Montag, August 11, 2003

கனவு நனவானது - மலைமகள்

பலவீனமாயிருந்த தமிழ்ச் சமூகத்துப் பெண் இனத்தின் மிகப் பலம் வாய்ந்த சக்தியாகவே பெண் போராளிகளைத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார். தமிழீழத்தின் கொல்லைப் புறங்களிலும் வீடுகளின் மூலையிலிருக்கும் சமையலறைகளிலும் முடங்கி, பலம்குன்றி, சிதறிக்கிடந்த பெண்களை, இன்று யாராலுமே மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பெரும் சக்தியாக ஒருங்குவித்தார். எங்கள் விடயத்தில் யாருமே நம்பியிராத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். அவர் செய்த அற்புதங்கள் இனம், மொழி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
1998இல் அன்னை பூபதியின் நினைவுநாள் நிகழ்வின்போது வெரித்தாஸ் தமிழ்ப் பணிப் பொறுப்பாளர் அருட்திரு ஜெகத் கஸ்பார் அடிகள் மேற்குலகிலே ஆற்றிய உரை ஒன்றிலே பின்வருமாறு குறிப்பிட்டார்.

"நான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவற்றிலே ஒன்று பெண்ணடிமைச் சமூகத்தில் வாழ்ந்த பெண்கள் இன்று போராடிக் கொண்டிருப்பது" ஒருவரின் கண்களிலும் படாமல் ஒதுங்கியிருந்த எம்மை உலகின் புருவம் உயரும்வரை து}க்கி நிமிர்த்த எமது தலைவர் அவர்கள் கடந்த தடைகள் கொஞ்சமல்ல.
பெண்ணடிமைச் சமூகத தின் கோரப்பிடியுள் நசுங்கிக் கிடந்த பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி, அவர்களின் கடமைகளைப் புரிய வைத்து, விடுதலை உணர்வுடன் எழுந்தவர்களை ஒன்றுசேர்த்து அணியாக்கி, அதுவரை காலமும் ஆண் போராளிகள் செய்துவந்த பயிற்சிகளையெல்லாம் செய்வித்து, ஆயுதங்களுடன் தமிழர் தெருக்களில் உலவச் செய்யலாம், சிங்களப் படைகளின் தலைகளைச் சீவலாம் என்று யாருமே துளிகூடக் கற்பனை பண்ணிப் பார்த்திராத காலத்தில், அதைச் செய்ய முனைந்தார் அவர்.
அந்த நேரத்திலேயே இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக இருந்த பலர் இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்று தமக்குள்ளேயே யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்க, தலைவர் செயலிலேயே இறங்கிவிட்டார். இது சாத்தியமா என்ற ஐயப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே அது சாத்தியமாகிவிட, அதற்குமேல் அதைப்பற்றிக் கதைப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?
எல்லோருக்கும் சவாலாக தலைவரின் கனவு நனவாகத் தொடங்கியது. முதற்கட்டமாக பெண்களை அணிதிரட்டி, இந்தியாவின் திண்டுக்கல், சிறுமலைக் காட்டுப் பாசறை வரை கூட்டி வந்தாயிற்று. இனி அவர்களைச் சரியான முறையில் கையாளக் கூடியவர்களை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க ஒழுங்கு செய்ய வேண்டுமேயெனச் சிந்தித்து, தானே நேரடியாகப் பயிற்சியாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார். அநேக பயிற்சிகளை தானே நேரடியாகக் கண்காணித்தார். அருகிலிருந்து சொல்லிக் கொடுத்தார்.

பலரின் கேலிக்குச் சவால் விட்டு, சமூகத்தின் வளர்ப்பு முறையால் ஒதுங்கிப் போகின்ற இயல்பும், பிடிவாதமும் வீம்பும் கொண்ட இவர்களை உளவுரன் கொண்ட போர்வீரர்களாக வளர்த்தெடுத்ததில் முழுப்பங்கும் தலைவருடையதே. அவரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கவல்ல மூத்த போராளிகள் தலைவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் இவர்களைப் புடம் போட்டனர்.


அண்ணனின் ஆணை
அதுவரை காலமும் இயக்கத்தில் அனைத்து உறுப்பினர்களும் எடுத்த அனைத்துப் பயிற்சிகளையுமே திறம்பட முடித்து தாயகம் திரும்பிய தேசத தின் புதல்விகள் எல்லோரினதும் கைகளிலும் ஆ-16 ரகத் துப்பாக்கிகள். அந்த நேரத்தில் மிகவும் மதிப்பான, கிடைப்பதற்கு அரிதான துப்பாக்கி அது. எல்லோருக்குமே ஆ-16 என்றால் தனி விருப்பம். தன் கண்ணருகே அல்லாமல் து}ர நிற்கப் போகும் இவர்களிடமிருந்து ஆண் போராளிகள் எப்படியாவது ஆ-16ஐ வாங்க முயற்சி செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவிலேயே இவர்களிடம்,
"யார் கேட்டாலும் இதை நீங்கள் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லித்தான் அனுப்பி னார். அது போல தாயகத்திலிருந்த அனைத்துப் போராளிகளுக்குமே "யாரும் இவர்களிடமிருந்து ஆ-16ஐ வாங்கக் கூடாது" என்ற கண் டிப்பான கட்டளையொன்றையும் அனுப்பியிருந்தார். தலைவரின் அந்த ஒரு வசனமே பெண் போராளிகளின் கையில் அவர்களது ஆ-16களைத் தக்கவைக்கப் போதுமானதாகவிருந்தது. தலைவர் அப்போது இவர்களின் அருகே இல்லை. பல கிலோ மீற்றர்களுக்கப்பால் கடல் கடந்த து}ரத்திலிருந்தாலும், அவரின் ஒரே ஒரு வசனம் இவர்களின் பிரியத்துக்குரிய ஆயுதத்தை வேறு யாரும் நெருங்கிவிடாமல் பாதுகாத்தது.

மாற்றம் மலரும் காலம் 1987இல் யாழ்ப்பாணத்தில் கோட்டை, நாவற்குழி இராணுவத்தளங்களைச் சூழவிருந்த காவலரண்கள் சிலவற்றில் பெண் புலிகள் கடமையாற்றிக் கொண்டிருந்த நேரம் ஒரு தளபதி தன் மனதில் நெருடிக்கொண்டிருந்ததைத் தலைவரிடம் கேட்டே விட்டார்.

"அண்ணா, பெண் பிள்ளையள் இப்படி ஜீன்ஸ், சேட்டோடை திரியிறதை யாழ்ப்பாணச் சனம் ஏற்றுக்கொள்ளாது. அவை சட்டையோடை இருந்தா என்ன?" என்றார். பெண் போராளிகள் ஜீன்ஸ், சேட் லு}லு}லு}லு}லு}. சிரித்துக் கொண்டார். அவரிடமே,
"நடைமுறைகள் மாறும்போது இப்படித்தான் விமர்சனங்கள் வரும். பிறகு காலப்போக்கில் பழகிவிடும்" என்றார். இதன் பின்னர் பெண்கள் பற்றிய தம் பிற்போக்கான எண்ணங்களை தலைவரிடம் சொல்ல யாருமே துணிவதில்லை. பெண் போராளிகள் விடயத்தில் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயன்றனர். தற்செயலாக எமது விடயத்தில் தவறாக எதையாவது சொன்னால், செய்தால் அவரால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிவரும் என்ற அச்சத்தாலேயே அவா கள் எங்களிடம் மரியாதையு டன், மிகுந்த கவனத்துடன் பழகி, புரிந்து கொள்ள முயற்சித்தார்கள்.

காட்டுக்குள் எல்லோருமே தலைவரின் அருகில் இருந்தபோது அவர் எம்முடன் பழகும் விதத்தை, நடத்தும் விதத்தை நேரடியாகவே பார்த்து தாமும் நடக்க முயற்சித்தார்கள். எங்களிடம் அவருக்கு இருக்கின்ற அக்கறையைப் புரிந்து கொண்டார்கள்.

தன்னம்பிக்கையே நல்வழிப்படுத்தும்
இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தில் தன் கோரக் கால்களைப் பதித்திருக்க, தலைவர் வன்னியிலே புலிகளின் தளத்தை அமைத்து இயக்கத்தைப் பலப்படுத்தினார். அந்த நேரம் பெண் போராளிகளின் முதலாவது அணியினரும், இரண்டாவது, மூன்றாவது பாசறைகளிலே பயின்றவர்களுமாக கூடியளவிலான பெண் போராளிகள் மணலாற்றுக் காட்டினுள் தலைவருடன் பாசறை அமைத்துத் தங்கியிருந்தனர்.
தலைவரின் குடில் நடுவே இருந்தது. அதற்கு ஒருபுறம் பெண் போராளிகளின் குடில்களும், இன்னொருபுறம் ஆண் போராளிகளின் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இரு பாலாரும் காலைப் பயிற்சிக்காக ஓடுவதற்குத் தனித்தனி ஓடுபாதைகள் இருந்தன. ஆனால், இரண்டு ஓடு பாதைகளுமே தலைவரின் குடிலின் வாசலுக்கு நேரே வந்து சந்திக்கும். காலையில் பயிற்சிக்காக ஓடினாலும் சரி, தலைவரின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவர் எல்லோரையுமே பார்த்துக் கொண்டிருப்பார்.
தவறுகள் செய்து தண்டனையில் ஓடினால் தலைவர் கண்டுவிடுவாரே என்பதற்காகவே எம்மவர்கள் அநேக தவறுகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். என்றாலும் எங்கேனும் நிகழும் சிறுதவறுகள் ஒருநாளுக்கு ஒருவரையாவது அந்த ஓடு பாதைக்கு அழைத்து வந்துவிடும். தவறுகளின் வகைக்கேற்ப பாய், பானை, சட்டி, வாளி எனப் பலதரப்பட்ட பொருட்களைச் சுமந்தவாறு ஓட வேண்டியிருக்கும். தலைவரின் குடிலுக்கு நேரே ஓடிவரும்போது யாருக்குமே அவரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இராது.
ஓடி முடிந்ததும் தலைவர் கூப்பிட்டு "என்ன நடந்தது" என்று கேட்பார். யாரால் என்ன விட யத்துக்காகத் தண்டனை தரப்பட்டது என்பதை அவர் முன் நின்று சொல்லி முடிப்பதற்குள் உயிரே ஒரு முறை போய் வரும். மறந்து போய்க்கூட அந்தத் தவறை இன்னொரு முறை செய்யமாட்டாத அளவுக்கு அது மனதில் பதிந்துவிடும்.
"அண்ணாவின் அருகிலேயே நிற்கின்றோம். அவர் கண் பார்வையில் வளர்கின் றோம்" என்ற உணர்வே எம்மை பல வழிகளில் நெறிப்படுத்தும். பிழைகளைச் செய்யவிடாது தடுக்கும்.
மலைமகள்

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்.....2 கு.தீபா

குற்றமிழைத்த சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என உணராது, குசுகுசுப்பதும், கேலி பேசுவதுமாய் பாதிக்கப்பட்டவரை நடைபிணங்களாக்கும் எமது பெண்கள் மாறுவது எப்போது?
தனிவழியே, தன்னையே துணை கொண்டு பெண்ணொருத்தி நடமாடும் காலமதை உருவாக்கும் சக்திகளாக பெண்கள் மாற வேண்டும்.
சீ தைகளாகவும், நளாயினிகளாகவும் பெண்களை உருவகப்படுத்தும் காலங்கள் எப்பொழுதோ சென்றொழிந்துதான்விட்டன. இன்றைய பெண்கள் விண்ணிலும், கடலிலும் தரையிலும் விரியும் பல கள முனைகளில் தங்களை நிலைநாட்டும் புதுவேகம் கொண்டு புறப்பட்டுவிட்டார்கள்.
எனினும் ஆங்காங்கே இலைமறைகாயாக இன்னும் தங்கள் மென்மையையும், பெண்மையையும் நிரூபிக்கும் சீதைகள் பலர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
தன்னை இன்னொரு பெண்ணிடமும், ஆணிடமும் சமூகத்திடமும் குற்றமற்றவளென நிரூபிக்கவேண்டி தற்கொலைக்கு முயற்சிப்பதும், அதற்கான உள உரன் அற்றவர்கள் நடைப் பிணங்களாக மாறுவதுமான நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். அதற்கான முதற்படி, சிந்தனையில் எண்ணப்போக்கில் ஏற்படும் மாற்றங்களே.
சிறந்ததொரு குடும்பத்தின், சமூகத்தின் ஆதாரம் பெண்ணே. அப்பெண் 'நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்' கொண்டவளாக உருவாக வேண்டும், உருவாக்கவேண்டும்.


அந்த மருத்துவ விடுதி வராந்தாவில் நுழையும் போதே வேதனை மிகுந்த அரற்றலொன்று காதில் விழுந்தது. கண்களால் அரற்றல் வரும் திசையைத் துழாவியபடியே விடுதியினுள் நுழைந்தேன். உடல் முழுவதும் திட்டுத் திட்டான எரிகாயங்களுடன் முனகியவாறு இருந்த அப்பெண்ணின் தோற்றம் வெகுவாய் என் மனதை அதிரவைக்கத் திகைத்துப் போய் நின்ற என்னை, எனது தோழியின் கரங்கள் உலுக்கி நடப்புக்குக் கொண்டு வந்தன. 'என்ன! என்னைக் காண வந்திட்டு இதிலை திகைச்சுப் போய் நிற்கிறீர்?' மருத்துவமாதுவாகப் பணிபுரியும் என் தோழி என் மனநிலையைப் புரிந்துகொண்டவரை ஆதரவாக என்னை அழைத்துச் சென்றாள்.
'என்னப்பா? என்ன நடந்தது இந்தப் பிள்ளைக்கு?'
'மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைச்சவவாம்?'
'தனக்குத்தானேயோ?'
'ஓமோம்'
'ஏன்? ஏன் அப்பிடிச் செய்தவா?' பதைபதைத்த மனதுடன் கேட்டேன்.
'ஒரு பொடியனை விரும்பிக் கல்யாணம் செய்தவவாம், கொஞ்ச நாளிலையே அவன் சீதனம் கேட்டு பிள்ளைக்கு அடியாம். அதோடை ஒரே சந்தேகமாம். ஒருத்தரோடையும் கதைக்கப் பேசக் கூடாது, இந்தச் சம்பவம் நடந்த அன்றும் சீதனம் கொண்டுவா என்று அடிச்சுப்போட்டு, அவனோட என்ன கதை என்று யாரோ தெரிஞ்ச ஆளோடை கதைச்சதுக்கு அடிச்சவனாம். பிள்ளை உடனை ஓடிப்போய் 'நான் பத்தினியடா, நான் பத்தினிதாண்டா' என்று சொல்லிக்கொண்டு நெருப்புப் பத்த வைச்சிட்டுது. அவன் நல்லா எரியுமட்டும் பார்த்துக்கொண்டு நின்றிட்டு. பிள்ளையின்ரை அலறலுக்குச் சனம் ஓடிவர ஓடிப்போனவன்தான் ஆள் திரும்பி வரேல்லை. சனம்தான் கொண்டு வந்து சேர்த்தது. பாவம் பிள்ளைக்குப் பத்தொன்பது வயதுதான். மனதில் ஓடிய காட்சிகளை தோற்றுவித்த வேதனையையே என்னால் தாங்க முடியாதபோது இப்பெண் எவ வாறு அதைத் தாங்கியிருப்பாள்.
ஆறேழு மாதங்கள் வைத்தியசாலைப் படுக்கையோடு படுக்கையாக அழுந்தியபோது, மனதிலும் உடம்பிலும் ஏற்பட்ட வடுக்கள் காலம் முழுவதும் அவள் சீதையாகித் தீக்குளித்ததற்குச் சான்றாய்லு}
கொடுமையான சாவைத் தாங்குவதற்கு மனதில் ஏற்பட்ட உரம், ஏன் வாழ்வதற்கு ஏற்படவில்லை? தீக்குளித்துத் தன்னை நிரூபிக்கத் துணிந்த பெண்ணால் ஏன் வாழ்ந்து நிரூபிக்க முடியவில்லை.
ஆணிடம் வதைபட்டுத் தன்னை வாழவைப்பதற்காக அவனுக்குப் பணம் கொடுத்து, அவனின் சந்தேகத்துக்குள்ளாகி, அவனிடம் தன்னைத் தனது கற்பை நிரூபித்து, வாழ்க்கையின் நியமங்கள் இவை தானென்று அப்பெண்ணுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? காவியங்களும், காப்பியங்களும் உருவாக்கிய பெண்மையின் வரைவிலக்கணங்களை மாற்றி, வாழ்க்கை நீ வாழ்ந்து காட்டுவதற்காகவே என்ற எண்ணப்போக்கை இப்பெண்ணின் மனதில் ஏற்படுத்தப் போவது யார்?
நான் காத்திருக்கிறேன், தன்னைத் தன் சூழ்நிலையை அப்பெண் உணர்ந்துகொள்ளும் நாளிற்காக.

உருவமும் முகத்தில் தாழ்ந்த புன்னகையும் அப்பெண்ணின் மேல் இயல்பான விருப்பையேற்படுத்தின. சிரித்த முகத்துடன் என்னை வரவேற்ற அப்பெண்ணின் புன்னகை தனது எட்டு வயது மகனைக் கண்டதும் திடீரென மறைந்தது. மகன் அவனது கடந்த காலத்தின் சின்னமாய் இருந்ததுதான் அவனது புன்னகை மறையக் காரணமாயிருக்கலாம்.
தனது கடந்தகால வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்த அப்பெண்ணின் அப்பாவித் தனமான பேச்சு என் மனதைச் சுட்டது. ஏனெனில் அவளுக்கு அநீதி இழைத்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம்.
'ஒன்பது வருசத்திற்கு முதல் அவர் எங்கடை பக்கத்து வீட்டிலைதான் இருந்தவர். அப்பதான் நாங்கள் ஒராளை ஒராள் விரும்பினம். அயல்லை எல்லோருக்கும் தெரியும். அதாலை அவர் கட்டாயம் கல்யாணம் செய்வார் என நினைச்சனான்' ஆனால் பிள்ளை வந்தாப்பிறகு அவர் அது தன்ரை பிள்ளை இல்லை, தனக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லை என்று சொல்லிப்போட்டாருங்கோ'
'அப்ப அயலுக்கையெல்லாம் தெரியுமென்று சொன்னீங்கள். அவை ஒருதரும் கல்யாணம் செய்துவைக்க முயற்சி எடுக்கேல்லையோ?'
'இல்லை எல்லோரும் என்னைத்தான் பேசிச்சினம். அவற்றை வீட்டுக்காரர் அவரை வேறையாருக்கோ அவசரமா கல்யாணம் செய்து வைச்சிட்டினம்'
'அப்ப நீங்கள் ஏனக்கா பேசாம இருந்தனீங்கள்? உங்கடை உரிமையை நீங்களெல்லோ சண்டை போட்டுப் பெற்றிருக்கவேணும்'
'நானப்ப சனத்தின்ரை பேச்சுக்குப் பயந்து வீட்டை விட்டே வெளியிலை வரவில்லை. வீட்டுக்காரரும் எனக்கு ஒரே பேச்சு'
'அப்ப மகனுக்கு அப்பாவைத் தெரியுமே'
'ஓ! ஒழுங்கையாலை போகேக்கை காட்டினனான்'
என்ன கொடுமை தனது தந்தையை மகன் தெருவில் கண்டு அறிந்துகொள்ளும் நிலை. மனிதர்களால் கைவிடப்பட்ட பெண்ணை இயற்கையும் தனது பங்கிற்குக் கொடுமைப்படுத்தியது. மார்பகங்களில் கட்டியேற்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருக்கும் அப்பெண்ணிற்கு வாழ்க்கை பெரும் சுமையாய்.
தெரு வழியே தலை நிமிர்ந்து குற்றம் புரிந்த அம்மனிதன் சென்று கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட பெண்ணோ வீட்டிற்குள் முடங்கிப் போய்லு}.
அப்பெண்ணின் குழந்தைக்கு இவனே தந்தையென்று அறிந்திருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்து நின்று பெண்ணையே குற்றவாளியாக்கும் சமூகம்லு}.
அப்பெண்ணினது முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட சோகம். அப்பையனது கண்களில் தென்பட்ட ஏக்கம். இவையிரண்டும் நிரந்தரமாய் தீர்க்க முடியாமல்லு}.


பரிசோதனைக்காக கட்டிலில் ஏறிப்படுத்த அப்பெண்ணிற்கு வயது 16 தான் இருக்கும். கண்களில் இருந்த மிரட்சி அவனது குழந்தைத்தனத்திற்கு இன்னும் சான்றாய்லு} பல முகங்கள் ஆளையாள் பார்த்தன, குசுகுசுத்தன. ஓ! இந்தப் பெண்ணிற்குப் பின்னால் ஏதோ கதை உள்ளது போலுள்ளது என எண்ணிக்கொண்டேன்.
யாரையும் ஏறெடுத்துப்பார்க்காமல் குனிந்த தலையுடன் இருந்த பெண் என்னுடன் பேசத் தொடங்கியதைக் கண்ட மற்றவர்களின் வியப்பு அப்பெண் உறவுகள் நட்புகளில் இருந்து வெகு தூரம் தனித்துவிட்டாள் என விளக்கியது.
முகத்தின் குழந்தைத் தனத்தைப் பொய்ப்பிப்பதாய் வயிறு இருந்தது. ஏழுமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண், இதுவரை சிகிச்சை நிலையத்திற்கே வரவில்லை என மருத்துவமாது குறைகூறினார்.
'ஏனம்மா வரேல்லை?' என்ற என் கேள்விக்கு கலங்கிய கண்களுடன் விடை பகர்ந்தாள் அப்பெண்.
'நான் புதுக்குடியிருப்புக்கு மாமி வீட்டை போட்டு வந்துகொண்டிருந்தனான். காட்டுப் பாதையாலை வரேக்கை யாரோ ஒருத்தன் வந்து என்னைப் பிடிச்சு காட்டுக்கை இழுத்துக்கொண்டு போய் ஏதோ செய்து போட்டான்' கண்களில் இருந்து கண்ணீர் விழ அவள் கூறிய 'ஏதோ' அவளின் குழந்தைத்தனம், அறியாமையை இனங்காட்ட அந்த 'யாரோ ஒருத்தனை' எவ வாறு இனங்காண்பது எனத் திகைத்தேன்.
அந்த 'ஏதோ' வைத்திருக்கும் அறிவும் வல்லமையும் அப்பெண்ணிற்கு இல்லாமல் போனமையும், அதனை அப்பெண்ணிற்கு அளிக்க மறுத்த குடும்பமும் சமூகமுமே இப்பெண்ணின் நிலைக்கு காரணகர்த்தாக்கள் என்ற உணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் கடமை எங்கள் முன்னேலு}.
குற்றமிழைத்த சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என உணராது குசுகுசுப்பதும், கேலி பேசுவதுமாய் பாதிக்கப்பட்டவரை நடைப் பிணங்களாக்கும் எமது பெண்கள் மாறுவது எப்போது?
தனிவழியே, தன்னையே துணை கொண்டு பெண்ணொருத்தி நடமாடும் காலமதை உருவாக்கும் சக்திகளாக பெண்கள் மாற வேண்டும்.

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்......கு.தீபா

இன்று பல்துறைகளிலும் பெண்கள் கல்வியறிவு, சிறப்புத்தேர்ச்சிபெற்று தன்னிகரற்று விளங்குகின்றார்கள். நாட்டை ஆட்சிசெய்யும் தலைவர்களாய், தொழிற்துறை விற்பன்னர்களாகவும், விண்வெளியிலும்கூட உலகப் பெண்கள் சாதனைபடைக்கின்றார்கள். மேலும் பெண்களின் வீரவரலாறுகளின் சான்றுகளாய் களமுனைகள் விரிகின்றன.
ஒருபகுதிப் பெண்கள் அறிவு, தேடல், சாதனை என சிகரங்களில் ஏறிக்கொண்டேபோக, இன்னுமொரு பகுதியினரோ அடிநிலையில் வேதனையில் அழுந்தி அழுந்தி மீட்சியின்றி இரண்டாந்தரப் பிரஜைகளாகலு}..
போருக்கும் அதன் மறைமுக விளைவான பொருளாதார சமூகத் தாக்கங்களுக்கும் நேரடியாக முகங்கொடுக்கும் பெண்கள், இன்னும் புரிந்துணர்வின்மையால் அனுபவிக்கும் கொடுமைகள் பல. இப்புரிந்துணர்வின்மை ஆண்களிடமிருந்து மட்டுமல்லாமல் பெண்களிடமிருந்தும் வெளி ப்படுவதுதான் வேதனையான உண்மை. பாதிப்பிற்குள்ளாகி வேதனையில் அழுந்திப்போகும் பெண்களுக்கு உளாPதியான ஆதரவை வழங்குவதன் மூலம் பெண்கள் தங்களைச்சுற்றிக் கீறப்பட்ட குறுகிய வட்டங்களிலிருந்து புதுப்பலத்துடன் வெளிவரலாம்.
புறத்திருந்து கொலை, பாலியல் வல்லுறவு என எதிரி துன்புறுத்த உள்ளிருந்து தெளிவற்ற சிந்தனை, புரிந்துணர்வின்மை போன்ற எதிரிகள் பெண்களை அடிமைப்படுத்த இனியும் நாம் சகித்துக்கொள்ள வேண்டுமா?
இதன் விழிப்புணர்விற்கான முதல்த்தேவை எம் சமூகத்தில் எமது பெண்கள் அனுபவிக்கும் இலைமறை காயாக வெளிவராமல் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்தலும், ஏன்? எதற்கு? எப்படி? எனத் தீர்விற்கான வழிகாணலுமேயாகும். அதற்காக வேண்டி என் வாழ்வின் பயணத்தில் அண்மைய நாட்களில் என் மனதைக் கீறிய சில சம்பவிப்புக்களை உங்கள் முன் வைக்கின்றேன்.
அந்த மருத்துவமாதுவைச் சீண்டிக் கதைக்க வைப்பதினால் நான் அடையும் பலன்கள் பல. இன்றும் அவவைத் தூண்டினால் ஏதாவது பிரயோசனமான விடயம் காதில் விழும் என எண்ணியவாறே, படலையைத் திறந்தபோது 'உந்தப் பொம்பிளைக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்' எனும் வார்த்தைகள் காதில் விழுந்தன.
'என்னக்கா என்ன பிரச்சினை?' என்றேன். 'அதுதான்லு}. அந்த மல்லாவி ஆஸ்பத்திரியில நடந்தது. உங்களுக்குத் தெரியாதென்றால் நான் நம்பமாட்டன்'
எனக்குத் தெரிந்திருக்கவேகூடும் எனினும், தெரியாததுபோல் நடிப்பதில் வெற்றிகண்டேன். 'எங்கடை ஊர்ப்பிள்ளையொன்று இன்றைக்குப் பத்தொன்பது வயதுதான் இருக்கும். மல்லாவி ஆஸ்பத்திரியிலை கர்ப்பப்பையை எடுத்திட்டினமாம்'
அனுதாபத்தைவிட மேலதிகமாகத் தொனித்த அருவருப்பை மனதில் கணித்தபடியே 'அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது?' என வினவினேன். 'அவவும் மச்சான்காரப் பொடியனும் விரும்பி இருந்தவை. இரண்டு வீட்டாரும் உடன்பட்டு கல்யாணம் செய்துவைக்க இருந்தவை. பொடியனுக்கு வீட்டிலை பொறுப்பு இருக்குதென்று கொஞ்ச நாள் பின் தள்ளிப்போட்டால் அதுக்கிடையிலை அவவுக்கு வயிற்றிலை பிள்ளை. ஊரிலை யாரோ ஒரு நாட்டு வைத்தியரிட்டை கருக்கலைப்புச் செய்யப்போயிருக்கினம். அந்தாள் என்னத்தாலையோகுத்த அது கருப்பையைக் கிழிச்சுப்போட்டுதாம் ஒரே இரத்தப்போக்கோடை மயங்கின நிலையிலை பிள்ளையை மல்லாவி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனா கர்ப்பப்பையை எடுக்கவேணும் எண்டு சொல்லிப்போட்டினமாம்' வலுவாக மனதைத் தாக்கிய வேதனையின் கனத்தில் மௌனமாக இருந்தேன். 'என்ன நீங்கள் கவலைப்படுறியள் போலை. அறிவில்லாமல் நடக்கிறவைக்கு உதுவேணும். நீங்கள் ஏன் யோசிக்கிறியள்?'
பத்தொன்பது வயதில் இனி வாழப்போகும் காலம் முழுவதும் வேதனையைத் தரும் கொடுமையை அனுபவித்து, இத்தகைய பழிச்சொற்களைக் கேட்டு, பெண்மையின் உச்ச நிலையான தாய்மை மறுக்கப்பட்டு,உள உடல் வேதனைக்காளாகித் தவிக்கும் அப்பெண்ணிற்கு இத்தகைய வார்த்தைகள் எதை வழங்கும்? இப்பொழுது அவளுக்கு என்ன தேவை? அன்பு, ஆதரவு, இம்மண்ணில் உள உரம் கொண்டு வாழ்வதற்கான வழிகாட்டல் இவற்றை வழங்குவது யார்? கேள்விகள் அலைமோத 'அக்கா அந்தப்பெண் அவளின் வாழ்க்கை, அவளின் குழந்தை பெறும் உரிமை இதையெல்லாம் நீங்கள் யோசிக்கேல்லையோ?' என்று மெதுவாகக் கேட்டேன். 'நாங்கள் யோசிச்சு? அவையெல்லோ யோசிச்சிருக்கவேணும். கல்யாணம் செய்யாம அவவுக்கு அவனோடை என்ன உறவு?'
உண்மையாகவே இருக்கலாம். எனினும் முழு மனதோடல்லாமல் நிர்ப்பந்தம் காரணமாகவே தனக்குக் கணவனாகப் போகிறவனின் விருப்பிற்கிணங்க வேண்டிய தேவை அப்பெண்ணிற்கு இருந்திருக்கலாம். ஒரு பெண் விரும்பாமலே, அவளின் சம்மதமின்றியே நிகழக்கூடிய ஒரு நிகழ்விற்கு அவளையே காரணமும் காரியமுமாக்கி, அறியாமையால் தன்னைத் தொலைத்து நிற்கும் பெண்ணிற்கு வார்த்தைகளில்கூட ஆறுதல் சொல்லவிரும்பாத, புரிந்துகொள்ளவிரும்பாத சமூகம், குறிப்பாகப் பெண் சமூகம்லு} முள்ளாய் நெஞ்சில் உறுத்தப் புறப்பட்டேன், அப்பெண்ணைத் தேடி.
-0-
வானத்தில் விமானங்களின் இரைச்சல். அண்ணாந்து பார்த்தவாறு நின்ற எனக்கு அருகில் யாரோ பெரிதாக மூச்சுவிடுவதுகேட்டது. திரும்பிப்பார்த்தேன். வேகவேகமாக மூச்சுவிட்டவாறு அகலவிரிந்த கண்களுடன் அப்பெண் அலங்கமலங்க வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 'அம்மா' என்ற எனது அழைப்பு காதில் விழாதது போலிருந்த அவள் திடீரென்று எதையோ முணுமுணுத்தாள். 'ஐயோ பொம்மர்லு} என்ரை பிள்ளைலு} ஐயோ பொம்மர்' எனச்சீரான ஒரு ஒழுங்கில் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டே தனது வயிற்றை இரு கைகளாலும் பொத்தியபோதுதான் அவள் கர்ப்பிணி என்பதை அறிந்தேன். ஐந்து ஆறு மாதக் கர்ப்பம் இருக்கும். பயந்துவிட்டாளோ அல்லது வீட்டில் விட்டு வந்த குழந்தையை எண்ணிப் பயப்படுகிறாளோ என எண்ணியவாறே 'அம்மாலு}' என அழைத்த வண்ணம் தோளில் கைவைத்தேன். திகைத்துத் திரும்பி என்னைப் பார்த்தவள், என் கண்களில் தெரிந்த கனிவினால் தெளிந்து விம்மியவாறே என்தோளில் சாய்ந்தாள். பதறி நடுங்கிய அவளை அணைத்து மெதுவாகத் தட்டிக்கொடுத்தேன். விமானங்களும் போய்விட்டன. அருகிலிருந்த பானையிலிருந்து எடுத்துக்கொடுத்த நீரை அருந்தியவளிடம் சிறு சிரிப்புடன் 'என்னம்மா பொம்மர் என்றால் பயமோ?' எனக் கேட்டேன்.
இலகுவான உரையாடலைத் தொடக்கவிரும்பிய என் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் விக்கிவிக்கி அழத்தொடங்கியவளைத் தேற்ற முயன்று தோற்று அழுது தீர்க்கட்டும் என எண்ணியவாறே ஆதரவுடன் கைகளைப் பற்றினேன். அழுது முடித்தவள், 'தங்கச்சி எனக்கு பொம்மர் என்றால் பயம்தான். இரவிலைகூட நித்திரை கொள்ள ஏலாம மூன்று வருசமா பயங்கரக் கனவுதான். கழுகு வந்து என்ரை பிள்ளையைக் கொண்டு போறதுபோலை'
'உங்களுக்கு எத்தனை பிள்ளைகளம்மா?' எனக்கேட்டபோது
'இதுதான் முதல்பிள்ளை' எனும் அவளின் பதிலில் குழம்பினேன். என் குழப்பம் விளங்கியவள்போல 'மூன்று வருசத்துக்கு முதல் நிறை மாசத்தோடை கடைசிக் கிளினிக்குக்கு வந்தன். இதுதானம்மா உங்கட கடைசிக் கிளினிக். அடுத்த மாசம் குழந்தைப்பிள்ளைக் கிளினிக்கிற்கு பிள்ளையைக் கொண்டு வாங்கோ என்று சந்தோசமா மிட்வைமாh சொல்லிச்சினம். நான் கிளினிக்கைவிட்டு படியிறங்க பொம்மர் வந்தது. திடீரென்று வந்து திடீரென்று பதிஞ்சான். ஓடிப்போய் வாசலிலை இருந்த பங்கருக்கை குதிச்சன், பொம்மர் போய் வெளியிலைவருமட்டும் எனக்கு வயிறுநொந்தது தெரியவேயில்லை. சரியா நொந்துச்சுது. அதுக்குப்பிறகு இரண்டு மூன்றுநாள் பிள்ளையும் துடிக்கேல்லை. வயிறு நோகுது என்று ஆஸ்பத்திரிக்குப் போனன்லு}.' முடிக்காமலே அவள் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
'என்னம்மா பிறகு என்ன நடந்தது. ஏன் அழுறியள்?' என நான் பரபரத்தேன்.
'அங்கைலு} அங்கை என்ரை குழந்தை செத்துப்போச்சுது என்று சொல்லிப்போட்டினம். உடனேயே ஊசிபோட்டுப் பெறவைச்சினம். தலையில ஒரு கண்டலோட வெள்ளைவெளேரென்று வடிவான பொம்பிளைப்பிள்ளையொன்று உயிரில்லாமல் பிறந்ததம்மா. பங்கருக்கை குதிக்கேக்கை வயிறடிபட்டு பிள்ளை செத்துப்போச்சுதாம். நான் ஒன்பது மாசமா எவ வளவு கஸ்ரப்பட்டு அந்தப் பிள்ளையைச் சுமந்தன். செத்துப்போன பிள்ளையை நான் பெறேக்கை என்ரை மனமும் உடம்பும் பட்ட வேதனையைவிட அந்தக் குழந்தை செத்தது என்னாலைதானென்று என்ரை அவரும் மாமியும் இந்த மூன்று வருசமும் என்னைப் படுத்தினபாடு.. ஐயோலு} என்ரைபிள்ளைலு} கடவுளே என்ரபிள்ளை' எனப்பெருங்குரலெடுத்து அலறியவாறே வயிற்றைப்பிடித்த வண்ணம் 'இந்தப் பிள்ளையையும் கொல்லப்போறாங்கள்லு} ஐயோ இந்தப் பிள்ளையை நான் விடமாட்டேன்லு} விடமாட்டேன்' என அலறிக்கொண்டு மயங்கியவளைக் கவனித்து முதலுதவி வழங்கி, வேண்டிய உதவிகளைச் செய்து வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு நடக்கத் தொடங்கிய என் மனதில் வேதனைப் பேரலைகள்.
குண்டு போடாமலே என்னால் கொல்ல முடியுமென்று எதிரியவன் நிரூபிக்க, சொற்களாலேயே எங்களால் வதைக்க முடியுமென உற்றவர்கள் நிரூபிக்க, உடலும் உளமும் நொந்து மனோவியாதிக்குள்ளாகும் நிலையிலிருக்கும் இப்பெண்ணை மீட்டு எடுப்பது யார்? காலமாவது அவளின் வேதனைத்தீயை ஆற்றுமா?
-0-
'கடவுளே! இந்தப் பச்சைப் பாலகனுக்குக் கொடுக்கப் பாலில்லையே' எனும் அரற்றலைக் கேட்டவாறே உள் நுழைந்த எனக்கு அது தென்பட்டது. குழந்தை வீறிட்டலறிக்கொண்டிருந்தது. அதனை, வெறித்துப் பார்த்தவாறே செயலற்றிருந்தாள் அந்தப்பெண். அருகில் அவள் தாய், அவள்தான் அரற்றியிருக்கவேண்டும்.
என்னைக் கண்டதும் சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தவாறே எழுந்து வந்தாள் அவள். 'வாம்மாலு} உள்ளை வா' என்ற குரலில் தொனித்த வேதனை என்னை நெருடியது. 'என்னம்மா என்ன பிரச்சினை' என்றவாறே கதிரையில் அமர்ந்தேன்.
மீண்டும் விசும்பத்தொடங்கியவள் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே 'இந்த வீட்டிலை நடக்கிறது எந்த வீட்டிலையாவது நடக்குமே பிள்ளை. ஒவ வொரு வீட்டிலயும் குழந்தை பிறக்கிறதெண்டா எவ வளவு சந்தோசம். அதுவும் முதல் குழந்தையென்றா சொல்லத் தேவையில்லை. ஆனா இந்த வீட்டிலைலு}' என்றவள் திரும்பவும் அழத்தொடங்கினாள். உள்ளே மகளும் விசும்பும் ஒலிகேட்டது. அழுகையில் வேதனையைத் தீர்க்கட்டுமென எண்ணி மௌனமாக இருந்தேன். அழுது ஓய்ந்தவள் 'பிள்ளைப் பெத்தவள் சாப்பிட வீட்டிலை ஒண்டுமில்லை. இரண்டு கிழமையா முருங்கைக்காயும் வெறும் சரக்குத் தண்ணியும்தான் பிள்ளை சாப்பாடு. இதைச் சாப்பிட்டா நல்லாப் பால் வருமே?'
'ஏனம்மா ஏதாவது காசுக் கஸ்டமே' என்றேன். 'அப்பிடியெண்டாக்கூட கடவுள்விட்ட வழியென்று இருக்கலாம் பிள்ளை. ஆனால், சுளையா ஐயாயிரம் சம்பளம் எடுக்கிற வீட்டிலை என்ரை பிள்ளைக்குச் சாப்பிட ஒன்றுமில்லை'
'கடை தெருவுக்குப் போக ஆளில்லாமலு}.' மெல்ல இழுத்தேன். 'வெளியிலை சொன்னாவெட்கக்கேடு. வெறும் கஞ்சத்தனம்தானம்மா, முட்டையோ மீனோ கண்ணிலையே காட்டேல்லை. வெறும் சரக்குத்தண்ணியோட உடம்பு எப்படித்தேறும்?' நான் ஏற்கனவே அறிந்தேயிருந்த இவ விடயத்தின் உண்மைத்தன்மை, விசும்பல்களால் உரமாய் நெஞ்சில் அறைய கையிலிருந்த பொருட்களைத் திண்ணையில் வைத்துவிட்டு 'பிறகு வாறனம்மா' என வெளிநடந்தேன்.
இப்படியொரு கொடுமையா? கட்டிய மனைவியின் வயிற்றில் அடிக்கும் அளவு ஆதிக்க உணர்வா அந்த ஆணிடம்? கஞ்சியோ கூழோ பகிர்ந்தருந்தி மகிழ்ந்திருக்க வேண்டிய மணவாழ்க்கையில் உணவினாலேயே பெண்ணை வஞ்சிக்கும் நம்புதற்கரிய கொடுமையா?
தன் கையில் பொருளாதாரப் பலமின்றி, தன் ஒருவேளை உணவையே கட்டுப்படுத்தும் கணவனிடம் கையேந்த மனமின்றி மனமும் உடலும் வேதனையில் நொந்துலு} படித்திருந்தால்? வேலை வாய்ப்புப் பெற்றிருந்தால்? திருமணமே செய்யாதிருந்தால்? எனும் கேள்விக்கணைகளில் காலத்தைக் கடத்தி, பெண்ணே! இன்றும் இன்னும் இப்படியா?

தமிழீழ மண்ணில் இருந்து தரணிக்கோர் செய்தி -அர்த்தநாரி

தன்னைச்சுற்றி மிகமிகஇறுக்கமான வேலிகளைப் போட்டிருந்தவளை சீருடை தரிக்க வைத்து, ஆயுதம் ஏந்தி களத்தில் எதிரியைச் சந்திக்க வைத்து,வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என்பதை செயலுருப்படுத்திய தேச விடுதலைப் போராட்டம், பெண்கள் விடுதலையை நோக்கிய தனித்துவமான பாதையைத் திறந்துவிட்டிருக்கின்றது. இத்தனித்துவப் போக்கை உலகிற்கு உணர்த்தவென இந்த மண்ணில் கொண்டாடும் மாலதி தினம், தன்னம்பிக்கை மிக்க, தனித்து தீர்மானம் எடுக்கும் ஆற்றல் உள்ள, குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் தற்துணிவுள்ள பெண்ணை உருவாக்கிய தேசவிடுதலைப் போரின் ஒரு குறியீடேயென்றால், இக்குறியீடு இவ வுலகிற்குச் சொல்லுகின்ற, இனிச் சொல்லப்போகின்ற செய்திகள், அனைத்துலகப் பெண்கள் தினம் இவ வுலகிற்கு உணர்த்தும் செய்திகளைவிடக் காத்திரம் மிக்கதாக முன்னுதாரணமிக்கதாகஇருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

மானுட நெஞ்சங்களே! மார்ச் 8, இனம், மதம், நிறம், மொழி, கலாச்சாரம், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் பலதரப்பட்ட போதிலும், பெண் என்ற அடையாளத்தால் ஒன்றுபட்டுநிற்கும் பெண்ணினம் ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் சமூகநீதி, சம உரிமை, சமத்துவம் போன்றவற்றிற்காகவும் ஒன்றுதிரண்டு, அகிலம் எங்கனும் குரல்கொடுக்கும் ஒருநாள் இது. உலகின் சரிபாதிக்கு மேற்பட்ட மக்கள் தொகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் உலக உழைப்புச் சக்தியில் மூன்றில் இரண்டு பங்கை தமதாகக் கொண்டிருந்தபோதும் உலக வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை மட்டுமே பெறுபவர்களுமான பெண்கள் தமது உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடவெனத் தீர்மானிக்கப்பட்ட ஒரு நாள். குறைந்த கூலியில் கொள்ளைலாபம் அடிக்கும் நோக்குடன் பெண்களின் உழைப்பைச் சுரண்டிய முதலாளித்துவத்திற்கு எதிராக முதன் முதலில் அணிதிரண்டு பெண்கள் போர்க்கொடி தூக்கிய ஒரு நாள்.


இத்தனை சிறப்பு ஏன்?
பெண்களின் அரசியல் பொருளாதார சமூக சமத்துவத்திற்காகப் போராடுவதை இலக்காகக் கொண்டு 18ம் நூற்றாண்டிலேயே பல பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றி, பெண்ணொடுக்கு முறைக்கெதிராக போராட்டங்கள் நடத்தியமையை வரலாறு தெளிவாக எடுத்தியம்பும்போது மார்ச் 8 மட்டும் இத்தனை சிறப்புடையதாக மாறியதேன் என்ற சந்தேகம் பலருக்கு எழுவது இயல்பு.
ஆணுக்கு ஈடாகப் பெண் உழைத்து, உழைப்பின் பலனைச் சமமாகப் பங்கிட்டு, தமது தலைவனைக் கூட்டாகத் தேர்ந்தெடுத்து வாழ்க்கை நடத்திய சுய ஆளுமை நிலையில் இருந்து ஆடு, மாடு, கோழி போல் சொத்து என்ற நிலைக்குக் கீழிறக்கியது நில பிரபுத்துவ சமூகம். ஆற்றல் வாயில்கள் அனைத்தும் செத்தைக்குள் முடங்கிவிட 'செத்தை மறைவே சொர்க்கம்' எனப் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் உழைப்பில் கொள்ளை இலாபம் அடிக்கும் நோக்குடன் அவளுக்கு விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறிக்கொண்டு பெண் அடிமைத்தனத்திற்கு பெண்விடுதலை என்னும் மூலாம் பூசி அவளை வெளியே வரத் தூண்டியது முதலாளித்துவ சமூகம். நாகாPக உடையும் கேளிக்கை விருந்துகளுமே பெண்விடுதலை என உயர்மட்ட சீமான்களின் சீமாட்டியர் பயிற்றுவிக்கப்பட, சீழுழைப்பும் போட்டியும் நிறைந்த உலகில் வயிற்றுப் பசியைப் போக்க போட்டி போட்டு வேலை தேடுவது எவ வாறு என பெரும்பான்மைப் பெண் சமூகம் பயின்றது. நூற்றாண்டு நூற்றாண்டுகளாக சுயசிந்தனைக்கும் கருத்துத் தெளிவுக்கும் வாய்ப்பின்றி இருந்தவர்கள் விடுதலை என்ற பெயரில் அந்தச் சமயத்தில் தம்முள் கருக்கொண்ட சிந்தனைகளுக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு வசதிகளுக்குமமைய பெண்விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் போக்கு உருவாகத் தொடங்கியது. முதலாளித்துவ சமூகம் ஒன்றில் தனது கணவர் அல்லது தகப்பன் அல்லது சகோதரன் அனுபவித்த அதே நன்மைகளை, அதிகாரத்தை, உரிமைகளைப் பெறுவதையே நோக்காகக் கொண்ட முதலாளித்துவ பெண்ணியவாதிகளினால் வழிநடத்தப்பட்ட பல பெண்விடுதலை அமைப்புக்கள் வெற்றுக் கோசங்களிலும் வேடிக்கைப் பேச்சுக்களிலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் கொடுமைகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி நாளொன்றிற்கு 10 மணிநேர வேலையும் ஆண்களுக்கு இணையான ஊதியமும் கோரி பெண் நெசவுத் தொழிலாளர் 1857ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி தொழிற்சங்க hPதியாக ஒன்றுதிரண்டு உரிமைப் போராட்டத்தில் குதித்த அதிசயம் முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்க மண்ணில் நிகழ்ந்தபோது அது மற்றெல்லா உரிமைப் போராட்டங்களையும்விட முக்கியத்துவம் பெற்றதில் வியப்பேதும் இல்லை.


சன்னமாய்த் தெரிந்த ஒளிக்கீற்று
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்து 1910ம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கொப்பன்நேகனில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக சோசலிச பெண்கள் மாநாட்டில்தான் மார்ச் 8ஐ அனைத்துலக பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை முன்வைத்தவர்களில் இரு பெண்கள் முக்கியமானவர்கள். ஒருவர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும் பெண்களுக்கு வாக்குரிமை பெற்றுத்தருவதில் முன்னின்று பாடுபட்டவருமான கிளாரா செட்கின் அம்மையார். இன்னொருவர் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த ரஸ்யாவை கம்யூனிசப் பாதைக்கு இட்டுச் செல்லும் கடினபணியில், மாவீரன் லெனினுக்கு தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவரும், பெண்விடுதலை என்ற பெரும் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருமான ரஸ்யப் பெண் இராஜதந்திரி அலெக்சாண்டிரா கொலன்ராமி என்பவர்.


பெண் தொழிலாளரைச் சுரண்டுவதன் மூலம் உருவாக்கப்பட்ட உலகில், வசதியாகவும், பாதுகாப்பாகவும் தமது வழியில் முன்னேற உதவும் வழிமுறைகளை நாடும் பெண்ணியவாதிகளின் பாதை வேறு. பிறப்பால் அல்லது செல்வநிலையால் பெறப்படும் சலுகைகளை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்ட பெண் தொழிலாளர்களின் பாதை வேறு என்று இற்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னரே குரல்கொடுத்து, ரஸ்யப் பெண் தொழிலாளருக்கு உரிமைகள் பெற்றுக்கொடுப்பதில் வெற்றிகண்டவர் கொலன்ரோய். கருத்துத் தெளிவு, அதிகாரம், தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அத்தனையும் வாய்ந்த இத்தகைய பெண்களின் ஆதரவில் மார்ச் 8 அனைத்துலகப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது ஒடுக்குமுறைகளுக்குட்பட்ட பெண்ணியத்தின் விடிவு கண்ணுக்கெட்டிய தூரமாகத் தோன்றியதில் வியப்பேதும் இல்லை.


சூட்டோடு, சூடாக 1918ஆம் ஆண்டு ஜப்பான் துறைமுகப் பெண் தொழிலாளர்கள் கப்பலில் இருந்து அரிசியை இறக்க மறுத்து, செய்த வேலைநிறுத்தம் 'அரிசிக்கலகம்' எனப் புகழ்பெற்றதுடன் நீண்ட போராட்டமாகி ஜப்பானில் அரசியல் நெருக்கடியையே தோற்றுவித்ததாகும். அதைத் தொடர்ந்து 1922இல் சீனாவில் 70 பட்டுத் தொழிற்சாலைகளில் வேலைபார்த்த ஆயிரக்கணக்கான பெண்கள் முதன்முதலாக ஊதிய உயர்வு கேட்டு மேற்கொண்ட வேலைநிறுத்தம் சீன சமூகத்தையே உலுக்கியதாகும். பெண் ஒடுக்குமுறை அதிகம் மிக்க இத்தகைய நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் பெண்விடுதலை நோக்கிய பாதையை சீரியதொன்றாகத் தோன்றச்செய்தன.

ஆட்டம் கண்ட அடித்தளம்
முதலாளித்துவம் போட்ட அடிக்கட்டுமானம் அவ வளவு லேசாக அசைக்கப்படக் கூடியதல்ல என்பது சொற்ப காலத்துள்ளேயே தெளிவாகியது. அரிசிக்கலகம் உலுப்பிய இரு தசாப்தங்களுக்குள்ளேயே தனது பலத்தையும் பலாத்காரத்தையும் பிரயோகித்து ஒரு லட்சம் சீன-கொரியப் பெண்களை தனது இராணுவத்தின் பாலியல் வேட்கைகளைத் தீர்க்கவென ஜப்பான் 'உல்லாசப் பெண்டிர்' ஆக்கியபோது உலகம் வாய்மூடி மௌனம் காத்தது. பெண்ணொடுக்குமுறைகளைக் களைந்தெறிய கூடுதலானவரை பாடுபட்டு வெற்றியும் கண்ட கம்யூனிச சீனா இப்போது அமெரிக்க மயமாக்கத்தின் கீழ் தன்வயமிழந்துகொண்டு போவதையும், இலைமறை காயாக இருந்த மனைவியரைத் தாக்குதல், மணமகள் விற்பனை, பாதங்கட்டுதல் போன்றன அதிகளவில் தலையெடுப்பதனையும் பார்க்கும்போது அநீதிக்கெதிராகக் குரல் கொடுக்கும் மனோபாவம்கூட 'மழைக்கு முளைக்கும் காளான்' போல குறுகிய ஆயுட்காலம் கொண்டதோ என்னும் எண்ணப்பாட்டையே உருவாக்கியுள்ளது.
பெண்களின் உரிமையைப் பேசவென்று எத்தனை மாநாடுகள், ஊர்வலங்கள், விவாதங்கள், ஆய்வுப்பட்டறைகள், எழுச்சி தினங்களை இவ வுலகம் சந்தித்திருக்கின்றது. தனிப்பட்ட hPதியிலும் நிறுவன மயப்பட்டும் எத்தனை உரிமைப் போராட்டங்களை நடத்தியபோதும் பெண்விடுதலை பற்றிய தெளிவான கருதுகோள் இன்மை, பெண்ணிடமிருந்து கருக்கொள்ளும் பெண்ணிய சிந்தனைகள்கூட அவள் வாழும் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார சூழலின் தாக்கத்திற்குட்பட்டு நிற்றல் போன்றவற்றின் காரணமாக பெண்ணுரிமைப் போராட்டங்கள் ஒருபுறம், உள்ளாடை எரிப்பு, கட்டற்ற பாலுறவு, தன்னினச்சேர்க்கை என்று புதுப்புது வடிவங்களை எடுத்துக் கொண்டிருப்பதையும் மறுபுறம் போராடும் அறிவோ வலுவோ இன்றி பட்டினி, அறியாமைகளை பிரதான பண்பாகக் கொண்ட கூலித்தொழிலாளர் கீழுழைப்பு, கூடிய வேலை நேரம், பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதையுமே காணக்கூடியதாக இருக்கின்றது. பெண்ணுரிமைகள் பற்றிக் குரல் எழும்ப எழும்ப பெண்ணுக்கு எதிரான வன்முறை வடிவங்களும் உச்சநிலையடைகின்றன.
அனைத்துலகப் பெண்கள் தினம் வெறும் அடையாளமாகிப்போய் தசாப்தங்கள் கடந்துவிட்ட ஒருநிலையில் தமிழீழப் பெண்கள் தொடர்பாக ஏற்பட்டுவரும் புதியதோர் மாற்றத்தை உலக சமூகத்திற்கு அறியத்தரவேண்டும் என்ற ஒரு உந்துணர்வு தோன்றுவது தவிர்க்கமுடியாதது.


வேரும் வேரடி மண்ணும்
இந்த மண்ணில் பெண்விடுதலை நோக்கிய பாதையொன்று திட்டமிட்டதொன்றாகச் சீரியதாகத் தெரிகின்றது. 'பொருளுலகத்தை எந்தெந்த வடிவில் சீரமைத்தாலும் ஆண்களின் மனவுலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமில்லை' என்று கூறும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்கும் ஒரு பெண்கள் சமூகத்தின் மத்தியில்தான் இந்த மாற்றம் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது.
அடக்குமுறையின் உச்சக்கட்டத்தில் அணிதிரண்டு உரிமைப்போராட்டம் நடத்தும் தொழிலாளி வர்க்கப் பெண்ணோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகூடிய சலுகைகளுக்காக கொடியுயர்த்தும் மேல்த்தட்டு வர்க்கப்பெண்ணோ அல்ல தமிழீழப் பெண், 'எத்தனைதான் எண்ணுக்கணக்கற்ற தகுதிகளைப் பெற்றிருக்கும் பெண்ணும் திருமணத்தின் மூலம் ஆணுடன் இணைக்கப்படும்போது அது சமுத்திரத்தில் கலந்த ஆறு போன்றது' எனக்கூறும் மனுநீதி சாத்திரம் இன்றும் ஆழமாய் வேரோடி இருக்கும் சமூகத்தின் வார்ப்பு இவள். கல்விச் சுதந்திரமோ, திறமையின் அடிப்படையில் தொழில் பார்க்கும் சுதந்திரமோ மறுக்கப்படாதபோதும் தகப்பன், சகோதரன், கணவன், பிள்ளை என்று படிநிலையில் தங்கிவாழப் பயிற்றுவிக்கப்பட்டவள். பட்டினி கிடந்தாலும் நல்லநாள் பெருநாளில் நாலுபேர் 'நாக்கு வளைக்காம' நல்லதாய் உடுத்துக்கொண்டு நிற்க வேண்டும். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டியாவது நகைநட்டுச் சேர்க்க வேண்டும். குடிகாரனோ கூத்தியர் வீட்டுக்குப் போறவனோ, இருப்பதை வித்துச் சுட்டாவது பிள்ளையைக் கரைசேர்க்க வேண்டும். ஆழமாய்ப் படித்து அதிகமாய் உழைத்தாலும் அடியுதை வாங்கிக்கொண்டு கணவனுடனேயே இருக்கவேண்டும் என்ற சிந்தனைகள் ஆழமாய்ப் புரையோடிப் போயிருக்கும் தமிழீழப் பெண்களில் ஏற்படும் மாற்றம் சாதாரணமாக நோக்கப்படக்கூடியதல்ல. அறியாமையில் உழல்பவளை அறிவுசார் நடவடிக்கையில் மாற்ற முனையலாம். அதிகம் படித்துவிட்டும் தன்னைச்சுற்றி தானே விலங்குகளைப் போட்டுக் கொள்பவளை கருத்தரங்குகளோ கண்டனப் பேரணிகளோ மாற்றுவதென்பது இலேசானதொன்றல்ல, போதனைகள் தமிழீழப் பெண்களிடம் எடுபடுவது குறைவு.


பாதை புதியது
தமிழீழ மண்ணில் மாநாடுகள் கூட்டப்படாமலேயே தமிழீழப் பெண்ணுக்கான விடுதலைப் பாதையை காலத்தின் கட்டாயம் திறந்து வைத்திருக்கின்றது. சொந்த மண்ணில் இருப்பை நிச்சயப்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் உள்வாங்கப்பட வேண்டிய தேவையொன்றினூடாகவே பெண்ணைச் சுற்றியுள்ள தளைகள் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிகின்றது. கண்ணுக்குத் தெரியும் மாற்றங்கள் ஆக்கபூர்வமானதாக, நம்பிக்கையூட்டுவனவாக தோற்றமளிக்கின்றன.
அதிகரித்து வரும் பெண்களின் கல்விநிலை, அழகான படித்த வேலைபார்க்கும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பதனால் அத்தகைய ஆண்களுக்கான தேடல் தன்னிச்சையாகவே விடுபட்டுக் கொண்டு போவது கண்கூடாகத் தெரிகின்றது. காதலித்தலோ, காதலித்து கைவிடப்படுதலோ தனித்து பெண்ணின் குற்றமல்ல என்ற மனோபாவம் ஆண்களிடம் உருவாவதன் காரணமாக திருமணத்திற்கு முந்திய காதல் உறவுகள் பரஸ்பரம் தெளிவு படுத்தப்பட்டு திருமண பந்தத்தில் இணையும் போக்கு மேலோங்கி வருகின்றது. காதலித்து உறவாடிவிட்டு கைகழுவ முனையும் ஆணுக்கு தனது எதிர்கால வாழ்வையும் துச்சமாக மதித்து தண்டனை பெற்றுக்கொடுக்க விளையும் மனப்போக்கும், தனக்கு இழைக்கப்பட்ட பால்சார் கொடுமைகளை சமூக மானத்திற்குப் பயந்து மறைத்து வைக்கும் நிலையில் இருந்து மாறி அதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி குற்றவாளியை நீதியின் முன் நிறுத்தும் தன்மையும் போராடும் சமூகத்தின் புதியதோர் மாற்றமாகவே தெரிகின்றது. பெண்மையின் இலக்கணங்களான இரக்கசுபாவம், சகிப்புத் தன்மை, சமூக உறவு பேணல் என்பன பெண்கள் ஆயுதம் ஏந்துவதால் மாற்றமடைகின்றது என பதறித்துடிக்கும் கொழும்பு வாழ் பெண்ணியவாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் மிகவும் சிறப்புற இயங்குகின்றன. ஆதரவற்ற பெண்களுக்கென பெண்களே முன்னின்று நடத்தும் பெண்கள் நலன் பேணும் அமைப்புக்கள், 'இருப்புக் கொள்ளாமல் வெளிக்கிட்டதுகள்' என்று சமூகத்தால் சாடப்பட்டவர்களே அச்சமூகத்தின் முன் மதிப்புமிக்க போராளிகளாக, போராளி மனைவியராக, போராளித் தாயாராக உலாவரும் போக்கும் இன்று கண்ணுக்குத் தெரியும் மாற்றங்கள். அனைத்துலகுக்கும் மேலாக உடலுறுப்புக்களின் பெரும்பகுதி இயங்காத நிலையிலும்கூட தான் விரும்பியவனை அல்லது விரும்பியவளை மணம் செய்து அவனுக்கு அல்லது அவளுக்கு தானே எல்லாமுமாகி தோள்கொடுக்கும் மாற்றம் என்பது இம்மண்ணுக்கே உரித்தான மானுடத்தின் போராட்ட வழிவந்த புதிய பிரசவங்கள் என்றுதான் கூறவேண்டும்.
தன்னைச்சுற்றி மிகமிக இறுக்கமான வேலிகளைப் போட்டிருந்தவளை சீருடை தரிக்க வைத்து, ஆயுதம் ஏந்தி களத்தில் எதிரியைச் சந்திக்க வைத்து, வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆணுக்குப்பெண் சளைத்தவள் இல்லை என்பதை செயலுருப்படுத்திய தேச விடுதலைப் போராட்டம், பெண்கள் விடுதலையை நோக்கிய தனித்துவமான பாதையைத் திறந்து விட்டிருக்கின்றது. இத்தனித்துவப் போக்கை உலகிற்கு உணர்த்தவென இந்த மண்ணில் கொண்டாடும் மாலதி தினம் தன்னம்பிக்கை மிக்க, தனித்து தீர்மானம் எடுக்கும் ஆற்றல் உள்ள, குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் தற்துணிவுள்ள பெண்ணை உருவாக்கிய தேசவிடுதலைப் போரின் ஒரு குறியீடேயென்றால், இக்குறியீடு இவ வுலகிற்குச் சொல்லுகின்ற, இனிச் சொல்லப்போகின்ற செய்திகள், அனைத்துலகப் பெண்கள் தினம் இவ வுலகிற்கு உணர்த்தும் செய்திகளைவிடக் காத்திரம் மிக்கதாக முன்னுதாரணம் மிக்கதாக இருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.