணைப்பையும் வலியுறுத்தவும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் பெண்களும் சம அளவான அங்கீகாரம் பெறக்கூடிய வாய்ப்புக்களையும் வளப்பகிர்வினையும் தமிழ்த்தேசியப் பெண்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.


மனிதகுல வரலாற்றைக் கருத்தியல் ரீதியாகச் சிந்திக்க வைத்த முதலாளிதுவ சமூகம் உருவான காலம் முதல், பெண்கள் மரபு வழிப்பட்ட பாரம்பாரிய எண்ணக்கருக்களாலும் ஜதீக பௌராணிகச் சிந்தனைக்குள்ளும் சிக்குண்டிருக்கும் எமது சமூகத்தின் ஆரம்பம் முதல், பெண்கள் பற்றிய பார்வை பிரச்சினைகள் கொண்டதாகவே வளர்ந்து வந்துள்ளது. சர்வதேச ரீதியில் பெண்களின் பிரச்சினைகள் உக்கிரம் பெற்றிருந்த போதிலும் எமது சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் போராட்ட காலத்தில்தான் மேலதிகமான அழுத்தம் பெறத் தொடங்கியது. இதே காலகட்டத்தில் சமூகத்தில் கட்டமைமக்கப்பட்டிருந்த பழம் வழக்காறுகளை அறுத்தெறிந்து தேசிய விடுதலைப்போராட்டத்துடன் தமிழ் பெண்கள் தம்மை இணைத்துக்கொண்டனர்.

அப்பெண்கள் தன்னம்பிக்கை, சுய ஆளுமை, அறிவியல் பலம் கொண்ட பெண்களாக எம்மத்தியில் முனைப்புப் பெறத்தொடங்கினர். போராட்ட காலங்களில் பெண்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளக் பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பெண்களின் உரிமை மறுப்புக்கள் ஆரம்பகாலங்களில் சமூக, சமய, கலாசார, சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டும் நியாயப்படுத்தப்பட்டும் வந்த போதிலும் போராட்ட காலங்களில் இராணுவக்கெடுபிடிகளாக மாறிய பாலியல் வன்முறைகளாகத் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை ஆட்டம் காண வைத்ததோடு பெண்களுக்கு உடல், உள hPதியான சித்திரவதைகளாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு புதிய சமூக அவலங்களையும் தோற்றுவித்தது.

இதில் அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் கிராமியப்பெண்களாகும். அதே காலகட்டத்தில் அப்பெண்கள் ஒன்று சேர்ந்து தம்மை அணிதிரட்டி தமது பிரச்சினைகளைப் பகிரங்கப்படுத்தும் அளவிற்கு சமூக பலத்தையோ? ஒருங்கிணைப்பையோ? பெண்கள் பெற்றிருக்கவில்லை. ஆகவே இனிவரும் காலங்களில் தமிழ்த்தேசியப்பெண்கள் தமக்கென்று ஒரு ஸ்திரமான அமைப்பை உருவாக்குவதற்கும் கிராமங்கள் தோறும் பெண்கள் குழுக்களின் பங்கேற்றலும், செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதற்கும் பெண்களுக்கான கருத்தியல் தளம் (Ideological Stance) உடையவர்களாகவும் பெண்களின் காத்திரமான பங்களிப்புக்கு அவர்களின் தகுதிப்பாடு ((Credibility) பொருத்தப்பாடு (Suitability) என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதனோடு அவர்களின் மனப்பாங்கு (Commitments) சமூகபங்களிப்பைச் சரியாகச் செய்வதற்கு உதவக் கூடியதோடு கிராமியப்பெண்கள் தத்தமது குடும்பமட்டத்திலிருந்து சமூகமட்டத்திற்கு வரவேண்டியுள்ளது. பெண்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கும் சமூகமேம்பாட்டுத் திட்டமிடலில் சமபங்கு வகிப்பதற்கும் அபிவிருத்தியில் சாதமான, பலனைப்பெற சமூகமான, ஆரோக்கியமான வன்முறைகளற்ற தீர்மானங்களையும் எடுப்பதற்கு பெண்கள் சகல மட்டங்களிலும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் பலம் பெறும் வழக்காறுகளை உடைத்து குடும்பமட்டத்திலிருந்து வெளிவர வேண்டியுள்ளது.

.பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே முன்னின்று வெளியில் வந்து போராட வேண்டும். பெண்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் பெண்கள் தமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாடான கல்வியை வடிவமைப்பதற்கும் பெறுவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் சொத்துரிமை, தமக்கு தேவையான விரும்பமான தொழிற்துறையைத் தெரிவு செய்வதற்கும் பெண்களே சுயமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டும். தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் சுயமாக முடிவுகளை பெண்கள் முன்வரவேண்டும்.

எந்தவொரு சமுதாயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு அவசியமானது. அடிப்படையானதும் ஆகும். அந்த வகையில் எமது தேசிய விடுதலைப்போராட்த்துடன் இணைந்த பெண்கள், அவர்களின் ஆற்றல்கள் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். எமது சமூகத்தில் ஆண்,பெண் சமத்துவம் தொடர்பான கருத்துருவாக்கம் வளர்வதற்கும் எமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விழிப்புணர்வும், சுயதிறன் விருத்தியும், பொருளாதார நடவடிக்கைகளில் பண்முகத்தன்மையும் கொண்டவர்களாகத் தேசிய விடுதலைப்போராட்டத்துடன் இணைந்த பெண்கள் காணப்படுகின்றனர்.

கிராமியப்பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களை ஒன்றினைப்பதற்கும் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் பெண்களின் பங்கேற்றலைத் துரிதப்படுத்துவதற்கும் ஆற்றலும் ஆளுமையும் கொண்ட இப்பெண்கள் தம்மை வடிவமைத்தது போன்று கிராமியப் பெண்களையும் பலம் பெற வேண்டுமெனில் அவர்களின் ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படாது ஆரோக்கியமான, பெண்களின் உழைப்பைச் சுரண்டாத திட்டமிடல் வழிமுறைகள் பெண்களாலேயே வடிவமைக்கப்படவேண்டும். அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும்போது அதில் பெண்களின் அங்கத்துவமும் சம அளவில் இடம்பெற வேண்டும். இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் மிகவும் தெளிவாக வலியுறுத்தப்பட வேண்டும்.

சமுகத்தில் நீதியையும், சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குப் பெண்களின் பங்களிப்பு மிகமிக அவசியம். எமது சமூகம் மீளுருவாக்கம் பெறுவதற்கு பெண்கள் காத்திரமான பங்களிப்புச் செய்யவேண்டும். கிராமியப்பெண்களின் கருத்துருவாக்கமும் வளரவேண்டும். மேம்பாடான சமூக உருவாக்கத்திற்கான தெளிவுபடுத்தல்களும் வலியுறுத்தப்படவேண்டும். கடந்தகாங்களில் எம்மை அடக்கு முறைக்குட்படுத்திய அரசு, மகளிர் அபிவிருத்தி தொடர்பாகவும் அவர்களின் பாதுகாப்புத்தொடர்பாகவும் அமைச்சை நிறுவிய அதே காலகட்டத்தில்தான் அதே அரசால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அபிவிருத்தித்தடைகளும் வடிவமைக்கப்பட்டது.

பெண்களின் உரிமை மறுப்புக்கள் காலம் காலமாகத் தொடாந்த அரசுகளால் வன்முறைகளுக்கூடாக நியாப்படுத்தப்பட்டு வந்ததையும் கடந்த காலங்களில் பெண்களாகிய நாம் புதிய, புதிய அவலங்களைக் கண்டும், கேட்டும், அனுபவித்தும் உணர்ந்தும் வந்திருக்கிறோம். இவ்வாறான விடயங்களும் தமிழ் தேசியப்பெண்களை மேலும் விழிப்படையச் செய்துள்ளது. பெண்களாகிய நாம் காலம் காலமாக அடக்கப்பட்டதையும், ஒடுக்கப்பட்டதையும் வன்முறைக்குட்படுத்தப்பட்டதையும் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டதையும் எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்.

எல்லா விதமான கலாச்சார நாடுகளிலும் பெண்கள் தமக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் நேரத்துக்கு நேரம் பெண்களின் வாழ்வியல் நடைமுறைகள் மாறிக்கொண்டிருப்பதால் இதுவரை காலமும் சமூகத்தால் வடிவமைக்ப்பட்டு காட்டிக்காக்கப்பட்டு வந்த கலாச்சாரக் கட்டுமானங்களைத் தேவையின் நிமித்தம் தகர்த்து வெளியில் வந்து தேசிய விடுதலைப்போராட்டத்துடன் இணைந்த பெண்கள் இன்று சமூக மேம்பாட்டில் தம்மை இணைத்து வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஏற்பத் தம்மை ஒருங்கிணைத்து இருப்பதை காண்கின்றோம். எந்தவொரு செயற்பாடும் பெண்களின் சுறுசுறுப்பான ஆர்வம் மிக்க செயற்பாட்டிலே தங்கியுள்ளது.

எனவே கிராமியப் பெண்களை ஒன்றிணைத்து சமூகமேம்பாட்டு உருவாக்கத்திற்கு அப்பெண்களின் பங்களிப்பைப் பெறுவதற்கு சமூகமேம்பாட்டு அமைப்புக்கள் தூண்டுதல் அளித்தபோதும் ஒரு பெண் தானாகவே முன்வந்து தன்னை வளர்த்துக்கொண்டாலன்றி, விழிப்புணர்வு பெற்றாலன்றி அவளது வளர்ச்சி தடைப்படதொன்றாகவே அல்லலுறும். எது எவ்வாறிருப்பினும் இன்று வரை குடும்பச் சூழ்நிலைகளும் பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவேயுள்ளது. ஆயினும் ஒவ்வொரு பெண்ணும் தனக்குள்ளிருக்கச் கூடிய சக்தியையும், ஆற்றலையும் உணர்ந்து அந்ததந்த துறைகளில் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ள முன்வரவேண்டும்.

கிராமியப்பெண்களிடம் ஏற்கனவே இருக்கின்ற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்ப்பதற்குச் சமூகத்தில் உள்ளவர்கள், மேம்பாட்டு நிறுவனங்கள் இயன்றளவு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். கிராமியப்பெண்கள் இழிவுபடுத்தப்பவோ, கீழ்நிலைக்ப்படுத்தப்படவோ முடியாதவர்கள். சமூக மேம்பாட்டில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆகவே அப்பெண்களின் மனங்களில் கருத்தியல் hPதியான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மரபு hPதியான சிறுமைப்படுத்தலைத் தகர்த்து பெண்களின் சமத்துவத்திற்கும், சுய அபிவிருத்திக்கும் ஆற்றும் பங்களிப்பே அப்பெண்களை உண்மையான விடுதலைக்கு இட்டுச்செல்லும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆண்,பெண் இருபாலாரின் பங்களிப்பு எந்தளவு அவசியமோ? நாட்டின் பொருளாதார உற்பத்திக்கும் சமத்துவம், உற்பத்தி என்பன முக்கியமான இருசக்கரங்கள். இந்த வகையில் எமது தமிழ் தேசிய சமூகம் மேம்பாடு அடைய வேண்டுமெனில் அங்கு பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல், சட்ட, நீதி, நிர்வாகம், போன்றவற்றில் மட்டுமல்லாது 'படைப்பிரிவுகளிலும்" பெண்கள் பங்கேற்க வேண்டும். அதே போன்று கிராமிய வளப்பகிர்வுகளிலும், உற்பத்தியிலும் கிராமியப் பெண்கள் சம அளவில் பங்கேற்க வேண்டும். இதற்கூடாகவே பெண்கள் காலம்காலமாகத் தம்மை வடிவமைத்துள்ள சமூககட்டுமானங்களில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்வதோடு சமூகத்தையும் விடுவித்துகொள்ளமுடியும்.

பெண்கள் உடல்,உன hPதியாகத் தம்மை வலுப்படுத்தியும் ஆளுமைகளை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் கிராமிய, பிரதேச மாவட்ட மட்டங்களில் பெண்கள் குழுக்களை அமைத்து அதற்கூடாக சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒவ்வொரு பெண்ணும் பங்கேற்பதோடு திட்டமிடல் முறைமைகளில் பெண்களும் சம அளவில் பங்குபற்ற முடியும். தேசிய விடுதலைப்போராட்டத்துடன் இணைந்த எமது பெண்களின் நடவடிக்கைகளைக் கருத்தியல் நோக்குடையதாகக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு கிராமியப் பெண்ணும் தம்மை முன்னெடுக்க வேண்டும்.

கிராமியபெண்களுக்கு பக்கபலமாகவும் உந்த சக்தியாகவும் உள்ள தமிழீழத் தேசிய பெண்களின் அர்ப்பணிப்புகளும், தேடல்களுமே, ஒட்டுமொத்தப் பெண்களுடைய விடுதலையை வென்றெடுக்க வழிசமைக்கும் இவ்வாறான பெண்களின் முழுமையான அர்ப்பணிப்பே விடுதலையைப் பெற்றுத்தரும். எனவே பெண்கள் அனைவரும் முழுமையான பெண் விடுதலையைப் பெற முன்னின்று உழைப்பதோடு அனைத்துச் சமூகங்களிலும் ஓரங்கட்டப்பட்டதையும், கீழ்நிலைப்படுத்தப்பட்டதையும் இதுவரை காலுமும் அனுமதித்து, தலை வணங்கி அதற்கு எதிராக வாய்பேசா மௌனிகளாக இருந்தது போதும். இனிவரும் காலங்களிலாவது தமிழ்தேசிய விடுதலைக்காக வெளியில் வந்து முன்னின்று உழைப்பதற்கூடாக தேசவிடுதலையும் பெண் விடுதலையையும் வென்றெடுக்கலாம்.

எது எவ்வாறு இருப்பினும் பெண்கள் தமது உரிமை மறுப்புக்கள் தொடர்பாக சர்வதேச அளவில் அரசியல் நிலைப்பட்ட செயற்பாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ள போதிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. கோரிக்கைகளையும் முன்வைத்துள்ள போதிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. ஆயினும் எமது தமிழ்த்தேசிய சமூகத்தில் சகல ஒடுக்குதல்களுக்கும் உட்பட்ட பெண்கள் வெளியில் வந்து சமத்துவமான கட்டுமானங்களை உருவாக்குவதிலும் அவற்றுக்கூடாக பெண்கள் அபிவிருத்தியிலும், தாயக தேசத்தின் விடுதலையிலும் பங்காளிகளாகவதற்கும் தமது ஈடுபாட்டையும் அக்கறையையும் அதிகரித்து இருப்பதோடு, பெண்களாகிய நாம் எல்லாக் காலங்களிலும், எல்லாச்சமுதாயத்திலும் எமது அடிப்படை உரிமைகளை இழந்தவர்களாகவும் அடிமைகளாகவும் ஆற்றல்கள் அனைத்தையும் அடக்கியவர்களாகவும், இருளுக்குள் இடிந்த எண்ணங்களுடனும், உள்ளங்களுக்குள் உடைந்த ஆசைகளுடனும் வாய்பேசத் திராணியற்றவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளளோம்.

.இவ்வாறு மௌனித்து வாய்பேசக் கூடத்துணியாதவர்களாக, சகித்துப் பொறுத்துக்கொண்டிருந்த காலம் பெண்களைச் சிதைத்து, அடிமைகளாக்கி, சிறைப்படுத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, புதைகுழியிட்டு பெண்களின் தேவைகள், எண்ணங்கள், மனக்கொந்தளிப்புக்கள் அனைத்தையும் சின்னாப்பின்னப் படுத்தியது. இவ்வாறான துன்பங்கள் பெண்களுக்கு இனியும் வேண்டாம். தமிழீழ தேசிய விடுதலைக்காக கைகளை ஒன்றினைத்து ஒத்துழைப்புக்கொடுப்போம்! எமது குரல்களையும், கரங்களையும் யாரும் நசுக்காது தேசத்தை காக்கும் திறனை தமி;ழீழ தேசியப் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்குவோம். சமூக மேம்பாட்டு உருவாக்கத்தில் பெண்களாகிய நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சுதந்திரமான பெண் விடுதலையையும், ஆரோக்கியமான சமூக விடுதலையையும் வென்றெடுக்க முடியும்.

நன்றி தில்லை. சுட்டும்விழி
(08 -10 -2003)

nantri-soorizan.com