Mittwoch, August 13, 2003

விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும்.......... கருணாகரன்.

விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும் அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும்

எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.

பெண் சமத்துவம் குறித்த கருத்தாடல்கள் செயற்பாடுகள் இன்று தீவிரமான நிகழ்நிலையிலிருக்கின்றன. அல்லது சமூக நிகழ்ச்சித் திட்டத்திலிருக்கின்றன. பெண் எனும் அடையாளத்தை வைத்து சமூகம் பெண்கள் மீது விதிக்கும் நிபந்தனைகளை வெற்றி கொள்ளவும் கூறிய சிந்தனை விழிப்பும் செயற்பாடும் பெண்களிடையே வேண்டப்படுகிறது. இது பெண்களிடம் மட்டுமின்றி முழு சமூகத்திடமும் வேண்டப்படுகின்றது என்பதே பொருத தமானது. ஏனெனில் ஒடுக்கப்படுவோருடைய விடுதலை என்பது ஒடுக்குவோரினது விடுதலையுமாகும் என்ற உண்மையின் அடிப்படையிலானதாக இது அமைகிறது.
இன்று நமது பெண் நிலைப்பாடு எவ வாறிருக்கிறது. பெண் வாழ்வு எவ வாறிருக்கிறது என்று பார்ப்பது முதலில் முக்கியமாகிறது.

எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.

இந்த நிலைபாட்டிலும் செயற்பாட்டிலும் இயங்கும் பெண்கள் பெண் சமத்துவம். பெண்விடுதலை, பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளிலும் சமூகப் பிரக்ஞையிலும் சமூகமாற்றத்திலும் ஆர்வம் கொண்டோராகவும் தெளிவுடையவராகவும் இருக்கின்றனர். சிந்தனை விழிப்பு மட்டுமன்றி செயற்திறன் உடையோராகவும் இருக்கின்றனர்.
சமூகத்தின் பெரும் பகுதியாக பெண்கள் இருப்பதுபோல கல்வி கற்கும் நிலையிலும் பெண்களே இன்று கூடுதல் இடத்திலிருக்கிறார்கள். கல்வி மூலமான வேலைகளில் ஆரம்ப நிலை. இடைநிலை உத்தியோகம் பார்க்கும் பெண்களே அதிகமாக இருந்த நிலைமாறி உயர்நிலைகளிலும் தொழிநுட்பவியலிலும் இன்று அவர்கள் இடம் பிடித்து வருகிறார்கள். உடல் உழைப்பாளர்களாக விவசாயம் மற்றும் கூலி உழைப்பாளர்களாக இருக்கும் பெண்களும் தமது உரிமைகளிலும் உழைப்பு முறைகளிலும் தெளிவு பெற்று வருகின்றார்கள். சுமூக நிலைமை இதுவாக இருந்தாலும் பெண் சமத்துவம், பெண்விடுதலை குறித்த பெண்ணியம் பற்றிய தெளிவு அறிவும் சமூகமாற்றம் குறித்த சிந்தனையும் இந்தப் பெண்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவே நிலைமையுள்ளது.

மரபுகளால் கட்டுண்டு, பண்பாட்டு இறுக்கங்களுள் சிக்குண்டு அவற்றை விட்டு வெளிவரத் தயங்கும் மனோ நிலையுடையோராகவே இருhகள் இருக்கின்றனர். போராடும் தரப்பினரும் பெண் விடுதலை, பெண்ணியம் குறித்துச் சிந்திப்போரும் ஒருகுறியீடாகவே இன்றும் நமது சூழலில் இருக்கின்றனர். இது நமக்கும் புதிதல்ல. எந்த நல்ல விடயங்களிலும் சீரியலான செயற்பாடுகளிலும் நமது சமூகம் அப்படித்தானிருக்கிறது.

அக்கறை பூர்வமாக இயக்கம் தரப்பு குறைவாகவும் மந்தத்தனமுடைய தரப்பு கூடுதலாகவுமே உள்ள சமூக அமைப்பைக் கொண்டவர்கள் நாமென்பதால் நமது சூழல் அப்படித்தானிருக்கும்.
நமது கல்வி நமது சூழல் பற்றிய அறிவையோ அக்கறையையோ வழங்குவதில்லை. அதுபோல் தன்னைப் பற்றி அறியவும் உணரவும் கூடிய, தன்நிலை பற்றி தூர நோக்குடன் சமூகவியல் பண்பில் சிந்திக்கக்கூடிய ஆற்றலையோ பண்பையோ வழங்குவதுமல்ல. இந்நிலையில் கல்விக்கப்பாலன பொது அறிவூட்டல் சமூக அக்களினூடாகவே நாம் புதிய மலர்ச்சியை, சமூக அக்கறையை, தேடலை உருவாக்கவேண்டியுள்ளது. நமது எல்லா வகையதன சமூக வேலைத் திட்டங்களிலும் அவை முன்னைடுக் கப்பட்ட முறைகளிலும் இதனை நன்றாக அவதானிக்கலாம்.

சமூக சிந்ததனை என்பதே நிறுவனமயப்பட்ட கல்விக் கப்பாலான தனித்த புறம்பான ஒரு சங்கதியாகவே எப்போது மிருக்கிறது. அதேவேளையில் அத்தகைய புறநிலைச் சிந்தனையை செயற்பாட்டு ஆற்றலை நமது கல்வியும் அது சார்ந்த நிறுவனங்களும் ஏற்பதில்லை. அதேவேளை அதை விரோத நோக்குடனேயே பார்க்கின்றது.

நமது கல்வி தவிர நம் பண்பாடும் மரபுகளும் கூட இத்தகைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் கொண்டேயிருக்கிறது. வாழ்வை கல்வியும் பண்பாடும் கணிசமான அளவு தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதால் இவற்றின் தாக்கம் இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது.

இந்த இரண்டு அம்சங்களும் முழச்சமூகத்தையும் பாதிப்பதுடன் பெண் வாழ்வையும் அதிகம் தாக்கத்துக்குட்படுத்துகின்றன. மரபின் குறைபாடுகளை உடைக்கக்கூடிய வல்லமையோடு துணிவையோ நமது கல்வி பெண்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே வழங்கவில்லை. ஆதே வேளை கல்விக் கருத்து நிலையிலும் பெண்ணை ஒரு இரண்டாம்தரப் பிரஜையாகவே வர்னிக்கப்படுகின்றது. கருதும்படி வைத்திருக்கின்றது. சமூக விதி முறைகள் நியமனங்கள் மரபுகளிலும் பண்பாட்டம் சங்களிலும் பெண் அடுத்தநிலைப் பிறவியாகவே கண்ப்பிடப் படுகிறாள். இவற்றை மீறும் துணிவைப் பெறும்விழிப்பு நிலைக்கு நாம் முழப்பெண்களையும் முழச் சமூகத்தையும் தயார்படுத்தவேண்டும். இந்தத் தயார்ப்படுத்தல் சிறு அளவிலாக இயங்கும் பெண் சிந்தனை வட்டத்தை மேலும் அகலமாக்கி முழு மனிதரிடத்தும் கலப்பதாகவேண்டும்.பெண் அடையாளத்தால் ஒடுக்கப்படும் பெண் மட்டும் தெளிவுபெற்றால் போதாது. ஓடுக்கும் முழச் சமூகமும் இந்தத் தெளிவைப் பெறவேண்டும். புதிய புரட்சிகர மாற்றத்துக்கான மனோ நிலைக்கு வளரவேண்டும். ஜனநாயகத்தின் உயரிய அம்சங்களால் புரிந்துகொண்டு அந்தத் தளத்துக்கு தன்னை விரிக்கும் பண்பைப் பெறவும் வேண்டும்.
போராடும் பெண் சமூகச் சிந்ததனையிலும் செயற்திறனிலும் தேசமாக முழமைபெற்று விரிந்திருக்கிறாள். வீட்டுக்குள், சுவர்களுக்குள், வேலிகளுக்குள் முடக்கப்பட்டும் முடங்கியுமிருந்த நிலையை விட்டு சமூகமாக, தேசமாக பரந்துவிட்டாள். சகல நிலைகளிலும் சமத்துவமாக ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி வருகிறாள். இந்த வெளிப்பாட்டினூடகா அவள் செய்து வரும் செயற் பிரகடனத்தின் பின்னும் நாம் மரபுகளின் பின்னும் பண்பாட்டுக் குறைபாடுகளின் பின்னும் வழமைகளின் பின்னும் இன்னும் இருண்ட பதுங்கு குழிகளை எத்தனை நாளைக்குத்தான் மனச்சாட்சிக்கு விரோதமாக வைத்திருக்கமுடியும்.

பாரம்பரியங்களிலும் மரபு வழமை பண்பாடு சடங்கு என்ற வளையங்களாலும் ஒடுக்குமுறைக்கு ஆதரவான கல்வித்தடுப்புச் சுவர்களாலும் சிறையிடப்பட்டிருக்கும் பெண் வாழ்வை மீட்கும் நடைமுறையின் தேவைபற்றிய தெளிவே இன்று எல்லோரிடத்திலும் வேண்டப்படுவது. பெண் விடுதலை என்றால் என்ன என்று அறியாத, ஏன் என்று உணராத நிலையே பெரும்பாலும் எமது சமூகத்தில் உள்ளது. பலரிடம் ஒருவித தவறான புரிதலும் விரோத மனப்பாங்குமே காணப்படுகின்றது.

நமது அறிவென்பது எத்தகைய பண்பையும் நாகரிகத்தையும் நமக்கு வழங்குகிறறது என்ற கேள்வியை பலரும் எழுப்புவதில்லை. ஓருவரை அடிமைப்படுத்துவதோ, அடுத்தநிலையில் வைத்திருப்பதோ கருதுவதோ எமது பண்பில் இருந்து எம்மைக் கீழிறக்கிவிடுகிறது. எம்மை நாகரிகமற்றவர்களாக்கி விடுகிறது.எம்மை அறிவற்றவர்களாக்கி விடுகிறது.

ஓரு அறிவார்ந்த சமூகம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு ஆரோக்கியமான சமூகம் தன்னுள்ளிருக்கும் குறைபாடுகளை நீக்கிவிடும். இதற்குப் பிரதானமாக வேண்டப்படுவதும் சிந்தனையும் சீரிய செயற்பாடும். உண்மையைக் கண்டறிவதும் நிலைமையை உணர்ந்து கொள்வதும் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதும் அச்சமூகத்திற்கு அவசியமானது. நாம் இன்று இத்தகையதொ முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். புதிய வாழ்வுக்கான தொடக்கத்தில் புதிய பண்பாட்டுக்கான வேலைத்திட்டத்தில் இருக்கின்றோம்.

போராட்டமும் யுத்தமும் இருக்கும் தளைகளை அறுத்து புதிய வாழ்வை, விடுதலையைத் தருமென்பார்கள் ஆனால் எமது சூழலின் நிலையில் ஒருபக்கம் இந்த உண்மையைக் கொண்டிருந்தாலும் இன்னும் பெண் தொடர்பான அணுகுமறையிலிருந்து அதன் பாரம்hரியத் தன்மையை விட்டு புதிய பாதையில் பயணிக்க்கத் தயங்குகிறது என்பதே தோன்றுகிறது.
யுத்தம் சமூக நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியைத் தந்தாலும் நமது புலம்பெயர்வு ஏற்படுத்திய ஈடுகட்டல் எனடபது மீண்டும் பழமைகளையும் மரபையும் பேணிக்கொள்ள ஒருவகையில் இச்சமூகத்துக்கு உதவியளிக்கிறது. சீதனம் பெண் ஒரு அழகுப் பொம்மை. பெண் ஒரு இரண்டாம்தரப் பிரஜை என்ற மனப்பாங்கை இன்றும் காப்பாற்றிவருகிறது.
பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றிய புதிய வியாக்கியானங்களையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் உண்மையையும் கண்டுகொள்ள விருப்பவதா, காணவேண்டியில்லாத நிலையையே இவை தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இப்போது நமக்குள் முக்கிய பணியதார்த்தத்துக்குப் பொருத்தமான புதிய கருத்தூட்டல் உண்மை உணர்த்தல் விழிப்பும் ஆற்றல் வெளிப்பாடுமேயாகும்.

ஓருபக்கம் தேசமாக விரிந்திருக்கும் பெண் விடுதலை சிறகசைக்கும் பெண் சமூகமாய் மலர்ந்திருக்கும் பெண் இன்iனாரு பக்கம் கலாச்சாரம் என்ற வளையங்களுக்குள் ஒடுங்கிய பெண், மரபு என்ற வட்டங்களுக்குள் சுரண்டுகொண்டிருக்கும். பெண், வழமை னெ;ற சூத்திரத்துள் சுழலும் பெண், இந்த இரண்டு நிலையிலும் சமகாலத்தில் கொண்டிருக்கும் நமது சமூகம் எப்படி இனிப்பயணிக்க வேண்டும் என்பதே நமக்குள்ள தேர்வாகும்.

Keine Kommentare: